சனி, 17 பிப்ரவரி, 2024

இந்தியாவில் அல்ல – ஆஸ்திரேலியாவில்! இறந்த கணவரின் உயிர் அணுமூலம் குழந்தை பெற பெண்ணுக்கு அனுமதி

 



கான்பெரா, ஜன.5- ஆஸ்திரேலியா தலைநகர் சிட்னியில் வசிக்கும் முதிய இணையருக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் இருந்தனர்.

கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்னர் அவர்களது மகள் நீரில் மூழ்கி உயிரிழந்தார். அடுத்த அதிர்ச்சியாக 2019ஆம் ஆண்டில் அவர்களது மகனும் சாலை விபத்தில் பலியானார்.
இதனால் அந்த இணையர் செயற்கை கருத்தரிப்பு முறையில் மற்றொரு குழந்தை பெற்றுக்கொள்ள முடிவு செய் தனர். இந்நிலையில் கடந்த மாதம் (டிசம்பர்) அந்த பெண்ணின் கணவரும் உயிரி ழந்தார். இறந்த இரு நாட்களுக்குள் உயிரணுவை சேகரிக்க வேண்டும் என்பதால் அவர் உச்சநீதிமன்றத்தை நாடினார்.

இதனையடுத்து உச்ச நீதிமன்றம் அனுமதி கொடுத்ததால் கணவரின் உயிரணு சேமித்து வைக்கப்பட்டது. ஆனால் அதனை பயன்படுத்த தனி நீதிபதியின் உத்தரவு வேண்டும் என்ப தால் தனியே மற்றொரு வழக்கு தொடுத் தார். அந்த வழக்கிலும் நீதிமன்றம் அவருக்கு அனுமதி வழங்கியது.

இதன் மூலம் உயிரிழந்த கணவரின் உயிரணுவை பயன்படுத்தி குழந்தை பெறுவதற்கான சட்ட போராட்டத்தில் அந்த 62 வயது பெண் வெற்றி பெற் றுள்ளார்.

கருத்துகள் இல்லை :

கருத்துரையிடுக