வியாழன், 3 அக்டோபர், 2019

பறக்கும் டைனோசர்!

பதினாறு கோடி ஆண்டுகளுக்கு முன்பு சீனக் காடுகளில் வேட்டையாடும் பிராணி ஒன்று வாழ்ந்து வந்தது.

விநோதமான, சிறிய உருவமுள்ள அந்த உயிரினத்துக்கு வவ்வாலைப் போல பறக்கும் திறன் உண்டு!

ஒரு மரத்தை விட்டு இன்னொரு மரத்துக்கு அதனால் சுலபமாகத் தாண்ட முடியும். சமீபத்தில் அந்தப் பிராணியின் புராதன எலும்புக் கூடுகள் கிடைத்துள்ளன.

ஆராய்ச்சி செய்து பார்த்ததில் அந்த எலும்புக்கூடுகள் டைனோசரின் குடும்பத் தைச் சேர்ந்தது என்று தெரிய வந்திருக்கிறது.

சுமார் 20 கோடி வருடங்களுக்கு முன்பு வாழ்ந்ததாகச் சொல்லப்படுகிற டைனோ சர்களின் முதல் எலும்புக்கூடே பத்தொன் பதாம் நூற்றாண்டில்தான் கண்டுபிடிக்கப் பட்டது. தவிர, டைனோசர்களில் ஆயிரத் துக்கு மேற் பட்ட வகைகள் இருந்திருக்கின்றன.

அவற்றில் ஒன்றுதான் இது என்று விஞ்ஞானிகள் உறுதி செய்திருக்கின்றனர்.

 - விடுதலை நாளேடு, 3.10.19

 


கருத்துகள் இல்லை :

கருத்துரையிடுக