புதன், 24 ஜூன், 2015

குழந்தை கொடுப்பது மனிதனா? கடவுளா?

குழந்தை கொடுப்பது மனிதனா? கடவுளா?
- பேராசிரியர் டாக்டர் ப.காளிமுத்து எம்.ஏ., பி.எச்.டி

ஆண்_பெண் உடல் உறவு இல்லாமலே மருத்துவர்கள் செயற்கை முறையில் குழந்தைகளை உருவாக்கும் காலம் மிக விரைவில் வரும். சோதனைக் குழாய்களில் விந்துக்களைச் செலுத்தி, கருத்தரிப்பு நிகழ்ந்த பிறகு அதனைப் பெண்ணின் கருப்பையில் வைத்துக் குழந்தையை வளர்க்கும் காலம் வருங்காலம்! பிள்ளைப் பேற்றுக்கு ஆண்_பெண் சேர்க்கை என்பதுகூட நீக்கப்படலாம். நல்ல உடற்கட்டும் புதிய நுட்பமும், அழகும், உடல் வலிமையும் உள்ள குடிமக்கள் ஏற்படும்படியாக, பொலிகாளைகளைப் போல் தெரிந்தெடுத்து, மணி போன்ற பொலிமக்கள் வளர்க்கப்பட்டு அவர்களது வீரியத்தை ஊசிமூலம் பெண்களின் கருப்பைகளுக்குள் செலுத்தி நல்ல குழந்தைகள் பிறக்கச் செய்யப்படும். ஆண்_பெண் சேர்க்கைக்கும் குழந்தை பெறுவதற்கும் சம்பந்தமில்லாமல் செய்யப்பட்டுவிடும்.
1943இல் தந்தை பெரியார் இக்கருத்துகளை வெளியிட்டபோது பலர் அதிர்ச்சியடைந்து போனார்கள். மயங்கி விழுந்தவர்களும் உண்டு. ஆனால் மருத்துவ அறிவியல் தந்தை பெரியார் என்னும் இயற்கை அறிவியலாளரின் திசையிலேயே பயணித்தது. 1978இல் பிரிட்டனில் முதல் சோதனைக் குழாய் குழந்தை பிறந்தது. அதன் பெயர் லூசி பிரவுன். அதன் பின்னர் சில ஆண்டுகளில் கல்கத்தாவில் சோதனைக் குழாய் குழந்தை பிறந்தது. இன்று உலகில் எல்லா நாடுகளிலும் இந்த முறை மிக எளிமையாகிவிட்டது.
தென்னகத்தைப் பொருத்தவரையில், அரச மரத்தைச் சுற்றிவந்தால், கோவில்களில் சின்னச் சின்ன தொட்டில்களைக் கட்டித் தொங்க விட்டால், விரதமிருந்தால் குழந்தை பிறக்கும் என்னும் மூடநம்பிக்கை ஆழமாக வேரூன்றியிருந்தது. அதைவிட, சாமியார்கள் பிள்ளைவரம் கொடுக்கும் ஒரு கொள்ளை நோய் பரவியிருந்தது. சாமியார்களிடமும் ஆசிரமங்களுக்கும், மடாலயங்களுக்கும் சென்று மக்கள் மானத்தை இழந்துவரும் தொடர்கதை இன்றுவரை நீடிக்கிறது. இந்த நிலையில், தந்தை பெரியார் இத்தகைய மூடநம்பிக்கைகளை எதிர்த்து முழக்கமிட்டு மக்களுக்கு விழிப்புணர்ச்சியூட்டினார்.
மலட்டுத்தன்மை: மலட்டுத்தன்மை என்பதைக் காரணமாகக் காட்டி பல பெண்கள், ஆண்களால் புறக்கணிக்கப் பட்டார்கள். ஆனால் மலட்டுத்தன்மை என்பது ஆண்களிடமும் உண்டு என்னும் திடுக்கிடத்தக்க உண்மை வெளியானவுடன் பெண்கள் கொஞ்சம் விழிப்புணர்வு பெற்றார்கள். அச்சம் அகன்று துணிவு பிறந்தது. கணவன்_மனைவி இருவருமே இப்போது மருத்துவரை நாடித் தம் குறைபாடுகளை நீக்கிக் குழந்தை பெற்றுக் கொள்கிறார்கள். ஆக மலட்டுத்தன்மை என்பது இப்போது பொய்யாக்கப்பட்டு பெண்களை மட்டுமே குறிப்பிட்டுக் கூறப்பட்டு வந்த மலடி என்ற சொல் (ஆண்களைக் குறிக்கும் இதற்கு நிகரான சொல் இல்லை) தன் இறுதி நாட்களை எண்ணிக் கொண்டிருக்கிறது. இந்த மலடி என்ற சொல்லைப் பயன்படுத்தி ஓர் ஆண் பல பெண்களைத் திருமணம் செய்துகொள்ளும் பழக்கமும் இப்போது காண்பதற்கு அரிதாகும்.
சோதனைக் குழாய் குழந்தை உருவாக்கம் பற்றித் தந்தை பெரியார் 1938இல் தம் புரட்சிக் கருத்துகளை வெளியிட்டபோது, இது கடவுள் படைப்புக்கு எதிரான கருத்து; நாத்திகர்களின் கோணல் பார்வை என்று தந்தை பெரியாரைச் சாடினார்கள் மதவாதிகள்!
இன்று மருத்துவ அறிவியல் வியத்தகு வளர்ச்சியை அடைந்துள்ளது. சோதனைக் குழாய் மூலம் குழந்தை வளர்ப்பு என்பது பழைய முறையாகிவிட்டது! பெண்ணின் கரு முட்டைகளை அதிகம் உருவாக்கி (என்சைம்ஸ் வழியாக) அதனை எடுத்து ஆணின் உயிரணுக்களோடு சோதனைக் குழாயில் அய்ந்தாறு நாட்கள் வளர்த்து அதன்பின் அதனைத் தாயின் கருப்பையில் வைத்து வளர்ப்பது சோதனைக் குழாய் (Test Tube Methode) முறையாகும். இம்முறையிலிருந்து படிநிலை வளர்ச்சி பெற்று இப்போது கேப்சுயூல் டெஸ்ட் (Capsule Test) என்னும் மிக நுட்பமான வளர்நிலையை எட்டியுள்ளது.
