புதன், 11 ஆகஸ்ட், 2021

விண்வெளி அறிவியல்: கருந்துளைக்கு பின்னால் ஒளி ஆல்பர்ட் அய்ன்ஸ்டைனின் கணிப்புக்கு இன்னொரு சான்று

 

விண்வெளியில் உள்ள கருந்துளை ஒன்றைச் சுற்றிஅதீத ஒளியுடைய எக்ஸ்-ரே வெளிச்சம் வருவதை அமெரிக்க மற்றும் அய்ரோப்பிய தொலைநோக்கிகளின் உதவியுடன் கண்டறிந்துள்ளனர்கருந்துளை ஒன்றில் இருந்து ஒளி வருவது கண்டறியப்படுவது இதுவே முதல் முறை.

அய்ரோப்பிய விண்வெளி முகமையின் எக்ஸ்.எம்.எம்-நியூட்டன் மற்றும் அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசாவின் நுஸ்டார்  ஆகியவற்றின் மூலம் அமெரிக்காவின் ஸ்டான்ஃபோர்டு பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த டேன் வில்கின்ஸ் தலைமையிலான பன்னாட்டு அறிவியலாளர்கள் குழு கண்டறிந்துள்ளது.

கருந்துளைக்கு பின்னால் இருந்து வரும் அதிசயமான 'ஒளி மகுடம்'  குறித்து அறிந்து கொள்ளும் நோக்கில் செய்யப்பட்ட ஆய்வின்போது இந்த அறிவியல் அற்புதம் தெரியவந்துள்ளது.

கருந்துளை என்றால் என்ன?

கருந்துளை என்பது விண்ணில் இருக்கும் பல விண்வெளி பொருட்களில் ஒன்றாகும்இவை என்றும் தமிழில் அழைக்கப்படுகின்றன.

இவை அளவுக்கும் அதிகமான ஈர்ப்பு விசையை கொண்டுள்ளதுடன் கற்பனை கூட செய்து பார்க்க முடியாத அளவுக்கு வரம்பற்ற (முடிவிலிஅடர்த்தியைக் கொண்டுள்ளன.

கருந்துளைகளின் திணிவும்  அளவிட முடியாத வகையில் அதிகமானது.

இந்த கண்டுபிடிப்பு ஏன் முக்கியத்துவம் வாய்ந்தது?

கருந்துளைகளின் அதிகமான ஈர்ப்பு விசை காரணமாக இந்தப் பேரண்டத்தில் மிகவும் வேகமாக பயணிக்க கூடிய ஒளி கூட கருந்துளையின் நிகழ்வு எல்லையைக் கடந்து செல்ல முடியாது.

பேரண்டம் உருவானதன் ரகசியம் என்ன?

கருந்துளைக்கு அப்பால் இருந்து ஒளி வருவதைக் காண முடிவது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த கண்டுபிடிப்பாகக் கருதப்படுகிறது.

இதனால் கருந்துளைக்கு அப்பால் உள்ள பகுதியில் என்ன உள்ளது என்பதை விண்வெளி ஆய்வாளர்கள் ஆய்ந்தறிய வழி பிறந்துள்ளது.

இந்தக் கண்டுபிடிப்பு எப்படி அறிவியல் பூர்வமாக சாத்தியமானது?

குறிப்பிட்ட கருந்துளையின் அதீதமான ஈர்ப்பு விசை காரணமாக இதைச் சுற்றியுள்ள வெளி வளைக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக இந்த கருத்துக்கு அப்பாலுள்ள எதிரொளியும்  வளைக்கப் பட்டுள்ளதுஇதனால் எக்ஸ்.எம்.எம்-நியூட்டன் மற்றும் நுஸ்டார் ஆகிய தொலைநோக்கிகள் நிலையிலிருந்து இதைக் காண முடிந்தது என்று அய்ரோப்பிய விண்வெளி முகமை தெரிவிக்கிறது.

இந்தக் குறிப்பிட்ட கருந்துளை எங்கு உள்ளது?

நமது பால்வெளி பேரடைக்கு அருகிலுள்ள  பேரவையின் மய்யத்தில் இந்தக் கருந்துளை அமைந்துள்ளது.

நமது சூரியனின் நிறையைப் போல சுமார் ஒரு கோடி மடங்கு நிறையை உடையது.

இந்தப் பேரடை பூமியிலிருந்து சுமார் 180 கோடி ஒளி ஆண்டுகள் தூரத்தில் அமைந்துள்ளது என்று அய்ரோப்பிய விண்வெளி முகமை தெரிவிக்கிறது.

ஆல்பர்ட் அய்ன்ஸ்டைனுக்கும் இந்தக் கண்டுபிடிப்புக்கும் என்ன தொடர்பு?

அறிவியலாளர் ஆல்பர்ட் அய்ன்ஸ்டைன்ஈர்ப்பு விசை கருந்துளைகளைச் சுற்றியுள்ள ஒளியை எவ்வாறு வளைக்கும் என்பதைக் கணித்து தமது பொதுச் சார்புக் கோட்பாட்டில் விளக்கியிருந்தார்.

இந்த கண்டுபிடிப்பு ஆல்பர்ட் அய்ன்ஸ்டைனின் கணிப்பை மீண்டும் ஒருமுறை மெய்யாக்கும் வகையில் அமைந்துள்ளது.

இந்தக் கண்டுபிடிப்பு 'நேச்சர்அறிவியல் சஞ்சிகையில் பதிப்பிடப்பட்டுள்ளதுஇந்தக் குறிப்பிட்ட 'ஒளி மகுடம்எப்படி ஒளி மிகுந்த எக்ஸ்-கதிர்களை வெளியிடுகிறது எனும் புரியாத புதிரை அவிழ்ப்பதற்காக அறிவியலாளர்கள் தொடர்ந்து ஆய்வு செய்து வருகின்றனர்.

கருத்துகள் இல்லை :

கருத்துரையிடுக