வியாழன், 5 மார்ச், 2020

மனிதர்கள் வாழக்கூடிய புதிய விண்வெளி கண்டுபிடிப்பு

பூமியை விட இரண்டு மடங்கு அதிக அளவிலான எதிர்காலத்தில் மனிதர்கள் வாழக்கூடிய விண்வெளியை விண்வெளி வானியலாளர்கள் கண்டறிந்துள்ளனர். அதனை பற்றி விரிவாக பார்ப்போம்.

பூமியிலிருந்து 124 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள 2-18  என்றழைக்கபடும் எக்சோபிளானட் கிரகமானது பூமிக்கும் நெப்டியூனுக்கும் இடையே உள்ளது.

இது பூமியை விட கணிசத்தில் பெரியதாகவும் நெப்டியூனை விட சிறியதாவும் காணப்படுகிறது. இதன் ஆரம் 2.6 மடங்கு மற்றும் பூமியின் நிறை 8.6 மடங்கு ஆகும். 2-18 கிரகமானது 2-18 என்ற சிவப்பு விண்மீனை சுற்றி வரும் நிலையில் மனித வாழ்விடத்திற்கு சரியான தூரத்தில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

வளிமண்டலத்தின் அளவும், அதன் அடிப்பகுதி நிலை களும் தெரியாத நிலையில் வளிமண்டலத்தில் ஹைட்ரஜன் நிறைந்த நீர் நீராவி இருப்பதாகவும் வானியலாளர்கள் கண் டறிந்துள்ளனர்.

எக்சோபிளானட் கிரகத்தில் ஹைட்ரஜன் உறைகளின் தடிமன் மற்றும் ஆழத்தினை கண்டறிந்ததில் அதன் அதிகபட்ச அளவு 6 சதவீதமாகும் என்று உறுதி செய்துள்ளனர். வளிமண்டலத்தில் கணிசமான அளவு  நீராவியுடன் ஹைட்ரஜன் அதிகம் இருப்பதால் அம்மோனியா,மீத்தேன் போன்ற வேதிப்பொருட்களின் அளவு குறைவாகவே இருக்கும்.

இதற்கு உயிரியல் செயல்பாடுகளே காரணமாக இருக்க முடியும் என்பதை ஆராய்ந்து வருகின்றனர். வளிமண்டலத்தின் கலவை மற்றும் கட்டமைப்பை விரிவுபடுத்தி கட்டுப்படுத்து வதற்கு வளிமண்டல கலவை, அளவு மற்றும் நிறையை அவதானித்து வந்துள்ளனர்.

எண் மாடலிங் மற்றும் புள்ளிவிவர முறைகளை பயன்படுத்தி வளிமண்டலத்தின் உள் அமைப்பு மற்றும் வெப்ப இயக்கவியலை கட்டுபடுத்தினர்.

எக்சோபிளானட் 2-18 கிரகமானது மனிதர்கள் வாழும் நிலைகளை கொண்டிருக்கும் என்பதற்கான எந்த ஆதாரமும் இல்லாத நிலையில் எதிர்கால அவதானிப்புபடி ஜேம்ஸ் வெப் என்ற விண்வெளி தொலைநோக்கி மூலம் தங்களது கண்டுபிடிப்பு பற்றி மேற்கொண்டு தெரிவிக்கிறோம் என்று விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் ஆய்வறிக்கையில் தெரிவித்துள்ளனர்.

- விடுதலை நாளேடு 5 .3.20

பூச்சிகளை உட்கொள்ளும் தாவரம்!

பூச்சியுண்ணும் தாவரங்கள் ஊனுண்ணித் தாவரங்கள்  என்றும் அழைக்கப்படுகின்றன. இவை சிறு விலங்குகள், பூச்சிகள் அல்லது புரோட்டோசோவாக்களையோ உட்கொள் வதன் மூலம் தங்களுக்குத் தேவையான ஊட்டச்சத்துகளைப் பெறுகின்றன. இத்தா வரங்கள் பெரும்பாலும்  பூச்சிகளையும் கணுக் காலிகளையுமே குறிவைக்கின்றன. பூச்சிகளைப் பிடிப்பதற்கு ஏற்றபடி இத்தாவரங்கள் சிறப் பான வடிவங்கள் மற்றும் பாகங்களைப் பெற்றுள்ளன.