கேப்சுயூல் டெஸ்ட் (Capsule Test): இந்த முறை மருத்துவம் மிக நுட்பமானது. ஒரு மெல்லிய ஊசி; அந்த ஊசியின் உட்புறம் ஒருவகை வேதிப் பொருள் கலவையால் பூசப்பட்டிருக்கும் (டெஃப்ரான்). இந்த மெல்லிய ஊசியின் மூலமாகப் பெண்ணின் கருமுட்டை காயம் ஏற்படாமல் சேதாரம் இல்லாமல் வெளியே எடுக்கப்படுகிறது. அதனோடு ஆண் உயிரணுவைச் சேர்த்து ஒரு கேப்சுயூலில் வைத்துப் பெண்ணின் பிறப்புறுப்பிலேயே கரு வளர்க்கப்படுகிறது; இதன் பின்னர், தாயின் கருப்பையில் அக்கரு வைக்கப்படுகிறது. தாயின் இயற்கையான வெப்பத்தில் கரு வளர்ந்துவரும். இதற்கு முன்பு சோதனைக் குழாய் முறைக்கு ஆன செலவை விட கேப்சுயூல் முறைக்கு மூன்றில் ஒரு பங்குதான் செலவு!
கேப்சுயூல் முறை மருத்துவத்திற்கான கருவிகள் மேலைநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுவதால் இவற்றின் விலை சற்றுக் கூடுதலாக இருக்கிறது. இவற்றை இங்கேயே உற்பத்தி செய்யும் நிலை வந்துவிட்டால் செலவு மிக மிகக் குறைவாகும். ஏழைகளுக்கு இந்த வாய்ப்பு எளிதில் கிடைக்கும் நல்வாய்ப்பாகிவிடும்.
கேப்சுயூல் முறையில் குழந்தை வெளியே வளர்வதில்லை. அது தாயின் அரவணைப்பில் கருப்பையிலேயே வளர்கின்றது. ஒருமுறை தோல்வி அடைந்துவிட்டால் மறுமுறையும் இதே சோதனையை எளிதில் தொடரலாம். 2011ஆம் ஆண்டு அமெரிக்காவில் இந்தச் சோதனை வெற்றிபெற்றது. இந்தியாவில் _ தமிழகத்தில் தந்தை பெரியார் பிறந்த மண்ணில் ஈரோட்டில் மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் இந்தச் சோதனை வெற்றி பெற்றது.
ஈரோட்டில் 64 வயதுப் பெண்மணிக்கு: ஈரோட்டில் 64 வயதான ஒரு பெண்மணி; பல ஆண்டுகளாகக் குழந்தையில்லாமல் மலடி என்ற பட்டத்தைச் சுமந்து கொண்டு உறவினர்களின் ஓரப் பார்வையால் சொல்லவொண்ணாத் துன்பத்திற்கு ஆளாகி வாழ்ந்து வந்தார். அவருக்கு 45ஆம் வயதில்  மாதவிடாய் நின்றுவிட்டது. இருபது ஆண்டுகளாகச் சர்க்கரை நோய்; இரத்த அழுத்தம் எல்லாம் இருந்தன. கணவருக்கு அகவை 75; அவர் இதய நோயாளி. என்றாலும் அவர்களுக்குக் குழந்தைப் பேறு கிடைக்காதா என்ற கவலை ஒருபுறம் நெஞ்சைத் துளைத்து ஏங்கிக் கொண்டிருந்தார்கள். எல்லா மருத்துவத்தையும் பார்த்துவிட்டார்கள்.
கடைசியில் கேப்சுயூல் முறையையும் பார்த்துவிடலாம் என்று டாக்டர் நிர்மலா சதாசிவத்தை அணுகினார்கள். 64 வயதுப் பெண்ணுக்கு இருந்த தடைகளையெல்லாம் தகர்த்தெறிந்து அவருக்குத் தாய்மைப் பேற்றை நல்கி அவர்கள் இருவரும் இதுவரை பெற்றிராத மகிழ்ச்சியைக் கொடுத்தார் டாக்டர் நிர்மலா சதாசிவம். உலகில் இந்த வயதில் எவருக்கும் குழந்தை பிறந்ததாகத் தெரியவில்லை. இந்தியாவில் முதல்முறையாக ஈரோட்டில் இந்த மருத்துவம் மருத்துவத் துறை வரலாற்றில் குறிப்பிடத்தகுந்த வெற்றியைப் பெற்றுள்ளது. இந்தச் சோதனைகளின் மூலவர், தொலை நோக்குச் சிந்தனையாளர், சோதனைக் குழாயில் குழந்தை உருவாகும் என்ற முன் அறிவிப்பை வெளியிட்ட அறிவுலக ஆசான் தந்தை பெரியார் பிறந்த மண்ணில் இந்தச் சாதனை நிகழ்த்தப் பெற்றிருக்கிறது.
டாக்டர் நிர்மலா சதாசிவம் இணையரை அழைத்து பெரியார் மன்றம் பெருமைப்படுத்தியது. பெரியார் உலகத்திற்கு நன்கொடை வழங்கி அய்யாவுக்குத் தங்கள் நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்கள்.
1926 வரையில் மருத்துவக் கல்லூரியில் சேர்வதற்கு சமஸ்கிருதம் தெரிந்திருக்க வேண்டும் என்று இருந்த விதியை தந்தை பெரியார், பனகல் அரசரின் கவனத்திற்குக் கொண்டு சென்று அந்த விதியை அகற்றினார்கள். அதன் பின்புதான் நம்மவர்கள் மருத்துவத்துறையில் நுழைய முடிந்தது! இன்று உலகம் வியக்கத்தக்க சாதனைகளை நம்முடைய மருத்துவர்கள் நிகழ்த்திக் கொண்டிருக்கிறார்கள்!

