ஞாயிறு, 5 ஜூலை, 2015

அகற்றப்பட்ட கர்ப்பபையை மீண்டும் பொருத்தி குழந்தை பெற்ற பெண்


பெல்ஜியம் நாட்டில் அகற்றப்பட்ட கர்ப்பபையை மீண்டும் பொருத்தி குழந்தை பெற்ற பெண்
பிரஸ்சல்ஸ், ஜூன் 15_ பெல்ஜியம் நாட்டைச் சேர்ந்த 27 வயது பெண் ஒருவருக்கு அகற்றப்பட்ட கர்ப்பபையை மீண்டும் பொருத்தி குழந்தை பெற செய்துள்ளனர். அந்த பெண் 14 வயதில் இருந்த போது கடுமையான செல் ரத்தசோகை நோயினால் அவதிப்பட்டார்.
இதனால் அவருடைய கர்ப்பபை பாதிக்கப்பட்டி ருந்தது. அவரது கர்ப்ப பையை அகற்றாவிட்டால் முற்றிலும் கர்ப்பபை பாதிக்கப்படும் நிலை ஏற் பட்டது.
பெண்ணின் வயிற்றில் உள்ள கர்ப்பபையை அகற்றிவிட்டு அதை குளிர்சாதனங்களில் வைத்து தேவைப்படும் நேரத்தில் மீண்டும் பொருத்தி குழந்தை பெறும் மருத்துவமுறை ஏற்கெனவே உள்ளது.
எனவே அந்த பெண் ணின் கர்ப்பபையை அகற்றி விட்டு தேவைப்படும் நேரத்தில் குழந்தைபெற செய்யலாம் என்ற நோக் கில் அதை அகற்றி னார்கள். பின்னர் குளிர் சாதன பெட்டியில் வைக் கப்பட்டது. கர்ப்பபை அகற்றப்படும்போது அந்த பெண் பருவமடைய வில்லை.
இந்த நிலையில் அவ ருக்கு திருமணம் ஆனது. இதையடுத்து அவர் குழந்தை பெற்றுக்கொள்ள விரும்பினார். இதனால் குளிர்சாதனத்தில் வைக்கப் பட்ட கர்ப்பபை மீண்டும் அவருக்கு பொருத்தப்பட் டது. அதை மீண்டும் செயல்பட வைக்க 2 ஆண்டுகளாக தீவிர சிகிச்சை நடந்து வந்தது. இதில் கர்ப்பபை செயல் பட தொடங்கி மாத விடாயும் வந்தது. பின்னர் கரு முட்டையும் உரு வானது.
இதைத்தொடர்ந்து அவர் கர்ப்பமானார். தற் போது அவருக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. கர்ப்பபையை அகற்றி விட்டு மீண்டும் குழந்தை பெற்ற சம்பவங்கள் பல நடந்தாலும் அந்த பெண் களின் கர்ப்பபை பருவம் அடைந்ததற்கு பிறகு அகற்றப்பட்டதாகும். ஆனால் பருவம் அடைவ தற்கு முன்பே கர்ப்ப பையை அகற்றிவிட்டு மீண்டும் பொருத்தி குழந்தை பெற செய்தி ருப்பது இதுவே முதல் முறை என்று மருத்துவர் கள் தெரிவித்தனர்.

கருத்துகள் இல்லை :

கருத்துரையிடுக