ஞாயிறு, 27 நவம்பர், 2016

செயற்கை முறையில் விந்து உற்பத்தி

உலகில் முதல் முறையாக
செயற்கை முறையில் விந்து உற்பத்தி பிரெஞ்சு விஞ்ஞானிகள் சாதனை
டன், மே 10- ஆண்களின் மலட்டுத்தன்மையை போக்கும் வகையில் உலகிலேயே முதல் முறையாக செயற்கை முறையில் விந்து உற்பத்தி செய்து பிரெஞ்சு விஞ்ஞானிகள் சாதனை படைத்துள்ளனர். பிரான்ஸ் நாட்டின் லியான் நகரில் உள்ள கேல்லிஸ்டெம் ஆய்வுக்கூடத்தை சேர்ந்த விஞ் ஞானிகள், இச்சாதனையைப் படைத்துள்ளனர்.
இந்த அளப்பரிய சாதனை குறித்து, ஆய்வுக் கூடத்தின் தலைமைச் செயல் அதிகாரியான இசபெல் குவோக் கூறியதாவது;
ஆண் இனப்பெருக்க திசு எனப்படும் ஸ்பெர்ம டோகோனியாவை எடுத்து, ஆய்வுக்கூடத்தில் சிக்கலான செயல்முறையை கையாண்டு 72 நாட் களுக்கு பின் டெஸ்ட் டியூபில் இந்த விந்து உரு வாக்கப்பட்டுள்ளது. இதன் முலம் மலட்டுத்தன்மை யால் பாதிக்கப்பட்டு தங்கள் சொந்த விந்துவை உற்பத்தி செய்யமுடியாத லட்சக்கணக்கான ஆண்களுக்கு புதிய வாய்ப்பு கிட்டியுள்ளது. இனி மலட்டுத்தன்மை உள்ள ஆண்களும் இம்முறையில் உருவாக்கப்பட்டுள்ள தங்களது செயற்கை விந்தை கொண்டே, அய்.வி.எப். முறையில் குழந்தைகளை பெற்றுக்கொள்ள முடியும் என்று கூறினார்.
எனினும் வரும் ஜூன் 23-ஆம் தேதியன்றுதான், ஆர்டிசெம்(செயற்கை விந்து) என்ற இந்த செயற்கை விந்தணு குறித்த அறிவிப்பை பிரெஞ்சு நிறுவனம் வெளியிட உள்ளது. அதுவரை இம்முறையினால் ஏற்பட்ட தீர்வு குறித்து அந்நிறுவனம் வாய் திறக்க மறுத்துவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
-விடுதலை,10.5.15

கருத்துகள் இல்லை :

கருத்துரையிடுக