-உண்மை,16-30 ஜூன்2015

ஞாயிறு, 17 மே, 2015

கண்டுபிடிப்புக்கு உதவும் கருவிகள்


மின்சக்தியை சேமித்து, பின்னர் பயன்படுத்த உதவும் கருவி எது? அக்யுமுலேட்டர் கதிரியக்க பொருட்கள் உள்ளனவா எனக் கண்டுபிடிக்க உதவும் கருவி எது? அட்மாஸ்கோப் மின்னோட்டத்தின் வலிமையை அளக்க உதவும் மின்னளவி எது? அம்மீட்டர் நியூட்ரான்களின் எண்ணிக்கை கூடாமலும், குறையாமலும் ஒரே சீராக வைக்க உதவுவது எது?
அணுக்கரு உலைகள் காற்றின் வேகத்தை அளக்க உதவும் கருவி எது? அனிமோ மீட்டர் ஒலியின் வலிமையை அளக்க பயன்படும் கருவி எது? ஆடியோ மீட்டர் கேட்கும் திறனை அதிகரிக்க உதவும் கருவி எது? ஆடியோ போன் கண்ணின் உட்பாகத்தையும், விழித்திரையையும் சோதிக்கும் கருவி எது?
ஆப்தலாஸ் கோப் ஆகாய விமானம் பூமியிலிருந்து எவ்வளவு அடி உயரத்தில் பறக்கிறது என கண்டறிய உதவும் கருவி எது? ஆல்டிமீட்டர் மின்தாங்கி கட்டிடங்கள் இடியினால் தாக்கப்படாமல் பாதுகாக்கப் பயன்படும் கருவி எது? இடிதாங்கி செயற்கை வெப்பத்தால் முட்டைகளை பொறிக்க செய்யும் கருவி பாக்டீரியா கிருமிகளை வளர்ப்பதற்கும்,
வளர்ச்சி குன்றிப்பிறந்த குழந்தைகளை பாதுகாக்கவும் பயன்படும் கருவி எது? இன்குபேட்டர் விண்வெளியிலிருந்து செய்திகளை செயற்கை கோள் வழியாக அனுப்புவதற்காக பயன்படும் கருவி எது? டெல்ஸ்டார் கடலின் ஆழத்தை அளக்க உதவும் கருவி எது?
பேதோ மீட்டர் அச்சிடப்பட்டவைகளை தரையில் விழச்செய்யும் கருவி எது? எப்பிடாஸ் கோப் புறப்படும் கப்பல்களின் சரியான நேரத்தை காண்பிக்க பயன்படும் கருவி எது? குரோனோ மீட்டர் மூளைகளின் அலைகளை அளக்க பயன்படும் கருவி எது? எலக்ட்ரோ என்சபலோகிராப் உப்புக் கரைசலை அளக்கும் அளவி எது?
சலினோ மீட்டர் சூரியனுடைய உயரத்தையும், அதனை சுற்றியுள்ள கிரகங்களின் உயரத்தையும் அறிய பயன்படும் கருவி எதுசெக்ஸ்டான்ட் தாவர வளர்ச்சியை பதிவு செய்ய பயன்படும் கருவி எது?
கிரஸ்கோகிராப் உடலுறுப்புகளின் அசைவுகளை வரைபடமாக வரைய பயன்படும் கருவி எது? கைமோகிராப் அறைகளில் நிலவும் காற்று அழுத்தத்தை அறிவதற்கு பயன்படும் கருவி எது?
மானோ மீட்டர் வைரஸ்களை அளக்க பயன்படும் கருவி எது? மில்லி மைக்ரான் இரத்த அழுத்தத்தை அறிய உதவும் கருவி எது? ஸ்பைக்மோ மானோ மீட்டர் ஊர்த்திகள் கடந்துள்ள தூரத்தை காண பயன்படும் கருவி எது? ஓடோ மீட்டர் பலவண்ணம் காட்டி குழந்தைகளுக்கு விளையாட்டு கருவியாய் பயன்படுகிற கருவியின் பெயர் என்னகலைடாஸ்கோப்

