ஞாயிறு, 17 மே, 2015

சீனாவில் புதிதாக 43 டைனோசர் முட்டை படிமங்கள் கண்டுபிடிப்பு


சீனாவில் கட்டு மானத்திற்காக பள்ளம் தோண்டும் போது 43 டைனோசர் முட்டை படிமங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. தெற்கு சீனாவின் குவாங்டாங் மாகாணத் தில் உள்ள ஹெயுன் நகரத்தில் கட்டுமான பணிகளுக்காக பள்ளம் தோண்டிய போது டை னோசர் முட்டை படிமங் கள் இருப்பது தெரிய வந்தது.
இதனை அடுத்து தொல்பொருள் ஆய்வாளர்கள் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் 2 மணி நேர முயற்சிக்குப் பின் 43 முட்டை படிமங்களையும் பத்திரமாக மீட்டனர். பின்னர் அனைத்து படிமங்களும் அருங்காட்சியகத்திற்கு கொண்டு செல்லப்பட்டன.
இந்த நகரத்தில் மட்டும் இதுவரை 17 ஆயிரத்திற்கு அதிகமான டைனோசர் முட்டை படிமங்கள் கண்டெடுக்கப் பட்டுள்ளன. இங்கு முதல் முறையாக 1996இல் ஒரு கட்டுமானத்திற்காக நிலத்தை தோண்டிய போது உருண்டை யான சில பொருட்கள் கிடைத்தன. முதலில் அது டைனோசர் முட்டை என தெரியாமல் குழந்தைகள் அதை வைத்து விளையாடிக் கொண்டிருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த அருங்காட்சியகம் உலகிலேயே அதிகமான டைனோசர் முட்டை படிமங்களை வைத்துள்ளது. இங்கு மொத்தமாக 10,008 முட்டைகள் சேமித்து வைக்கப்பட்டுள்ளன. இதற்காக கின்னஸ் சாதனை புத்தகத்திலும் இடம் பிடித்துள்ளது.
-விடுதலை,23.4.15

கருத்துகள் இல்லை :

கருத்துரையிடுக