செவ்வாய், 17 ஆகஸ்ட், 2021

நிலவில் நீர் மூலக்கூறுகளை கண்டுபிடித்த சந்திரயான்-2


புதுடில்லி, ஆக.15 நிலவில் நீர் மூலக்கூறுகள் இடம்பெற்றி ருப்பது இந்திய விண்வெளி ஆராய்ச்சி மய்யத்தின் (இஸ் ரோ) சந்திரயான்-2 விண்கலம் அனுப்பிய தரவுகள் மூலம் தெரியவந்துள்ளது.

இஸ்ரோ முன்னாள் தலைவர் ஏ. எஸ். கிரண்குமார் இணைந்து எழுதியிருக்கும் ஆய்வுக் கட்டுரையில் இந்தத் தகவல் இடம்பெற்றுள்ளது.

நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்வதற்காக சந்திர யான்-2 விண்கலத்தை கடந்த 2019 ஜூலை 22ஆம் தேதி ஆந்திர மாநிலம் சிறீஅரி கோட்டாவில் இருந்து இஸ்ரோ அனுப்பியது. பல்வேறு கட்ட பயணத்துக்கு பிறகு, சந்திரயான் விண்கலம் வெற்றிகரமாக நிலவை நெருங்கியது. ஆனால், செப்.7ஆம் தேதி சந்திரயான் விண்கலத்தின் லேண்டர் கலன் திட்டமிட்டபடி நிலவில் தரையிறங்கவில்லை. திடீர் தொழில் நுட்பக் கோளாறால் லேண்டர் வேகமாக சென்று நிலவின் தரையில் மோதி தகவல் தொடர்பிலிருந்து விலகியது

எனினும், விண்கலத்தின் மற்றொரு பகுதியான ஆர்பிட் டர்' நிலவின் சுற்றுப்பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப் பட்டது. இந்த ஆர்பிட்டர் 2 ஆண்டுகளுக்கு மேலாக நிலவை சுற்றிவந்து தொடர்ந்து ஆய்வு மேற்கொண்டு, பூமிக்கு தகவல்களை அனுப்பி வருகிறது. தற்போது இந்த தரவுகள் மூலம் நிலவின் பரப்பில் நீர் மூலக் கூறுகள் இருப்பது கண்டறியப் பட்டுள்ளது. இதுதொடர்பாக நடப்பு அறிவியல் ஆய்வுக் கட்டுரைகளுக்கான வலைதளத் தில் வெளியிடப்பட்ட ஆய்வுக் கட்டுரையில் கூறியிருப்பதாவது: ஆர்பிட்டரில் இடம்பெற்றிருக் கும் அய்அய்ஆர்எஸ் கருவி எடுத்து அனுப்பியிருக்கும் ஆரம்ப கட்ட புகைப்பட தரவுகளில், இயற்பியல் அடிப்படையிலான வெப்ப திருத்த ஆய்வுகள் மேற்கொண்ட பிறகு, நிலவின் பரப்பில் 29என் மற்றும் 62 என் இடையேயான அட்சரேகை பகுதியில் ஓஎச் (ஹைட்ராக்ஸில்), எச்2ஓ ஆகிய நீர் மூலக்கூறுகள் பரவலாக இடம்பெற்றிருப்பது தெளிவாக தெரிகிறது. முன்பு, அதிக அளவில் ஓஹெச் மூலக்கூறுகள் இருக்க வாய்ப்பிருப்பதாக கண் டறியப்பட்ட நிலவின் உயர் வெப்ப பகுதியைக் காட்டிலும், இப்போது கண்டறியப்பட்டி ருக்கும் தாதுக்கள் நிறைந்த பாறைகளில் அதிக அளவில் ஓஎச், எச்2 ஓ மூலக்கூறுகள் இருப்பது கண்டறியப்பட்டிருக் கிறது. நிலவின் சுற்றுப் பாதையில் ஆர்பிட்டர் தொடர்ந்து சிறப் பாக செயல்பட்டு வருவதோடு, எடுக்கும் புகைப்படங்களை முன்னர் அனுப்பப்பட்ட சந்திர யான்-1 விண்கலத்துக்குத் தவ றாமல் அனுப்பி வருகிறது என்று ஆய்வுக் கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வியாழன், 12 ஆகஸ்ட், 2021

மேக வெடிப்பு ஏன் ஏற்படுகிறது?

 

ஜூலை 28 அன்று,  ஜம்மு -காஷ்மீர் கிராமத்தில் மேக வெடிப்பு ஏற்பட்டதில் குறைந்தது ஏழு பேர் கொல்லப்பட்டனர், 17 பேர் காயமடைந்தனர் மற்றும் 35-க்கும் மேற்பட்டோரைக் காணவில்லைஅண்மையில்ஜம்மு - காஷ்மீர் யூனியன் பிரதேசமான லடாக்உத்தராகண்ட் மற்றும் இமாச்சல பிரதேசத்தில் பல இடங்களிலிருந்து மேக வெடிப்புகள் பதிவாகியுள்ளனஇந்திய இமயமலையில் மேக வெடிப்பு பற்றிய 2017 ஆய்வில்பெரும்பாலான நிகழ்வுகள் ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் நிகழ்ந்தன.

மேக வெடிப்பு என்றால் என்ன?