விரைவில் செயற்கை இலை!
ஹார்வர்ட் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் செயற்கை இலையை உருவாக்குவதில் வெற்றி கண்டிருக்கின்றனர். சூரிய ஒளியை பச்சையம் மூலம் சக்தியாக மாற்றும் தன்மை தாவரங்களில் உள்ள இலைகளில் நடக்கும் விந்தை.
இதை செயற்கை முறையில் உருவாக்கி, சூரிய ஒளியிலிருந்து திரவ எரிபொருளை உருவாக்கலாம் என்று ஹார்வர்டை சேர்ந்த விஞ்ஞானி டேனியல் நோசெராவின் குழுவினர் கண்டறிந் துள்ளனர். சூரிய ஒளி மற்றும் ஒரு பாக்டீரியா ஆகியவற்றின் உதவியுடன் இந்த செயற்கை இலை திரவ எரிபொருளை உருவாக்குகிறது.
இதை பெருமளவில் தயாரிக்க முடிந்தால் பர்சனல் கம்ப்யூட்டர் போல. பர்சனல் எரிபொருள் உற்பத்தி நிலையத்தை வீட்டின் கொல்லைப் புறத்தில் உருவாக்க முடியும். ஆனால், இந்த செயற்கை இலை, சுற்றுச்சூழலுக்கு பங்கம் விளைவிக்காது.

தலை தெறிக்க ஓடும் நட்சத்திரம்
நமது பால்வெளி மண்டலம் கேலக்ஸியை விட்டு வினாடிக்கு 1200 கி.மீ வேகத்தில் பறந்து தலைதெறிக்கும் வேகத்தில் தப்பித்து ஓடுகிற 708 எனும் பெயருள்ள நட்சத்திரத்தை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
வேறு எந்த நட்சத்திரமும் போகாத வேகத்தில் நமது கேலக்ஸியை விட்டு விலகி ஓடுகிற இதன் மர்மத்தை ஆராய்ந்து வருகின்றனர்.


சீனாவில் புதிதாக 43 டைனோசர் முட்டை படிமங்கள் கண்டுபிடிப்பு


சீனாவில் கட்டு மானத்திற்காக பள்ளம் தோண்டும் போது 43 டைனோசர் முட்டை படிமங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. தெற்கு சீனாவின் குவாங்டாங் மாகாணத் தில் உள்ள ஹெயுன் நகரத்தில் கட்டுமான பணிகளுக்காக பள்ளம் தோண்டிய போது டை னோசர் முட்டை படிமங் கள் இருப்பது தெரிய வந்தது.
இதனை அடுத்து தொல்பொருள் ஆய்வாளர்கள் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் 2 மணி நேர முயற்சிக்குப் பின் 43 முட்டை படிமங்களையும் பத்திரமாக மீட்டனர். பின்னர் அனைத்து படிமங்களும் அருங்காட்சியகத்திற்கு கொண்டு செல்லப்பட்டன.
இந்த நகரத்தில் மட்டும் இதுவரை 17 ஆயிரத்திற்கு அதிகமான டைனோசர் முட்டை படிமங்கள் கண்டெடுக்கப் பட்டுள்ளன. இங்கு முதல் முறையாக 1996இல் ஒரு கட்டுமானத்திற்காக நிலத்தை தோண்டிய போது உருண்டை யான சில பொருட்கள் கிடைத்தன. முதலில் அது டைனோசர் முட்டை என தெரியாமல் குழந்தைகள் அதை வைத்து விளையாடிக் கொண்டிருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த அருங்காட்சியகம் உலகிலேயே அதிகமான டைனோசர் முட்டை படிமங்களை வைத்துள்ளது. இங்கு மொத்தமாக 10,008 முட்டைகள் சேமித்து வைக்கப்பட்டுள்ளன. இதற்காக கின்னஸ் சாதனை புத்தகத்திலும் இடம் பிடித்துள்ளது.
-விடுதலை,23.4.15

ஞாயிறு, 11 ஜனவரி, 2015

செயற்கை ரத்தம்

























முழு ஹீமோகுளோபின் சத்துடன் 



செயற்கை ரத்தம் 



கண்டுபிடிப்பு: டில்லி பல்கலை. 