இத்தாவரங்களின் இலைகள் அல்லது இலைகளின் பகுதிகள் இந்த சிறப்பு அமைப்பு களைப் பெற்றுள்ளன. இவற்றிலிருந்து ஒரு வகையான செரிப்பு நீர் சுரந்து பூச்சிகளைச் செரித்துவிடுகிறது.

ஜாடிச் செடிகளில் ஒரு வகையான திரவம், தண்ணீர் உள்ளது. இதில் விழும் பூச்சிகளைத் தாவரம் சீரணித்துக்கொள்கிறது. பொதுவாக ஊட்டச்சத்துகள் (குறிப்பாக நைட்ரஜன்) இல்லாத பகுதிகளிலேயே (சதுப்பு நிலங்களில்) இத்தாவரங்கள் வளர்கின்றன.

எனவே, பூச்சிகளின் உடலிலுள்ள புரதத்திலிருந்து நைட்ரஜனை  பெறுகின்றன.

ஹூக்கர் என்ற தாவரவியல்  அறிஞர் பூச்சிகளைச் செரிப்பது என்பது  விலங்குகளைப் போல தாவரங்களிலும் நடக்கிறது.

மனிதனில் வயிற்றில் சுரக்கும் நொதிகள் போல தாவரங் களிலும் சுரக்கிறது என்றார்.

பூச்சி உண்ணும் தாவரங்கள் உலகம் முழுவதும் உள்ளன. இவ்வகைத் தாவரங்கள் ஆறு குடும்பங்களை உள்ளடக்கி 16 பேரினத் துடன் சுமார் 450 வகைச் செடிகளையும், 30-க்கு மேற்பட்ட கலப்பினச் செடிகளையும் கொண் டுள்ளது.

இந்தியாவில் மூன்று குடும்பங்களும், நான்கு பேரினங்களும் 39 வகைச் செடிகளும் உள்ளன. இத்தாவரங்கள் பூச்சிகளைப் பிடிக்கப் பின்பற்றும் முறைகள் மிகவும் வியப்பானவை.

செரிக்க வைக்கும் நொதி அல்லது பாக்டீரியா ஆகியவற்றைக்கொண்ட உருண்டை இலைகள் மூலம் பிடித்தல்; பசை போன்ற நீர்மத்தை இலையில் கொண்டிருப்பதன் மூலம் இலையின் மீது அமரும் உயிரைப் பிடித்தல்; இலைகளை வேகமாக அசைத்துப் பிடித்தல்; வெற்றிடத்தை ஏற்படுத்தி இரையை உறிஞ்சிப் பிடித்தல்; செரிமான உறுப்புக்கு இரையைச் செலுத்தும் வண்ணம் உள்

நோக்கிய முட்களைப் பயன்படுத்திப் பிடித்தல் போன்ற வகைகளில் பூச்சிகளை உண்ணுகின்றன.

- விடுதலை நாளேடு 5.3.20

செவ்வாய், 3 மார்ச், 2020

விண்வெளியில் புதியகோள் கண்டுபிடிப்பு

வாசிங்டன்,மார்ச் 2, பூமியை விட இரண்டு மடங்கு அதிக அளவிலான புதிய கோளை விண்வெளி வானியலாளர்கள் கண்டறிந்துள்ளனர்.  பூமியிலிருந்து 124 ஆண்டுகள் தொலைவில் உள்ள ரி2-18தீ  என்றழைக்கப்படும் எக்ஸோபிளானட் கோளானது பூமிக்கும் நெப்டியூனுக்கும் இடையே உள்ளது. இது பூமியை விட  பெரியதாகவும் நெப்டியூனை விட சிறியதாவும் காணப்படுகிறது.