மேக வெடிப்பு  என்பது ஒரு சிறிய பகுதியில் குறுகிய காலதீவிர மழை நிகழ்வுகள்இந்திய வானிலை ஆய்வுத் துறையின் (அய்எம்டிகருத்துப்படிஇது ஒரு புவியியல் பகுதியில் சுமார் 20-30 சதுர கி.மீ பரப்பளவில் எதிர்பாராத மழைப்பொழிவு, 100 மி.மீ / மணிநேரத்திற்கு மேல் இருக்கும்.

கடந்த ஆண்டு வெளியிடப்பட்ட ஒரு ஆய்வுகேதார்நாத் பிராந்தியத்தில் மேக வெடிப்புக்குப் பின்னால் உள்ள வானிலை காரணிகளைக் கண்டறிந்ததுவளிமண்டல அழுத்தம்வளிமண்டல வெப்பநிலைமழைப்பொழிவுமேக நீர் உள்ளடக்கம்cloud fractionமேகத் துகள் ரேடியஸ்மேகக் கலவை விகிதம்மொத்த மேகக்கணிகாற்றின் வேகம்காற்றின் திசை மற்றும் மேகமூட்டத்தின் போது ஈரப்பதம் ஆகியவற்றை அவர்கள் பகுப்பாய்வு செய்தனர்மேக வெடிப்பின் போது, ​​ஈரப்பதம் மற்றும் அதன் குறைந்த வெப்பநிலை மற்றும் மெதுவான காற்றுடன் அதிகபட்ச மட்டத்தில் இருப்பதாக முடிவுகள் காண்பித்தன. “இந்த சூழ்நிலையின் காரணமாக அதிக அளவு மேகங்கள் மிக விரைவான விகிதத்தில் ஒடுக்கப்பட்டு மேக வெடிப்பு ஏற்படக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது” என்று குறிப்பிட்டிருந்தனர்.

இதுபோன்ற மேக வெடிப்புகளை நாம் பார்ப்போமா?

காலநிலை மாற்றம்உலகெங்கிலும் உள்ள பல நகரங்களில் மேக வெடிப்புகளின் அதிர்வெண் மற்றும் தீவிரத்தை அதிகரிக்கும் என்று பல ஆய்வுகள் காட்டுகின்றனமே மாதத்தில்உலக வானிலை அமைப்புவருடாந்திர சராசரி உலக வெப்பநிலையானது தற்காலிகமாக அடுத்த அய்ந்து ஆண்டுகளில் ஒன்றில் குறைந்தபட்சம் தொழில்துறைக்கு முந்தைய நிலைக்கு மேல் 1.5 டிகிரி அய் எட்டுவதற்கு 40 விழுக்காடு வாய்ப்பு இருப்பதாகக் குறிப்பிட்டதுமேலும், 2021 மற்றும் 2025-க்கு இடையில் குறைந்தது ஒரு வருடத்திற்கு 90 விழுக்காடு நிகழ்தகவு இருப்பதாகவும்இது 2016ஆம் ஆண்டின் மிக உயர்ந்த பதிவை தோற்கடிக்க வாய்ப்புள்ளது என்றும் குறிப்பிடுகிறது.

வெப்பநிலை அதிகரிக்கும் போது வளிமண்டலம் மேலும் ஈரப்பதத்தை தக்கவைத்துக்கொள்ளும்இந்த ஈரப்பதம் குறுகிய காலத்திற்கு மிகக் குறுகிய மழை அல்லது அரை மணிநேரம் அல்லது ஒரு மணி நேரத்திற்கு மலையகப் பகுதிகளில் திடீர் வெள்ளம் மற்றும் நகரங்களில் வெள்ளப் பெருக்கை ஏற்படுத்தும்மேலும்உலகளவில் குறுகிய கால மழைப்பொழிவு தீவிரமாக மாறப்போகிறது என்பதற்கான சான்றுகள் உள்ளனகாலநிலை மாற்றம் அல்லது வெப்பமயமாதல்எதிர்காலத்தில் அதிகரித்த அதிர்வெண்ணில் இந்த மேக வெடிப்பு நிகழ்வுகளை நாம் நிச்சயமாகக் காண்போம்” என்று அய்.அய்.டி காந்திநகரில் உள்ள சிவில் இன்ஜினியரிங் மற்றும் எர்த் சயின்ஸைச் சேர்ந்த விமல் மிஸ்ரா விளக்குகிறார்.

மேக வெடிப்புகளை நம்மால் கணிக்க முடியுமா?

இது மிகவும் சவாலான பணி மற்றும் மேக வெடிப்பை மாதிரியாக்குவது மிகவும் கடினம்” என்று மும்பை அய்.அய்.டியில் சிவில் இன்ஜினியரிங் துறையைச் சேர்ந்த சுபிமல் கோஷ் கூறுகிறார்அவருடைய குழு இந்திய பருவமழை மற்றும் நீர்நிலை காலநிலை குறித்து ஆய்வு செய்து வருகிறது.