மாணவர்கள் சாதனை


போர்முனைகள், எதிர்பாராத விபத்துகள் மற்றும் தீவிரவாத தாக்குதல்கள், உயிரைக் காக்கும் முக்கிய அறுவை சிகிச்சைகள் ஆகியவற்றின்போது மட்டும்தான் விலை மதிக்க முடியாத ரத்தத்தின் அவசியத் தேவை என்னவென்று நம்மில் பலருக்கு புரிகின்றது.
இன்றைய நிலவரப்படி, அரிய வகை நீங்கலாக சாதாரண வகை ரத்தம் ஒரு யூனிட் சுமார் 500 முதல் 800 ரூபாய்க்கு விற்கப்படுகின்றது. இதற்கு மாற்றாகவும், இயற்கையான மனித ரத்தத்துக்கு இணையாகவும், செயற்கை ரத்தத்தை தயாரிப்பது தொடர்பான ஆராய்ச்சியில் உலகின் பல நாடுகள் ஈடுபட்டுள்ளன. அதில் சில நாடுகள் வெற்றி கண்டும் உள்ளன.
எனினும், அந்த செயற்கை ரத்தத்தில் எல்லாம் இயற்கையான வகையில் சுரக்கும் மனித ரத்தத்தில் உள்ளது போன்ற சமவிகித அளவில் ஹீமோகுளோபின் என்ற உயிர்ச்சத்து இல்லாமல் இருப்பது, இந்த ஆராய்ச்சியைப் பொருத்தவரையில் ஒரு பின்னடைவாக கருதப்படுகின்றது.
இந்நிலையில், டில்லி பல்கலைக்கழகத்தில் உள்ள உயிர்வேதியல் துறை மாணவர்கள் முழு ஹீமோகுளோபின் சத்துடன் செயற்கை ரத்தத்தை கண்டுபிடிக்கும் பெருமுயற்சியில் தற்போது வெற்றி கண்டுள்ளனர். பேராசிரியர் சுமன் குண்டூ தலைமையில் நடைபெற்று வந்த இந்த ஆராய்ச்சியின் வெற்றி பற்றிய தகவல் ஜர்னல் ஆஃப் பயோலாஜிக்கல் கெமிஸ்ட்ரி என்ற சர்வதேச அறிவியல் பருவ இதழில் வெளியிடப்பட்டுள்ளது.
இயற்கையான முறையில் மனித ரத்தத்தில் உறைந்துள்ள ஹீமோகுளோபின், ரத்த சுழற்சி முறையின்போது ஹீமே என்ற உடலுக்கு தீங்கு விளைவிக்கும் வேதிப்பொருளை வெளிப்படுத்தும்.
ஹீமோகுளோபினின் மூலக்கூறில் இருந்து இது வெளியாவதை தடுக்க ஒரு வகை ரசாயன அமிலத்தை செலுத்தி, செயற்கை ரத்தத்தில் இந்த ஹீமோவை கட்டுப்படுத்தும் ''மையோகுளோபின் என்ற புதிய கண்டுபிடிப்பை செலுத்தியதன் விளைவாக, பின்னர் நடத்தப்பட்ட சோதனையின்போது இயற்கையான ரத்தத்தில் உள்ளதைப் போல் அனைத்து சத்துகளும் நிறைந்ததாக அந்த செயற்கை ரத்தம் மாறியது.
அதே வேளையில், ரத்த சுழற்சியின்போது அதிலிருந்து ஹீமேவும் வெளியாகவில்லை. எனவே, இந்த ஆராய்ச்சியை மேலும் மேம்படுத்தி அடுத்த இரண்டு அல்லது மூன்றாண்டுகளில் இயற்கை ரத்தத்துக்கு அசல் மாற்றாக இந்த செயற்கை ரத்தத்தை வர்த்தக ரீதியாகவும், மருத்துவ ரீதியாகவும் பயன்படுத்த முடியும் என்பது தற்போது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது..
வர்த்தக ரீதியாக இந்த செயற்கை ரத்தம் விற்பனைக்கு வரும் வேளையில், தற்போது கொடையாளிகளின் மூலம் பெறப்படும் ரத்தத்தின் விலையை விட சுமார் 10 சதவீதம் குறைவான விலையில் இது கிடைக்கும். மேலும், தற்போது விற்பனையாகிவரும் இயற்கை ரத்தத்தை அதிகபட்சமாக 50 நாட்கள் வரைதான் கெட்டுப் போகாமல் பாதுகாத்து வைத்திருக்க முடியும்.
ஆனால், இந்த செயற்கை ரத்தத்தை மூன்றாண்டு காலம் வரை பாதுகாப்பாக வைத்து பயன்படுத்தலாம். எந்த இடத்துக்கு வேண்டுமானாலும் எளிதில் கொண்டுசென்று கையிருப்பாக வைத்துக் கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

