திங்கள், 10 அக்டோபர், 2016

நானோ தொழில்நுட்பத்தின் முன்னோடி இயற்கை!

தற்காலத்தில் நானோ தொழில்நுட்பத்தின் வளர்ச்சி அளப் பரியது. உடுத்தும் உடையிலும், வீட்டில் பயன்படுத்தும் மின்சாதனப் பொருட்களிலும், சில மருந்துகளிலும், உணவு பொருட்களிலும், நோயினை கண்டறியும் கருவிகளிலும், நீர் சுத்தீகரிப்பு சாதனங்களிலும், மின் உற்பத்தி மற்றும் சேமிப்பு கலனிலும், நானோ தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
ஏறக்குறைய எல்லா துறையிலும் உள்ள ஆராய்ச்சியாளர் களால் மிகவும் கவரப்பட்டு பயன்படுத்தும் தெழில்நுட்பமாக விளங்குகிறது நானோ தொழில்நுட்பம்! நானோ தொழில் நுட்பத்தின் மீதான மோகத்திற்கு என்ன காரணம்? நானோ பொருட்களின் அதீத பயன்களும், வித்தியாசமான பண்பு களும் தான்! முதலில் நானோ என்றால் என்ன? என்று அறிந்து கொள்வோம். நானோ என்ற சொல் நன்னாஸ் என்ற கிரேக்க சொல்லிலிருந்து பெறப்பட்டுள்ளது. நன்னாஸ் என்பதற்கு குள்ள அல்லது சிறிய என்று பொருள்.
உதாரணமாக ஜப்பனீஸ் குரங்கையும், மார்மோசெட் வகை குரங்கையும் பாருங்க. இரண்டும், குரங்கினமாக இருந்தாலும், ஜப்பனீஸ் குரங்கின் சராசரி உயரம் 60  ஆனால் மார்மோசெட்டின் சராசரி உயரமோ 19  தான்! எனவே, உயரத்தில் மிகவும் சிறியதான மார்மோசெட் குரங்கினத்தை, நானோ மார்மோசெட் என்று அழைக்கலாம். ஆனால், சிறிய என்ற சொல் ஒரு ஒப்பீட்டளவிலான வார்த்தை. கிலோ மீட்டரை, மீட்டருடன் ஒப்பிடும் பொழுது, மீட்டர் சிறிய அளவு ஆகும். இதே போன்று மீட்டரை, சென்டிமீட்டருடன் ஒப்பிடும் பொழுது, சென்டிமீட்டர் சிறிய அளவு ஆகும். எனவே, சிறிய அல்லது நானோ பொருள் என்றால், எந்த அளவிற்கு சிறிய என்ற வினாவுடன், குழப்பமும் ஏற்படு வதை தவிர்க்க விஞ்ஞானிகள், நானோ விற்கு சரியான அளவை கொடுத்துள்ளனர்.
அதுதான் 10-9. அதாவது, ஒரு பொருள் நானோமீட்டர் அளவில் இருக்கும் என்றால் அதன் அளவு 10-9  ஆகும். சரி, ஒரு பொருளின் அளவு குறைந்து நானோமீட்டர் அளவிற்கு சென்றால் என்ன நன்மை? அப்பொருளின் பண்புகள் பெருமளவு மாறுபடும், அதனால் அதன் பயன் களும் அதிகரிக்கும்.  மேலும் நானோ தொழில் நுட்பத்தின் முன்னோடி இயற்கை தான் என்பதை, பின்வரும் செய்திகள் மூலம் ஊர்ஜிதபடுத்த முடியும்!
பல்லியின் ஒட்டும் தன்மை: நம் வீட்டின் சுவரின் மீது ஒட்டிக்கொண்டிருக்கும் பல்லியை பாருங்கள். புவியீர்ப்பு விசையையும் எதிர்த்து பல்லி உறுதியாக ஒட்டிக் கொண்டி ருப்பதற்கு என்ன காரணம்? அதன் கால்கள் தான் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அதாவது, பல்லியின் ஒவ்வொரு காலிலும் லட்சக்கணக்கான இழைகள் உள்ளதாகவும், ஒவ்வொரு இழையிலும் என்னற்ற ஸ்பேட்சுலே எனப்படும் நானோ இழைகள் உள்ளதாகவும் கண்டறியப்பட்டுள்ளது. இந்நானோ கட்டமைப்புகளே பல்லி சுவரில் உறுதியாக ஒட்டிக் கொண்டிருப்பதற்கு காரணம் என்றும் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் மனிதர்களால் கண்டுபிடிக்கப்பட்டது தான் நானோபசைகள். 
-விடுதலை,7.7.16

கருத்துகள் இல்லை :

கருத்துரையிடுக