மாதிரிகள் அந்தத் தீர்மானத்தில் உண்மையில் இயங்காது என்று பாப்கார்ன் உதாரணத்துடன் மேலும் அவர் விரிவாக விளக்குகிறார். “நீங்கள் பாப்கார்னை உருவாக்குகிறீர்கள் என்று கற்பனை செய்து பாருங்கள்சமைக்கும் பானை வெப்பமடைகிறது மற்றும் சோளம் உதிர்கிறதுஎந்த சோளம் முதலில் உதிரும் என்று நான் கேட்டால்உங்களால் பதில் சொல்ல முடியாமல் போகலாம்டிகோட் செய்ய உங்களுக்கு மிகச் சிறந்த தெளிவுத்திறன் ஆய்வுகள் தேவைமேலும்இரண்டு நிமிடங்களுக்குப் பிறகு எவ்வளவு சோளம் வரும் என்று நான் உங்களிடம் கேட்டால்நீங்கள் 99 விழுக்காடு சொல்ல முடியும்ஆனால் 10 விநாடிகளுக்குப் பிறகு எத்தனை என்றால் சொல்ல முடியுமாசிறந்த தீர்மானம் மற்றும் சிறந்த நேர அளவிற்கு அதன் பதில் கடினம்இதேபோல்மணிநேர மழை மற்றும் மேக வெடிப்புகளுக்குதீவிரத்தையும் இடத்தையும் உருவகப்படுத்துவது மிகவும் கடினம்” என்று கூறினார்.

புதன், 11 ஆகஸ்ட், 2021

விண்வெளி அறிவியல்: கருந்துளைக்கு பின்னால் ஒளி ஆல்பர்ட் அய்ன்ஸ்டைனின் கணிப்புக்கு இன்னொரு சான்று

 

விண்வெளியில் உள்ள கருந்துளை ஒன்றைச் சுற்றிஅதீத ஒளியுடைய எக்ஸ்-ரே வெளிச்சம் வருவதை அமெரிக்க மற்றும் அய்ரோப்பிய தொலைநோக்கிகளின் உதவியுடன் கண்டறிந்துள்ளனர்கருந்துளை ஒன்றில் இருந்து ஒளி வருவது கண்டறியப்படுவது இதுவே முதல் முறை.

அய்ரோப்பிய விண்வெளி முகமையின் எக்ஸ்.எம்.எம்-நியூட்டன் மற்றும் அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசாவின் நுஸ்டார்  ஆகியவற்றின் மூலம் அமெரிக்காவின் ஸ்டான்ஃபோர்டு பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த டேன் வில்கின்ஸ் தலைமையிலான பன்னாட்டு அறிவியலாளர்கள் குழு கண்டறிந்துள்ளது.

கருந்துளைக்கு பின்னால் இருந்து வரும் அதிசயமான 'ஒளி மகுடம்'  குறித்து அறிந்து கொள்ளும் நோக்கில் செய்யப்பட்ட ஆய்வின்போது இந்த அறிவியல் அற்புதம் தெரியவந்துள்ளது.

கருந்துளை என்றால் என்ன?

கருந்துளை என்பது விண்ணில் இருக்கும் பல விண்வெளி பொருட்களில் ஒன்றாகும்இவை என்றும் தமிழில் அழைக்கப்படுகின்றன.

இவை அளவுக்கும் அதிகமான ஈர்ப்பு விசையை கொண்டுள்ளதுடன் கற்பனை கூட செய்து பார்க்க முடியாத அளவுக்கு வரம்பற்ற (முடிவிலிஅடர்த்தியைக் கொண்டுள்ளன.

கருந்துளைகளின் திணிவும்  அளவிட முடியாத வகையில் அதிகமானது.

இந்த கண்டுபிடிப்பு ஏன் முக்கியத்துவம் வாய்ந்தது?

கருந்துளைகளின் அதிகமான ஈர்ப்பு விசை காரணமாக இந்தப் பேரண்டத்தில் மிகவும் வேகமாக பயணிக்க கூடிய ஒளி கூட கருந்துளையின் நிகழ்வு எல்லையைக் கடந்து செல்ல முடியாது.

பேரண்டம் உருவானதன் ரகசியம் என்ன?

கருந்துளைக்கு அப்பால் இருந்து ஒளி வருவதைக் காண முடிவது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த கண்டுபிடிப்பாகக் கருதப்படுகிறது.

இதனால் கருந்துளைக்கு அப்பால் உள்ள பகுதியில் என்ன உள்ளது என்பதை விண்வெளி ஆய்வாளர்கள் ஆய்ந்தறிய வழி பிறந்துள்ளது.

இந்தக் கண்டுபிடிப்பு எப்படி அறிவியல் பூர்வமாக சாத்தியமானது?

குறிப்பிட்ட கருந்துளையின் அதீதமான ஈர்ப்பு விசை காரணமாக இதைச் சுற்றியுள்ள வெளி வளைக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக இந்த கருத்துக்கு அப்பாலுள்ள எதிரொளியும்  வளைக்கப் பட்டுள்ளதுஇதனால் எக்ஸ்.எம்.எம்-நியூட்டன் மற்றும் நுஸ்டார் ஆகிய தொலைநோக்கிகள் நிலையிலிருந்து இதைக் காண முடிந்தது என்று அய்ரோப்பிய விண்வெளி முகமை தெரிவிக்கிறது.

இந்தக் குறிப்பிட்ட கருந்துளை எங்கு உள்ளது?

நமது பால்வெளி பேரடைக்கு அருகிலுள்ள  பேரவையின் மய்யத்தில் இந்தக் கருந்துளை அமைந்துள்ளது.

நமது சூரியனின் நிறையைப் போல சுமார் ஒரு கோடி மடங்கு நிறையை உடையது.

இந்தப் பேரடை பூமியிலிருந்து சுமார் 180 கோடி ஒளி ஆண்டுகள் தூரத்தில் அமைந்துள்ளது என்று அய்ரோப்பிய விண்வெளி முகமை தெரிவிக்கிறது.