பூமியைப் போன்ற எட்டு கோள்கள் கண்டுபிடிப்பு
பூமியைப் போன்ற தன்மைகள் கொண்ட எட்டு கோள்களைத் தாங்கள் அடையாளம் கண்டிருப்பதாக அமெரிக்க விண்ணியலாளர்கள் கூறுகின்றனர்.
நாசா நிறுவனத்தின் கெப்லெர் விண்வெளி தொலை நோக்கியைக் கொண்டு இவை கண்டுபிடிக்கப்பட்டன.
இந்த கோள்கள் பூமியைப் போலவே பாறைகள் மிகுந்திருக்கக்கூடும் என்றும், நீர் நிரம்பிய கடல்கள் மற்றும் உயிரினங்கள் வாழ்வதற்குரிய பிற விஷயங்களைக் கொண்டிருக்கக்கூடும் என்றும் அவர்கள் கூறுகின்றனர்.
ஆனால், இந்தக் கோள்கள் பூமியைவிட இரண்டு மடங்குக்கும் மேல் குறைவான அளவுள்ளவை, அவை மிக அதிக வெப்பமோ அல்லது மிகக் குளிரான வெப்பநிலையோ இல்லாதவை என்று விஞ்ஞானிகள் கூறினர். ஆனால் இந்த கோள்களில் ஏதாவது ஒன்றாவது வாழ்வதற்கு உரிய இடமாக இருக்குமா என்று அவர்களால் சொல்ல முடியவில்லை. இவைகள் நம்பிக்கையளிக்கும் இடங்கள் என்று மட்டும் கூறினர்.
ஆனாலும், இந்த கோள்களுக்கு மனிதர்களால் விரைவில் சென்றுவிட முடியாது. ஏனென்றால் அவை பல நூற்றுக்கணக்கான ஒளி ஆண்டுகள் தொலைவில் இருக்கின்றன. ஹார்வர்ட் ஸ்மித்சோனியன் விண்வெளி பவுதிக மய்யத்தைச் சேர்ந்த இந்த ஆராய்ச்சியாளர்கள் தங்களது இந்த முடிவுகளை வாஷிங்டனில் நடந்த அமெரிக்க விண்ணியல் கழகத்தின் ஆண்டுக் கூட்டத்தில் சமர்ப்பித்தனர்.
விடுதலை,8.1.15

ஒளி, காற்று, நீரில்லாமலும் வாழும் நுண்ணுயிர்கள்













டலுக்கடியில் மிக ஆழத்தில் துளையிட்டு ஆராய்ச்சி செய்யும் முயற்சியில் ஈடுபட்ட 
விஞ்ஞானிகள், இது போன்ற மிக கடுமையான சூழ்நிலைகளில் வாழும் மிக நுண்ணிய 
உயிரினங்கள் பற்றி புதிய பார்வைகள் தங்களுக்கு கிடைத்திருப்பதாகக் கூறுகிறார்கள்.
ஒரு கல நுண்ணுயிர்கள்
பசிபிக் பெருங்கடலில், ஜப்பான் கடற்கரைக்கு அப்பால், சுமார் 2,000 மீட்டர்களுக்கும் மேலான ஆழத்தில் துளையிட்டு விஞ்ஞானிகள் ஆராய்ந்தபோது இந்த ஒற்றை செல் நுண்ணுயிர்களை (மைக்ரோப்கள்) கண்டறிந்தனர்.
இந்த நுண்ணுயிரினங்கள்,ஒளி, பிராண வாயு போன்றவை இல்லாத, தண்ணீரும் ஏறக்குறைய இல்லாத மிகக் கடுமையான சூழ்நிலைகளிலும் உயிர்வாழ முடிகிறது என்று விஞ்ஞானிகள் கூறினர்.
பிரபஞ்சத்தில் இதேபோல வேறு கடுமையான சூழ்நிலைகளிலும் உயிரினங்கள் வாழக்கூடும் என்பதை இது சுட்டிக்காட்டலாம் என்று வல்லுநர்கள் கூறுகிறார்கள்.
சர்வதேச கடல் கண்டுபிடிப்பு திட்டம் (International Ocean Discovery Program) என்ற அமைப்பினால் நடத்தப்பட்ட இந்த ஆராய்ச்சி பல அரிய தகவல்களைத் தந்திருக்கிறது.
துளையிடும் கருவி
இந்த ஒற்றை செல் உயிரிகள் , கலோரிகள் குறைவான, ஹைட்ரோகார்பன் பொருட்களை உண்டு உயிர்வாழ்கின்றன. அவைகளுக்கு மிகவும் குறைவான வளர்சிதை மாற்றம் அதாவது மெட்டபோலிசம் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இந்த முடிவுகள் அமெரிக்க புவிபௌதிக ஒன்றியத்தின் (America Geophysical Union ) மாநாடு ஒன்றில் வைக்கப்பட்டு விவாதிக்கப்பட்டன. நாங்கள் எப்போதும் புதிய உயிரினங்களைக் கண்டுபிடிக்க முயல்கிறோம்.
அப்படிக் கண்டுபிடிக்கும் போதெல்லாம்,அவைகள் என்ன செய்ய முடியும் என்பதைக் கண்டறிவது எங்களுக்கு ஒரு வியப்பைத் தரும் விஷயமாகவே இருந்துவருகிறது என்கிறார் இந்த ஆராய்ச்சிக்குழுவில் அங்கம் வகித்த கலிபோர்னியா தொழில்நுட்பக்கழகத்தின் எலிசபத் ட்ரெம்பார்ட் ரெய்ச்சர்ட்
சிக்யு என்ற கப்பலிலிருந்து கடல் அலைகளுக்கடியில் சுமார் 1000 மீட்டர் ஆழத்தில் நிறுத்தப்பட்ட இந்த ஆழ்துளை இயந்திரம், அதன் கீழே கடல் தரைப்பரப்பிற்கும் கீழ் சுமார் 2,400 மீட்டர் தூரம் வரை துளைத்தெடுத்து, அந்த சூழ்நிலையில் இருக்கும் நிலக்கரிப் படுகைக்குள்ளிருந்து மாதிரிகளைக் கொண்டுவந்ததாம்.
இந்த மாதிரிகளை ஆராய்ந்து பார்த்த விஞ்ஞானிகள் அதில் இருக்கும் நுண்ணுயிர்கள் எப்படி இந்த ஆழத்தில் உயிர்வாழ்கின்றன அவை எந்த மாதிரியான உணவுப் பொருட்களை உண்டு வாழ்கின்றன என்பதைக் கண்டறிய தொடர்ச்சியான சில பரிசோதனைகளைச் செய்தனர்.
இவை கடல் தரைப்பரப்புக்கடியில் இருக்கும் நிலக்கரிப்படுகையில் வாழ்வதால், நிலக்கரியில் இருந்து கிடைக்கும் மீத்தேன் போன்ற ஹைட்ரோகார்பன் துகள்களை அந்த உயிரினங்களுக்கு ஊட்டிப் பார்த்த விஞ்ஞானிகள் அவை உண்மையில் அந்தத் துகள்களை உண்பதை உறுதி செய்தனர்.
இந்த ஆராய்ச்சியில் இந்த உயிரினங்கள் வாழ்க்கையை மிகவும் மெதுவாக வாழ்வதை, அதாவது மிக குறைந்த உணவை உட்கொண்டு, அதையும் மெதுவாக செரிமானம் செய்து கொண்டு வாழ்வதை, விஞ்ஞானிகள் கண்டறிந்தனர். இதுதான் அது போன்ற கடுமையான சூழ்நிலைகளில் வாழ ஒரு வழியாக இருக்கலாம்.

