கடலுக்கடியில் மிக ஆழத்தில் துளையிட்டு
ஆராய்ச்சி செய்யும் முயற்சியில் ஈடுபட்ட
விஞ்ஞானிகள், இது போன்ற மிக கடுமையான சூழ்நிலைகளில் வாழும்
மிக நுண்ணிய
உயிரினங்கள் பற்றி புதிய பார்வைகள் தங்களுக்கு கிடைத்திருப்பதாகக்
கூறுகிறார்கள்.
ஒரு கல நுண்ணுயிர்கள்
பசிபிக் பெருங்கடலில், ஜப்பான் கடற்கரைக்கு அப்பால், சுமார் 2,000 மீட்டர்களுக்கும் மேலான ஆழத்தில் துளையிட்டு விஞ்ஞானிகள் ஆராய்ந்தபோது இந்த
ஒற்றை செல் நுண்ணுயிர்களை (மைக்ரோப்கள்) கண்டறிந்தனர்.
இந்த நுண்ணுயிரினங்கள்,ஒளி, பிராண வாயு
போன்றவை இல்லாத, தண்ணீரும் ஏறக்குறைய இல்லாத மிகக் கடுமையான
சூழ்நிலைகளிலும் உயிர்வாழ முடிகிறது என்று விஞ்ஞானிகள் கூறினர்.
பிரபஞ்சத்தில் இதேபோல வேறு கடுமையான
சூழ்நிலைகளிலும் உயிரினங்கள் வாழக்கூடும் என்பதை இது சுட்டிக்காட்டலாம் என்று
வல்லுநர்கள் கூறுகிறார்கள்.
சர்வதேச கடல் கண்டுபிடிப்பு திட்டம் (International Ocean
Discovery Program) என்ற அமைப்பினால்
நடத்தப்பட்ட இந்த ஆராய்ச்சி பல அரிய தகவல்களைத் தந்திருக்கிறது.
துளையிடும் கருவி
இந்த ஒற்றை செல் உயிரிகள் , கலோரிகள் குறைவான, ஹைட்ரோகார்பன் பொருட்களை உண்டு
உயிர்வாழ்கின்றன. அவைகளுக்கு மிகவும் குறைவான வளர்சிதை மாற்றம் அதாவது
மெட்டபோலிசம் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இந்த முடிவுகள் அமெரிக்க புவிபௌதிக
ஒன்றியத்தின் (America
Geophysical Union ) மாநாடு ஒன்றில்
வைக்கப்பட்டு விவாதிக்கப்பட்டன. நாங்கள் எப்போதும் புதிய உயிரினங்களைக்
கண்டுபிடிக்க முயல்கிறோம்.
அப்படிக் கண்டுபிடிக்கும் போதெல்லாம்,அவைகள் என்ன செய்ய முடியும் என்பதைக் கண்டறிவது
எங்களுக்கு ஒரு வியப்பைத் தரும் விஷயமாகவே இருந்துவருகிறது என்கிறார் இந்த
ஆராய்ச்சிக்குழுவில் அங்கம் வகித்த கலிபோர்னியா தொழில்நுட்பக்கழகத்தின் எலிசபத்
ட்ரெம்பார்ட் ரெய்ச்சர்ட்
சிக்யு என்ற கப்பலிலிருந்து கடல்
அலைகளுக்கடியில் சுமார் 1000
மீட்டர் ஆழத்தில் நிறுத்தப்பட்ட இந்த ஆழ்துளை
இயந்திரம், அதன் கீழே கடல் தரைப்பரப்பிற்கும் கீழ் சுமார் 2,400 மீட்டர் தூரம் வரை துளைத்தெடுத்து, அந்த சூழ்நிலையில் இருக்கும் நிலக்கரிப்
படுகைக்குள்ளிருந்து மாதிரிகளைக் கொண்டுவந்ததாம்.