ஆல்பர்ட் அய்ன்ஸ்டைனுக்கும் இந்தக் கண்டுபிடிப்புக்கும் என்ன தொடர்பு?

அறிவியலாளர் ஆல்பர்ட் அய்ன்ஸ்டைன்ஈர்ப்பு விசை கருந்துளைகளைச் சுற்றியுள்ள ஒளியை எவ்வாறு வளைக்கும் என்பதைக் கணித்து தமது பொதுச் சார்புக் கோட்பாட்டில் விளக்கியிருந்தார்.

இந்த கண்டுபிடிப்பு ஆல்பர்ட் அய்ன்ஸ்டைனின் கணிப்பை மீண்டும் ஒருமுறை மெய்யாக்கும் வகையில் அமைந்துள்ளது.

இந்தக் கண்டுபிடிப்பு 'நேச்சர்அறிவியல் சஞ்சிகையில் பதிப்பிடப்பட்டுள்ளதுஇந்தக் குறிப்பிட்ட 'ஒளி மகுடம்எப்படி ஒளி மிகுந்த எக்ஸ்-கதிர்களை வெளியிடுகிறது எனும் புரியாத புதிரை அவிழ்ப்பதற்காக அறிவியலாளர்கள் தொடர்ந்து ஆய்வு செய்து வருகின்றனர்.

செவ்வாய், 6 ஜூலை, 2021

பூமியின் சகோதரிக் கோளை மீண்டும் ஆய்வு செய்யவிருக்கும் நாசா


பூமிக்கு மிகவும் அருகில் இருக்கும் கோளான வெள்ளி கோளுக்கு ஆராய்ச்சி செய்ய இரண்டு திட்டங்களை தேர்வு செய்துள்ளது நாசா. டாவின்சி மற்றும் வெரிட்டாஸ் என்று அழைக்கப்படும் இந்த திட்டங்கள் அவற்றின் அறிவியல் மதிப்பு மற்றும் அவற்றின் வளர்ச்சித் திட்டங்களின் சாத்தியக்கூறுகளின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. 500 மில்லியன் அமெரிக்க டாலர்கள் இதற்காக ஒதுக்கப்படும் என்றும் இந்த திட்டம் விண்ணில் 2028 - 2030 காலங்களில் ஏவப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

வீனஸ் கிரகம் பற்றி...?

பூமியில் இருந்து பார்க்கும் போது சந்திரனுக்கு அடுத்தபடியாக மிகவும் பிரகாசமாக காட்சியளிப்பது வெள்ளி கிரகம் ஆகும். அதன் அடர்த்தியான மேகங்கள் ஊடே வெளிச்சம் புகுந்து பிரதிபலிப்பது அதன் பிரகாசத்திற்கு காரணம் ஆகிறது. சூரியனுக்கு மிக அருகில் இருக்கும் இரண்டாவது கோளான இதனை நாம் பூமியின் இரட்டை கோள் என்றும் அழைப்பதுண்டு. இரு கோள்களும் ஒரே அளவில் இருப்பதால் நாம் இதனை புவியின் இரட்டை கோள் அல்லது சகோதரி என்று கூறுகிறோம் ஆனாலும் இவ்விரு கோள்களுக்கு இடையே வேறுபாடுகளும் உண்டு.

ஒன்று,கோளின் அடர்த்தியான வளிமண்டலம் வெப்பத்தை தக்க வைக்கிறது மற்றும் சூரியனுக்கு மிக நெருக்கமான கோளான புதனுக்குப் பின் வந்தாலும், இது சூரிய மண்டலத்தின் வெப்பமான கோள்  என்பதற்கு காரணமாக அது அமைகிறது. 471 டிகிரி செல்சியஸ் வரையிலும் இதன் வெப்பம் அதிகரிக்கலாம். இது காரியத்தையே உருக்கும் அளவுக்கு போதுமான வெப்பமாகும்.

சூரியனை சுற்றும் வெள்ளி கோள் முன்னோக்கி நகர்ந்தாலும் தன்னுடைய அச்சில் அது பின்னோக்கி சுழலுகிறது. இதனால் சூரியன் அந்தக்கோளில்  மேற்கில் தோன்றி கிழக்கில் மறைகிறது. பின்னோக்கி சுழலுவதால் வீனஸில் ஒரு நாள் என்பது புவி நாட்களில் 243 நாட்களுக்கு சமமாகும். வெள்ளி கோளுக்கு சுற்று வளையங்களும் துணைக் கோள்களும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மனிதர்கள் வெள்ளிக் கோளுக்குச் சென்றதுண்டா?

வீனஸின் கடுமையான சூழல் காரணமாக இதுவரை மனிதர்கள் யாரும் இங்கு பயணம் மேற் கொண்டதில்லை. விண்கலம் அனுப்பப்பட்ட போதி லும் அது மிக நீண்ட காலத்திற்கு பயனுடையதாக அமையவில்லை. வீனஸின் மேற்பரப்பில் நிலவும் வெப்பம் காரணமாக சிறிது காலத்திற்குள் எலெக்ட்ரானிக் கருவிகள் வெப்பம் அடைகின்றன. எனவே மனிதர்கள் அங்கு வாழ்வதற்கான வாய்ப்புகளே இல்லை என்று நாசா கூறுகிறது.