வலுவிழந்து வரும் எச்அய்வி வைரஸ்
எய்ட்ஸ் நோயைத்தோற்றுவிக்கும் எச்அய்வி வைரஸ் தனது தீவிரத்தன்மையை படிப்படியாக இழந்துவருவதாக ஆக்ஸ் போர்ட் பல்கலைக்கழக ஆய்வு ஒன்று தெரிவித்திருக்கிறது.
இதன்காரணமாக, எச்அய்வி வைரஸின் தொற்றும் தன்மை குறைவதோடு, மனிதர்களின் உடலுக்குள் எச்அய்வி வைரஸ் சென்றபிறகு அது மனித உடலைத்தாக்கி முழுமையான எய்ட்ஸ் நோயாக பரிமாணம் எடுப்பதற்குத் தேவையான கால அளவும் அதிகரிப்பதாகவும் இந்த ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
எச்அய்வி வைரஸானது மனித உடலில் புகுந்து மனித உடலின் செல்களுக்குள் புகுந்து அங்கே பல்கிப்பெருகும்போது, மனித உடலின் நோய் எதிர்ப்பணுக்களின் கண்களில் படாமல் தப்பிக்கும் நோக்கில் பலவித மரபணு மாற்றங்களை மேற்கொள்கிறது. எச்அய்வி வைரஸுக்குள் ஏற்படும் இந்த பரிணாம வளர்ச்சி காரணமாக அதன் தீவிரத்தன்மை கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து வருவதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
பொட்ஸ்வானா மற்றும் தென் ஆப்பிரிக் காவை சேர்ந்த நூற்றுக்கணக்கான பெண்களை ஆராய்ந்தபிறகு தாங்கள் இந்த முடிவுக்கு வந்ததாக ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்த முடிவுகள் ஓரளவு ஊக்கத்தை தந்தாலும், இன்னமும் இந்த வைரஸ் ஒரு குணப்படுத்த முடியாத சவாலாகவே தொடர்வ தாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.
இந்த ஆய்வின் முடிவுகள் இறுதியானவை அல்ல என்றாலும் எச் அய் வி தொற்றைத் தடுப்பதிலும் எயிட்ஸ் நோயை கட்டுப்படுத்துவதிலும் இதன் முடிவுகள் பெருமளவு பயன்படும் என்று தெரிவித்தார் இந்தியாவின் தேசிய தொற்றுநோய் தடுப்பு மய்யத்தின் தொற்றுநோய் புலனாய்வு அதிகாரி மருத்துவர்கள்
விடுதலை,25.12.14