இந்த மாதிரிகளை ஆராய்ந்து பார்த்த விஞ்ஞானிகள்
அதில் இருக்கும் நுண்ணுயிர்கள் எப்படி இந்த ஆழத்தில் உயிர்வாழ்கின்றன அவை எந்த
மாதிரியான உணவுப் பொருட்களை உண்டு வாழ்கின்றன என்பதைக் கண்டறிய தொடர்ச்சியான சில
பரிசோதனைகளைச் செய்தனர்.
இவை கடல் தரைப்பரப்புக்கடியில் இருக்கும்
நிலக்கரிப்படுகையில் வாழ்வதால், நிலக்கரியில்
இருந்து கிடைக்கும் மீத்தேன் போன்ற ஹைட்ரோகார்பன் துகள்களை அந்த உயிரினங்களுக்கு
ஊட்டிப் பார்த்த விஞ்ஞானிகள் அவை உண்மையில் அந்தத் துகள்களை உண்பதை உறுதி
செய்தனர்.
இந்த ஆராய்ச்சியில் இந்த உயிரினங்கள்
வாழ்க்கையை மிகவும் மெதுவாக வாழ்வதை, அதாவது மிக
குறைந்த உணவை உட்கொண்டு, அதையும் மெதுவாக செரிமானம் செய்து கொண்டு
வாழ்வதை, விஞ்ஞானிகள் கண்டறிந்தனர். இதுதான் அது போன்ற
கடுமையான சூழ்நிலைகளில் வாழ ஒரு வழியாக இருக்கலாம்.
வலுவிழந்து வரும் எச்அய்வி வைரஸ்
எய்ட்ஸ் நோயைத்தோற்றுவிக்கும் எச்அய்வி வைரஸ்
தனது தீவிரத்தன்மையை படிப்படியாக இழந்துவருவதாக ஆக்ஸ் போர்ட் பல்கலைக்கழக ஆய்வு
ஒன்று தெரிவித்திருக்கிறது.
இதன்காரணமாக, எச்அய்வி வைரஸின்
தொற்றும் தன்மை குறைவதோடு, மனிதர்களின் உடலுக்குள் எச்அய்வி வைரஸ்
சென்றபிறகு அது மனித உடலைத்தாக்கி முழுமையான எய்ட்ஸ் நோயாக பரிமாணம் எடுப்பதற்குத்
தேவையான கால அளவும் அதிகரிப்பதாகவும் இந்த ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
எச்அய்வி வைரஸானது மனித உடலில் புகுந்து மனித
உடலின் செல்களுக்குள் புகுந்து அங்கே பல்கிப்பெருகும்போது, மனித உடலின் நோய் எதிர்ப்பணுக்களின் கண்களில்
படாமல் தப்பிக்கும் நோக்கில் பலவித மரபணு மாற்றங்களை மேற்கொள்கிறது. எச்அய்வி
வைரஸுக்குள் ஏற்படும் இந்த பரிணாம வளர்ச்சி காரணமாக அதன் தீவிரத்தன்மை கொஞ்சம்
கொஞ்சமாக குறைந்து வருவதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
பொட்ஸ்வானா மற்றும் தென் ஆப்பிரிக் காவை
சேர்ந்த நூற்றுக்கணக்கான பெண்களை ஆராய்ந்தபிறகு தாங்கள் இந்த முடிவுக்கு வந்ததாக
ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்த முடிவுகள் ஓரளவு
ஊக்கத்தை தந்தாலும், இன்னமும் இந்த வைரஸ் ஒரு குணப்படுத்த முடியாத
சவாலாகவே தொடர்வ தாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.
இந்த ஆய்வின் முடிவுகள் இறுதியானவை அல்ல என்றாலும்
எச் அய் வி தொற்றைத் தடுப்பதிலும் எயிட்ஸ் நோயை கட்டுப்படுத்துவதிலும் இதன்
முடிவுகள் பெருமளவு பயன்படும் என்று தெரிவித்தார் இந்தியாவின் தேசிய தொற்றுநோய்
தடுப்பு மய்யத்தின் தொற்றுநோய் புலனாய்வு அதிகாரி மருத்துவர்கள்விடுதலை,25.12.14
கருத்துகள் இல்லை :
கருத்துரையிடுக