பல்வேறு நாடுகள் ஆளில்லா  செயற்கைக் கோள்களை இந்த கோளின் மீது ஆராய்ச்சி நடத்த அனுப்பப்பட்டுள்ளது. அந்த வகையில் ரஷ்யாவின் வெனேரா முதன்முறையாக அனுப்பப்பட்டது. ஆனால் அங்கு நிலவும் கடுமையான வெப்பம் காரணமாக நீண்ட நாட்கள் ஆராய்ச்சியில் ஈடுபட இயலவில்லை), நாசாவின் மகெல்லன் திட்டம் மூலம் வெள்ளி கிரகத்தை 90-94 காலங்களில் ஆய்வு செய்யப்பட்டது. நாசாவின் அகட்சுகி திட்டம் சுற்றுப் பாதையில் இருந்து வெள்ளிக்கோளை ஆய்வு செய்து வருகிறது.

தற்போதைய நாசாவின் திட்டங்கள் என்ன?

1992ஆம் ஆண்டு துவங்கிய நாசாவின் டிஸ்கவரி திட்டத்தின் ஒரு பகுதியாக இவ்விரண்டு திட்டங்களும் தேர்வு செய்யப்பட்டுள்ளன. ஆய்வாளர்களுக்கு குறைவான வளங்களைப் பயன்படுத்தும் மற்றும் குறைந்த வளர்ச்சி நேரங்களைக் கொண்ட சில பயணங்களைத் தொடங்க வாய்ப்பு அளிக்கிறது. இரண்டு தேர்வு களும் ஒன்பதாவது கண்டுபிடிப்பு திட்டத்தின் ஒரு பகுதியாகும், அவை 2019 இல் சமர்ப்பிக்கப்பட்ட திட்டங்களிலிருந்து செயல்பட உள்ளது.

Deep Atmosphere Venus Investigation of Noble gases, Chemistry and Imaging என்பதன் சுருக்கம் தான்DAVINCI+ . 1978ஆம் ஆண்டுக்கு பிறகு வெள்ளிக்கோளை ஆய்வு செய்வதற்காக அமெரிக்கா தலைமையில் செயல்படுத்தப்படும் முதல் திட்டம் இதுவாகும். இக்கோளின் உருவாக்கம் மற்றும் வளர்ச்சி ஆகிய பணிகளை இது மேற்கொள்ளும். . இந்த பணி இக்கோளின் அடர்த்தியான வளிமண்டலத்தை கடந்து, அவதானிப்புகளை மேற்கொண்டு, உன்னத வாயுக்கள் மற்றும் பிற உறுப்புகளின் அளவீடுகளை எடுக்கும் பணியை மேற்கொள்ளும். தனித்துவமான ஒரு புவியியல் அம்சத்தின் முதல் உயர் தெளிவுத் திறன் புகைப்படங்களை அனுப்புவதும் இதன் நோக்கமாகும். இது உலகில் டெக்டோனிக் தகடுகள் இருப்பது போன்று வெள்ளி கிரகத்தில் டிசெரெ என்ற அமைப்பு இருப்பதை ஆய்வு செய்யும்.

‘Venus Emissivity, Radio Science, InSAR, Topo graphy and Spectroscopy’என்பதன் சுருக்கம் தான் VERITAS என்று அழைக்கப்படுகிறது. இது அந்தக்கோளின் பரப்பினை ஆய்வு செய்து வரைபடமாக்கும் மேலும் புவியில் இருந்து அதனை வித்தியாசப்படுத்துவது என்ன என்பதையும் ஆராயும். வெரிட்டாஸ் ரேடருடன் வீனஸ் கோளின் சுற்றுப்பாதையில் ஆய்வு மேற்கொள்ளும். அதன் மூலம் வீனஸின் டோப்போகிராஃபியை முப்பரிணமான கட்டமைப்பு செய்ய வழி

வகுக்கும்.

இதன் மூலம் ஆராய்ச்சியாளர்களுக்கு அங்கிருக்கும் டெக்டோனிக் தகடுகள் மற்றும் செயல்பாட்டில் இருக்கும் எரிமலைகள் பற்றிய தரவுகளை வழங்கும். இது வீனஸில் இருக்கும் பாறைகளின் வகையை தீர்மானிக்க உதவும். அதே நேரத்தில் எரிமலைகள் வளிமண்டலத்தில் நீராவியை வெளியிடுகின்றனவா என்பதையும் தீர்மானிக்க இது உதவும்.

ஆராய்ச்சிக்கு ஏன் வெள்ளி தேர்வு செய்யப்பட்டது?

சூரிய குடும்பத்தில் எவ்வாறு கோள்கள் உருவானது என்பது தொடர்பான புரிதலை DAVINCI+ நமக்கு ஏற்படுத்தும் என்று நம்பப்படுகிறது. இரண்டு ஆராய்ச்சி முடிவுகளும் வெள்ளிக்கோ இன் மேக கூட்ட அடர்த்தியை பற்றியும் அங்கிருக்கும் எரிமலைகள் பற்றியும் அறிந்து கொள்ள உதவும். அங்கு உயிர்வாழதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து அறிந்து கொள்ளவும் இது உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

