வியாழன், 10 நவம்பர், 2016

ஆய்வுச்சாலையில் உருவாக்கப்பட்டுள்ள இறைச்சி.

சோதனைக் குழாய் முறையில் முதல் முறையாக ஆய்வுச்சாலையில் உருவாக்கப்பட்டுள்ள இறைச்சி.


பசு மற்றும் பன்றியின் செல்களைக் கொண்டு செயற்கை முறையில் இறைச்சியை வளர்த்து, உற்பத்தி செய்ய முடியும் என அறிவியல் ஆய்வாளர்கள் நிரூபித்துள்ளனர்.
இறைச்சி ஆய்வுச்சாலைகளில் உருவாக்கப்படுவதன்மூலமாக  மூன்று ஆண்டுகளுக்குள்ளாக  விலங்குகளை உண்பது என்பதை நினைத்து பார்க்க முடியாததாகிவிடும் என்று ஆய்வா ளர்கள் கூறுகிறார்கள்.
உமா வெலெட்டி என்கிற அறிவி லாளர் மேயோ மருத்துவமைனையில் பயிற்சி பெற்ற இருதய நோய் நிபுணரும், மின்னெசோட்டா பல்கலைக்கழகத்தில் உதவி பேராசிரியரும் ஆவார். இரட்டை நகரங்களின் அமெரிக்க இருதய சங்கத் தின் தலைவருமாவார். அவர் ஸ்டெம் செல் உயிரியல் வல்லுநர் முனைவர் நிக்கோல¢ஸ் ஜெனோவெஸ், உயிர் மருத்துவ இயல் பொறியாளர் முனைவர் வில் கிளெம் ஆகிய இருவருடன் இணைந்து இறைச்சிகுறித்த ஆய்வை மெம்பிஸ் உணவு விடுதியில் இணைந்து தொடர் ஆய்வு மேற்கொண்டார்.
மாட்டின் கருவிலிருந்து வெளியா கின்ற சீரத்தை அடிப்படையாகக் கொண்டிராமல் அதற்கு பதிலாக தாவரங்களை வளர்ப்பதைப் போன்று உருவாக்கப்படுகிறது.
சோதனைக்குழாயிலிருந்து பெறப்படும் இறைச்சியை ஆய்வகத்தி லிருந்து நேரடியாக உணவுத்தட்டுக்கு கொண்டு வரும் நிலை உள்ளது.
உயிரற்ற இறைச்சியிலிருந்து விலங்கு களின் செல்லைப்பிரித்தெடுத்து, விலங் குகள் தொடர்பில்லாத உற்பத்திப் பொருள்களாக சந்தைப்படுத்தும் வாய்ப்பு மூன்று முதல் நான்கு ஆண்டு களில் பொதுமக்களுக்கு கிடைக்கும் என்பதை, ஆய்வகத்தில் வளர்த்து எடுக் கப்பட்ட Ôஇறைச்சி பந்துÕ (னீமீணீtதீணீறீறீ) மூலமாக இப்போது நிரூபிக்கப்பட்டுள்ளது.
மேம்பிஸ் மீட்ஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அலுவலர் உமா வேலட்டி கூறும்போது, “இதுதான் முற்றிலும் இறைச்சியின் எதிர்காலமாக இருக்கும். குதிரை மற்றும் குதிரை வண் டிகளுக்கு மாற்றாக கார் வந்ததுபோல இறைச்சி தொழிலில் செய்திட திட்ட மிட்டுள்ளோம். இறைச்சியை உரு வாக்கி வளர்ப்பதன்மூலமாக இப்போ துள்ள நிலையை முற்றிலும் மாற்றிட முடியும்.  விலங்குகளை உண்பது என்ப தையே எண்ணிப்பார்க்க முடியாத அள வுக்கு ஆகிவிடும். பசு மாடு, பன்றி, கோழி ஆகியவற்றின் செல்களைக் கொண்டு இந்நிறுவனம் சிறிய அளவில் இறைச்சியை வளர்த்து வருகிறது’’ என்று குறிப்பிட்டார்.
அந்நிறுவனத்தின் இணையத்தில் குறிப்பிடும்போது, Òஅமெரிக்கர்களாக உள்ள நாங்கள் இறைச்சியை மிகவும் விரும்புகிறோம். பழைய முறையில் உள்ள இறைச்சி உற்பத்தியில் எதிராக உள்ள பக்கவிளைவு,  சுற்று சூழல் பாதிப்பு, உடல்நலத்துக்கு கேடு, நுண்ணு யிர்க்கொல்லிகள், மலம் மற்றும் நோய்க் கிருமிகள் மற்றும் இதர அசுத்தங்கள் உள்ள நாங்கள் விரும்பவில்லை’’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது
-விடுதலை ஞா.ம.,13.2.16

கருத்துகள் இல்லை :

கருத்துரையிடுக