ஞாயிறு, 5 ஜூலை, 2015

செல்சவ்வை செயற்கையாக உருவாக்கிய இந்திய விஞ்ஞானி




அமெரிக்காவின் சான்டியாகோ நகரில் உள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக இருப்பவர் நியல் தேவராஜ். இந்திய வம்சாவழியைச் சேர்ந்த இவர், சிலருடன் இணைந்து உயிர் செல்களின் தோலாக விளங்கும் செல் சவ்வை செயற்கையாக உருவாக்கி உள்ளார்.
உயிரினங்களின் உடற்செல்களின் செல் சவ்வே அடுத்தடுத்த செல்களுடன் தொடர்பு கொள்ளவும், தகவல்களை கடத்தவும் உதவுகிறது. செயற்கையாக இந்த செல்சவ்வை உருவாக்கி இருப்பதன் மூலம், பாதிக்கப்படும் உடல்பாகங்களில் இந்த செயற்கை செல்களை உருவாக்கி, உடல் செயல்களை தூண்ட முடியும்.
இந்த செல்சவ்வு இயற்கை செல்சவ்வு போல தகவல் தொடர்பிலும், தேவைக்கேற்ப புதிய தோலை உருவாக்கிக் கொள்வதிலும் சிறப்பாக செயல்படுவதாக தேவராஜ் கூறி உள்ளார்.

-விடுதலை,30.6.15

கருத்துகள் இல்லை :

கருத்துரையிடுக