விண்வெளிக்கு செல்லும் ஆந்திர பெண் விஞ்ஞானி


கேப் கேனாவரல், ஜூலை 4- மனிதர்களை விண்வெளிக்கு சுற்றுலா அழைத்துச் செல்லும் போட்டியில் எலான் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம், அமேசான் நிறுவனர் ஜெப் பெசோ சின் புளூ ஆரிஜின் நிறுவனம் மற்றும் தொழிலதிபர் ரிச்சர்டு பிரான்சனின் விர்ஜின் கேலக்டிக் நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன. இதில், ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் வரும் செப்டம்பரில் முதல் முறையாக தனியார் விண்கலம் மூலம் மக்களை விண் வெளிக்கு சுற்றுலா அழைத்துச் செல்கிறது. பெசோஸ் நிறு வனம் வரும் 20ஆம் தேதி முதல் முறையாக மனிதர்களை ஏற்றிக் கொண்டு சோதனை ஓட்டமாக விண்வெளிக்கு விண் கலத்தை  அனுப்புகிறது. இதில், பெசோஸ், அவரது சகோதரர் உள்ளிட்டோர் பயணம் செய்ய உள்ளனர்.

இந்நிலையில், விண்வெளிக்கு பயணிப்பதில் தற்போது பெசோசை முந்த இருக்கிறார் சக போட்டியாளர் பிரான்சன். இவரது நிறுவனம் வரும் 11ஆம் தேதியே விண்வெளிக்கு விண்கலத்தை அனுப்ப இருப்பதாக அறிவித்துள்ளது. அதில், பிரான்சன், ஆந்திராவை சேர்ந்த சிரிஷா பண்ட்லா உட்பட 6 பேர் செல்கின்றனர். டெக்சாஸ், ஹூஸ்டனில் வளர்ந்த இந்திய வம்சாவளியான சிரிஷா ஜார்ஜ், வாஷிங்டன் பல்கலை யில் எம்பிஏ பட்டம் பெற்றவர். விர்ஜின் கேலக்டிக்கில் பணி யாற்றி வரும் இவர், விண்வெளி திட்டத்தில் முக்கிய பங் காற்றியவர்.

வெள்ளி, 11 ஜூன், 2021

ஆயிரம் ஆண்டுகள் உறைபனியில் இருந்து உயிர்த்தெழுந்த உயிரினம்

அறிவியல் அதிசயம்: 24 ஆயிரம் ஆண்டுகள் உறைபனியில் இருந்து உயிர்த்தெழுந்த உயிரினம்

டெலாய்டு ரோட்டிஃபர் (Bdelloid Rotifer)

பட மூலாதாரம்,PA MEDIA

சைபீரியாவில் 24 ஆயிரம்ஆண்டுகளாக பனியில் உறைந்திருந்த ஒரு நுண்ணிய பல செல் உயிரினம் மீண்டும் உயிர்த்தெழுந்துள்ளது என புதிய ஆராய்ச்சி ஒன்று கூறுகிறது.

ரஷ்யாவின் ஆர்டிக் பகுதியில் உள்ள அலீஸா ஆற்றில் இருந்து டெலாய்டு ரோட்டிஃபர் (Bdelloid Rotifer) என்கிற உயிரினத்தை விஞ்ஞானிகள் கண்டெடுத்தனர்.

கிரிட்டோபயோசிஸ் என்கிற உறைந்த நிலையில் பல ஆயிரம் ஆண்டுகளைக் கடந்த பின், இப்போது உருகிய பிறகு, எந்த வித பாலியல் ரீதியிலான உறவுகளுமின்றி, அந்த உயிரினத்தால் இனப்பெருக்கம் செய்து கொள்ள முடிந்தது.

இதற்கு முந்தைய ஆராய்ச்சியில் அந்த உயிரினம் 10 ஆண்டுகள் வரை உறைந்த நிலையில் உயிர் வாழ முடியும் என கூறப்பட்டிருந்தது.

'கரன்ட் பயாலஜி' என்கிற அறிவியல் சஞ்சிகையில் திங்கட்கிழமை வெளியான புதிய ஆராய்ச்சியில், இந்த உயிரினம் உறைபனியில் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகள் வரை உயிர் வாழும் எனக் கூறப்பட்டுள்ளது.

"ஒரு பல செல் உயிரினம் உறைபனியில் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு சேமித்து வைக்கப்படலாம், பிறகு மீண்டும் உயிர் பெறும் என்பதை தான் நாம் இந்த ஆராய்ச்சியில் இருந்து தெரிந்து கொள்ளும் செய்தி" என ரஷ்யாவில் இருக்கும் இன்ஸ்டிட்யூட் ஆஃப் பிசியோகெமிக்கல் அண்ட் பயாலஜிகல் ப்ராப்ளம்ஸ் இன் சாயில் சயின்ஸ் நிறுவனத்தைச் சேர்ந்த ஸ்டாஸ் மலவின் என்பவர் பத்திரிகை சங்கத்திடம் கூறினார்.

இந்த உயிரினம் எப்படி இந்த நிலையை அடைந்தது என்பதை தெரிந்து கொள்ள நிறைய ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என கூறினார். இந்த ஆராய்ச்சியை மேற்கொண்ட விஞ்ஞானிகள் பல உயிரினங்களை உறைய வைத்து, பிறகு பனியை உருகச் செய்து சோதனை மேற்கொண்டனர்.

உயிரினம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

டெலாய்டு ரோட்டிஃபர் எந்த காலத்தைச் சேர்ந்தது என சோதனைக்கு உட்படுத்திப் பார்த்த போது 23,960 முதல் 24,485 ஆண்டுகள் பழமையானது எனத் தெரிய வந்தது.