இந்த கோளானது ரி2-18 என்ற சிவப்பு நடசத்திரத்தை சுற்றி வரும் நிலையில் மனித வாழ்விடத்திற்கு சரியான தூரத்தில் இருப்பதாகவும் வளிமண்டலத்தின் அளவும், அதன் அடிபகுதி நிலைகளும் தெரியாத நிலையில் வளிமண்டலத்தில் அய்ட்ரஜன் நிறைந்த நீர் நீராவி இருப்பதாகவும் வானியலாளர்கள் கண்டறிந்துள்ளனர். எக்ஸோபிளானட் ரி2-18தீ கோளானது மனிதர்கள் வாழும் நிலைகளை கொண்டிருக்கும் என்பதற்கான எந்த ஆதாரமும் இல்லாத நிலையில் எதிர்கால அவதானிப்புபடி ஜேம்ஸ் வெப் என்ற விண்வெளி தொலைநோக்கி மூலம் தங்களது கண்டுபிடிப்பு பற்றி மேற்கொண்டு தெரிவிக்கிறோம் என்று விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் ஆய்வறிக்கையில் கூறியுள்ளனர்.

- விடுதலை நாளேடு, 2.3. 20

ஞாயிறு, 1 மார்ச், 2020

பருவநிலை மாற்றம் என்றால் என்ன?

புவி வெப்பமயமாதல் உலகில் பேரழிவை ஏற்படுத்தும் என்று விஞ்ஞானிகள் கூறு கின்றனர்.

மனிதர்களின் செயல்பாடுகளின் காரணமாக கரியமில வாயு வெளியேற்றம் அதிகரித்து, அதன் காரணமாக புவியின் வெப்பநிலையும் அதிகரித்துள்ளது. இதைத்தொடர்ந்து அதீத வானிலை மாற்றம், துருவ பகுதிகளில் உள்ள பனிப்பாறைகள் உருகுதல் உள்ளிட்ட மோசமான மாற்றங்கள் நிலவி வருகின்றன.

பருவநிலை மாற்றம் என்றால் என்ன?

பூமியின் சராசரி வெப்பநிலை 15 டிகிரி செல்சியஸ்.ஆனால் அது கடந்த காலங்களில் குறைவாகவும், அதிகமாகவும் இருந்து வந் துள்ளது.

பருவநிலையில் இயற்கையாகவே மாற் றங்கள் இருந்து வந்தாலும், சமீபத்திய ஆண்டுகளில் பூமியின் வெப்பநிலை முன் னெப்போதுமில்லாத வகையில் வேகமாக உயர்ந்து வருவதாக விஞ்ஞானிகள் தெரிவிக் கின்றனர்.

சூரியனின் ஆற்றலில் குறிப்பிட்ட பங்கை பூமியின் வளிமண்டலம் எவ்வாறு உட்கிர கித்து கொள்கிறது என்பதை விளக்கும் பசுமை இல்ல விளைவுடன் இது இணைத்து பார்க்கப்படுகிறது.

பூமியின் நிலப்பரப்பிலிருந்து மீண்டும் விண்வெளிக்கு திரும்ப அனுப்பப்படும் சூரிய னின் ஆற்றல், பூமியின் வளிமண்டலத்தில் உள்ள பசுமை இல்ல வாயுக்களால் உறிஞ்சப்பட்டு அனைத்து திசைகளிலும் மீண்டும் உமிழப்படுகிறது.

இதன் காரணமாக, பூமியின் வளிமண்ட லத்தை ஒட்டிய பகுதிகள் மட்டுமின்றி, பூமியிலுள்ள நிலப்பரப்பின் வெப்பநிலையும் அதிகரிக்கிறது. இந்த செயல்முறை மட்டும் தொடர்ந்து நடைபெறவில்லை என்றால், பூமியின் வெப்பநிலையில் கடும் வீழ்ச்சி ஏற்பட்டு மனிதர்கள் உள்ளிட்ட உயிரி னங்கள் எதுவும் வாழ முடியாத சூழ்நிலை ஏற்படும்.