மோதலில் தோன்றிய நிலா


பூமி உருவான சமயத்தில் அதன் மீது வேறொரு கிரகம் மோதிய பின்னர் பூமியைச் சுற்றி உருவான கோளம்தான் நிலா என்ற அறிவியல் கோட்பாட்டுக்கு ஆதரவான ஒரு ஆதாரம் கிடைத்திருக்கிறது. நாற்பது ஆண்டுகளுக்கும் முன்பு நிலவுக்குச் சென்றிருந்த விண்வெளி வீரர்கள் எடுத்துவந்த நிலவுப் பாறைகளில் ரசாயன ஆய்வுகளை மேற்கொண்ட ஜெர்மனி விஞ்ஞானிகள் இதனைத் தெரிவிக்கின்றனர்.
450 கோடி ஆண்டுகளுக்கு முன்பாக பூமியின் மீது வேறு ஒரு கிரகம் வந்து பயங்கரமாக மோதியது என்பதும், அப்படி மோதிச் சிதறிய சிதறல்கள்தான் பூமியைச் சுற்றி ஒன்று திரண்டு நிலவு உருவானது என்பதும்தான் 1980கள் முதல் விஞ்ஞானிகள் பலராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு கோட்பாடாக இருந்து வருகிறது. அப்படி மோதியதாகக் கருதப்படும் கிரகத்துக்கு கிரேக்க புராணத்திலிருந்து எடுத்து தியா என்ற ஒரு பெயரை விஞ்ஞானிகள் கொடுத்தி ருந்தார்கள். ஆனால் இந்தக் கோட்பாட்டுக்கு தடயபூர்வ ஆதாரம் எதுவும் இதுவரை இல்லாமல் இருந்தது.
தற்போது நிலவுப் பாறைகளில் நவீன ஆய்வுகளை மேற்கொண்டபோது, பூமிப் பாறைகளின் ரசாயனக் கூற்றுக்கு சம்பந்தமில்லாத வெளிக்கிரகத் தோற்றத்துக்கான அடையாளங்கள் நிலவுப் பாறைகளில் தெரிவதாக ஜெர்மனியிலுள்ள கொயெடிங்கென் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

பூமிப் பாறைகளுக்கும் நிலவுப் பாறைகளுக்கும் இடையில் சிறு வித்தியாசம் இருப்பதை தாங்கள் கண்டு பிடித்திருப் பதாகவும், இரண்டு கிரகங்கள் மோதிக்கொண்ட கோட் பாட்டை ஆதரிப்பதாக இந்த கண்டுபிடிப்பு அமைந்துள்ள தென்றும் ஆய்வை வழி நடத்திய டாக்டர் டேனியல் ஹெர்வார்ட்ஸ் கூறினார். பூமிப் பாறைகளில் ஆக்ஸிஜன் அய்சோடோப்களின் கலவை ஒருவிதமாக இருப்பதாகவும், நிலவுப் பாறைகளில் அது வேறுவிதமாக இருப்பதாகவும் தற்போது கண்டறியப்பட்டுள்ளது


விடுதலை,25.12.14

மெகா எர்த்



மெகா எர்த்' என்று சொல்லக்கூடிய மிகப்பெரிய பூமி ரக கோளங்கள் பேரண்டத்தில் காணப்படுவதாக வானியல் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். நமது பூமியை போலவே அழுத்தமான மேற்பரப்பை இந்த கோளங்கள் கொண்டிருந்தாலும், பூமியை விட பல மடங்கு பெரிதானவை இவை என்கிறார்கள்.
பூமியை விட 17 மடங்கு எடை கூடிய கோளம் ஒன்று தொலைதூரத்து நட்சத்திரம் ஒன்றை வலம் வருவது கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த புதிய ரக கோளங்களை வகைபடுத்த வேண்டிய அவசியம் எழுந்துள்ளது. தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள மிகப் பெரிய கிரகத்துக்கு கெப்ளர் 10 சி என்று பெயரிடப்பட்டுள்ளது.
பூமியிலிருந்து 560 ஒளியாண்டுகள் தூரத்தில் இருக்கிற நட்சத்திரம் ஒன்றை இது வலம் வருகிறது. இவ்வளவு அதிகமான எடை ஒரு கிரகத்துக்கு வருமானால், அது சுற்றுவட்டாரத்திலுள்ள ஹைட்ரஜனை ஈர்த்து வியாழன் போல வாயுக் கிரகமாகவோ, நெப்டியூன் போல பனிக்கட்டி கிரகமாகவோ தான் இருக்கும் என்று விஞ்ஞானிகள் கருதி வந்தனர்.
ஆனால் அவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தும் விதமாக இது அழுத்தமான மேற்பரப்பைக் கொண்டுள்ளது. பூமியை விட இரண்டு, மூன்று மடங்கு விட்டம் கொண்டுள்ள இந்தக் கோள் 17 மடங்கு எடையைப் பெற்றுள்ளது என்பதால், இந்தக் கோள் பூமியை விட அடர்த்தியானது என்று தெரியவருகிறது

விடுதலை,25.12.14