டெலாய்டு ரோட்டிஃபர்கள் உலகம் முழுக்க உள்ள நன்னீர் சூழலில் காணப்படும் ஒரு வகையான ரோட்டிஃபர் உயிரினம்.

இந்த உயிரினம் எந்தவித கடினமான சூழலையும் தாங்கக் கூடிய வல்லமை பெற்றது. உலகிலேயே கதிரியக்க எதிர்ப்புத் திறன் மிகுந்த உயிரினங்களில் இதுவும் ஒன்று என 'தி நியூ யார்க் டைம்ஸ்' பத்திரிகை குறிப்பிட்டு இருக்கிறது. குறைந்த அளவிலான ஆக்சிஜன், உணவின்றி வாழும் பட்டினி நிலை, அதீத அமிலத் தன்மை, பல ஆண்டுகளாக நீரின்றி வாழ்வது போன்ற மிகச் சவாலான சூழல்களையும் இந்த உயிரினம் எதிர்கொள்ளக் கூடியது என அச்செய்தியில் கூறபட்டு இருக்கிறது.

இதேபோல வேறு சில பலசெல் உயிரினங்களும் பல்லாயிரம் ஆண்டுகள் உறைந்த நிலையில் இருந்துவிட்டு, மீண்டும் உயிர்பெற்று திரும்புவதாக செய்திகள் வெளியாகி இருக்கின்றன. அதில் நெமடோட் புழு, சில செடிகள் மற்றும் சில பாசிகள் அடங்கும்.

காணொளிக் குறிப்பு,

24 ஆயிரம் ஆண்டுகளுக்காக உறைபனியில் புதைந்திருந்த உயிரினம்

ஞாயிறு, 25 ஏப்ரல், 2021

ஆக்ஸிஜன்உற்பத்திசெய்யமுடியாதா? பற்றாக்குறையின் பின்னணி என்ன? கார்ப்பரேட்டுகளின்சதுரங்கஆட்டம்

#ஆக்ஸிஜன்உற்பத்திசெய்யமுடியாதா? பற்றாக்குறையின் பின்னணி என்ன? #கார்ப்பரேட்டுகளின்சதுரங்கஆட்டம்

ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் டெல்லி அழிந்து விடும் என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறுகிறார். ஆக்ஸிஜன் பற்றாக்குறையினால் மட்டுமே இந்தத் தருணத்தில் செத்து மடிந்த மக்கள் எத்தனை பேர்? ஆக்ஸிஜன் உற்பத்தி நிலையங்களை ஜெர்மனியில் இருந்து இந்தியா இறக்குமதி செய்து வருவதாக செய்தித்தாள்களில் செய்திகள் வருகின்றன.

#இந்தியாவில்ஆக்ஸிஜன்தயாரிப்பது அப்படி என்ன கம்ப சூத்திரமா?

நிச்சயமாக இல்லை. சுவாசத்திற்கு பயன்படும் ஆக்ஸிஜன் 100 சதவித ஆக்ஸிஜன் கிடையாது என்பது பலருக்குத் தெரியாது. நாம் இங்கே குறிப்பிடும் ஆக்ஸிஜன் என்பது வெறும் அழுத்தப்பட்ட காற்றுதான். காற்றில் ஆக்ஸிஜன் 21 சதவிகிதம் இருக்கிறது , 77 சதவிகிதம் நைட்ரஜன், மீதி இரண்டு சதவிகிதம் இதர வாயுக்கள். அழுத்தப்பட்ட ஆக்ஸிஜனிலிருந்து தூசுத் துகள்கள், கார்பன்டைஆக்ஸைடு, ஈரம் ஆகியவற்றை நீக்கிவிட்டு அழுத்தப்பட்ட கனமான உலோக உருளைகளில் அடைக்கப்படுகிறது. சுத்திகரிப்பு என்பது சிக்கலான ரசாயன செயல்பாடு அல்ல. சிலிக்கா ஜெல்லை (இது ஒரு மண்வகை - Porus silicondioxide) ஒரு உருளையில் அடைத்து அந்த உருளையின் வழியாக அழுத்தப்பட்ட காற்று சென்றால் சிலிக்கா ஜெல் ஈரத்தை மட்டும் உறிஞ்சி விடும். இன்னொரு சந்தர்ப்பத்தில் ஈரமான சிலிக்கா ஜெல்லை வெப்பக்காற்று செலுத்தி மீட்டெடுக்கலாம். அதே போல் கார்பன்டைஆக்ஸைடையும் உறிஞ்சும் பல ரசாயனப் பொருட்கள் உண்டு. எனவே ஆக்ஸிஜன் சிலிண்டர் என்று கூறப்படுவது சுத்திகரிக்கப்பட்ட காற்றே.

#ஆக்ஸிஜன்தயாரிப்பில்உள்ள பிரச்சினை தான் என்ன?

அழுத்தப்பட்டு சுத்திகரிக்கப்பட்ட காற்றை எடுத்துச் செல்லும் கனமான உலோக உருளைகள் போதிய அளவு உற்பத்தி செய்யப்படவில்லை என்பதே உண்மை. ஓராண்டுகளுக்கு மேலாக நாம் கொரானாவால் அல்லலுற்றுக் கொண்டிருக்கும்போது இதற்கான திட்டமிடல் இருந்திருக்க வேண்டாமா? ஒரு பெருந்தொற்று பேரவலத்தை ஒரு சமூகம் சந்தித்துக் கொண்டிருக்கும்போது, சந்தையே எல்லாவற்றையும் தீர்மானிக்கட்டும் என்று ஒரு அரசு விட்டுவிட்டு வேடிக்கை பார்க்கிறது. அரசு தலையிட்டு உற்பத்தியை ஒழுங்குபடுத்தும் வேலையைச் செய்ய மறுக்கிறது.

இந்த மார்ச் மாதத்தில் மட்டும் உலோக உருளைகளும் ரெகுலேட்டர்களும் அதிகம் உற்பத்தி செய்திருந்தால் கூட இந்த நிலை ஏற்பட்டிருக்காது:காற்றை அழுத்தி தூசை நீக்கி ஈரத்தையும் கார்பன்டைஆக்ஸைடையும் நீக்கி உருளையில் அடைப்பதற்கு எதற்கு ஸ்டெரிலைட் ஆலை? ஒரு சாதாரண ஷெட் போதும். அதற்குள் இரண்டு மூன்று கம்ப்ரஸர்களை நிறுவி இதர உபகரணங்களையும் நிறுவினால் போதும். நகரப் பகுதிகளில் 25 சதுர கிலோமீட்டர் பரப்பளவுக்கு இதைப் போன்று ஆக்ஸிஜன் உற்பத்தி ஸ்தலத்தை நிர்மானித்தால் இந்த ஷெட்களை சுற்றியுள்ள பகுதிகளில் இருக்கும் மருத்துவமனைகளிலிருந்து உருளைகளைக் கொண்டு வந்து ரீ ஃபில் செய்து கொள்ளலாம்,

காற்றை 150 Kg/Cm2 அளவுக்கு அழுத்தும் திறன் உள்ள கம்ப்ரஸர்கள் வேண்டும். மூன்று நான்கு கம்ப்ரஸர்கள் இணையாக இயங்க வேண்டும். ஒன்று பழுதானாலும் மற்ற மூன்று இயங்கும். அப்படியே சுத்திகரிக்கும் உருளைகள் வழியாக காற்று சென்று இறுதியாக நிரப்பு உருளைகளில் (Refill Cylinder) வந்து சேர வேண்டும். 25 சதுர கிலோமீட்டர்களில் 50 மருத்துவமனைகள் இருக்குமா?

மருத்துவமனைகள் பற்றாக்குறை என்றாலும்கூட வீடுகளுக்கு எடுத்து சென்று வீட்டிலேயே ஆக்ஸிஜன் கொடுக்கலாம். ஒரு நிரப்பு உருளையின் கொள்ளவு 20 லிட்டர் என்றால் 5,000 சிலிண்டர்கள் நிரப்புவதற்கு உற்பத்தி செய்ய 1 லட்சம் லிட்டர் காற்று தேவை, அதாவது 100 கனமீட்டர் காற்று. இந்த காற்றை 150 கிலோவிற்கு அழுத்தினால் மொத்த கொள்ளவு 15000 nmcft ஆகும். இதை எளிதில் 60 x 40 அதாவது 2400 சதுர அடி பரப்பளவுள்ள இடத்தில் அமைத்துவிடலாம்.

பெருந்தொற்று இரண்டு ஆண்டுகளில் சமாளிக்கப்பட்டுவிட்டால் நமக்கு ஏராளமான அலுமினிய உருளைகள் உபரியாக மிஞ்சும். இது ஒரு பெரிய சூழலியல் பிரச்சினை கிடையாது. அலுமினிய உருளைகளை உருக்கி வேறு அலுமினியப் பொருட்கள் செய்துவிடலாம். பிளாஸ்டிக் போன்று மறுசுழற்சி செய்வதில் ஏற்படும் சிக்கல்கள் அலுமினியத்தில் கிடையாது. கம்ப்ரஸர்கள் இதரத் தேவைகளுக்கு பயன்படும்.

#இதற்காகஇந்தியாவின்தென்கோடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை திறக்க வேண்டுமா? வெளிநாடுகளில் இருந்து #இறக்குமதிசெய்யவேண்டுமா?

இந்தியாவின் ஒரு மூலையில் அதாவது தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையில் அழுத்தப்பட்ட காற்றை தயாரித்து தண்டவாளத்தில் எடுத்துச் செல்லக்கூடிய புல்லட்களில் அடைத்து பல்லாயிரம் கிலோமீட்டர்கள் கொண்டு சென்றால் எவ்வளவு பொருள் விரயம்? இது யாருக்கு லாபத்தை தரும்?

சுய விளம்பரத்துக்காக மட்டும் இயங்கும் மனிதர்களைக்கொண்ட அரசு இதை செய்யுமா? கார்ப்பரேட்களின் லாபத்தை மட்டுமே மனதில் இறுத்தி செயல்படும் அரசு இதைச் செய்யுமா?

#கட்டுரையாளர்குறிப்பு
எஸ். விஜயன், மூத்த பொறியாளர். ஏராளமான உள்நாட்டு, வெளிநாட்டு அனுபவம் கொண்டவர். தென் சென்னை மாவட்டச் செயற்குழு உறுப்பினர் தமிழ்நாடு அறிவியல் இயக்கம்.

#மின்னம்பலம்இணையஇதழில்
வெளியான கட்டுரை