இயற்கையாக சூரிய ஆற்றலை கொண்டு பூமியின் வளிமண்டலத்தில் நடக்கும் செயல் முறையோடு, பூமியின் நிலப்பரப்பில் இருந்து தொழிற்சாலைகள் மற்றும் விவசாயத்தின் மூலம் வெளியிடப்படும் வாயுக்களும் கூடுதலாக இணைந்து அதிகளவிலான ஆற் றல், பசுமை இல்ல விளைவின்போது சிதறடிக்கப்படுவதால் பூமியின் வெப்பநிலை உயருவதாக விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.

பருவநிலை மாற்றத்திற்கான

ஆதாரம் என்ன?

தொழிற்புரட்சி பரவலாவதற்கு முன்ன தாக இருந்ததை விட தற்போது பூமியின் வெப்பநிலை ஒரு டிகிரி செல்சியஸ் அதி கரித்துள்ளதாக உலக வானிலை மய்யம் கூறுகிறது.

பூமியின் மிகவும் வெப்பம் மிக்க ஆண்டு களின் பட்டியலில் முதல் 20 இடங்களை, கடந்த 22 ஆண்டுகளுக்கு இடைப்பட்ட ஆண்டுகளே ஆக்கிரமித்துள்ளன. 2015 முதல் 2018 வரையிலான நான்கு ஆண்டுகளும் அதில் அடக்கம்.

2005 முதல் 2015 வரையிலான பத்தாண்டு காலத்தில் உலகம் முழுவதும் கடல் நீரின் மட்டம் சராசரியாக ஆண்டுக்கு 3.6 மில்லி மீட்டர் என்ற கணக்கில் அதிகரித்துள்ளது.

நீரின் வெப்பநிலை அதிகரிக்க, அதிகரிக்க அதன் பரும அளவு அதிகரிப்பதே இது போன்ற மாற்றங்களுக்கு மிகப் பெரிய காரணமாக உள்ளது.

இருப்பினும், பனிப்பாறைகள் உருகுவதே கடல்நீர் மட்ட உயர்வுக்கு முக்கிய காரணமாக தற்போது பார்க்கப்படுகிறது. துருவ பகுதிகள் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளிலுள்ள பனிப்பாறைகள் அதிகளவில் உருகி வருகின்றன.

1979 முதல் இதுவரையிலான கால கட்டத்தில் துருவ பகுதியில் உள்ள கடலில் உள்ள பனிப்பாறைகளின் இருப்பில் கடுமையான வீழ்ச்சி காணப்படுகிறது.

மேற்கு அண்டார்டிக்காவில் பனிக் கட்டிகள் உருகி வருவதையும் செயற்கைக் கோள் தரவு காட்டுகிறது. சமீபத்திய ஆய்வில் கிழக்கு அண்டார்டிகாவும் தனது பனிப்பாறைகளை இழக்கத் தொடங்கியிருக்கலாம் என்று சுட்டிக்காட்டப் பட்டுள்ளது.

மாறிவரும் காலநிலை ஏற்படுத்தும் தாக் கங்கள், தாவரங்கள் மற்றும் விலங்குகளிலும் காணப்படுகின்றன. தாவரங்கள் முன்ன தாகவே பூ விடுவது மற்றும் பழம் விளையும் பருவம்/ காலம் மற்றும் விலங்குகளின் வாழிடங்களில் ஏற்படும் மாற்றங்கள் ஆகியவை இதில் அடங்கும்.

- விடுதலை நாளேடு 20 2 20

சனி, 29 பிப்ரவரி, 2020

"காற்றில் இருந்து தயாரிக்கப்படும்" புரோட்டீன் உணவு

காற்றில் இருந்து புரோட்டீன் தயாரிக்கும் உத்தியை ஃபின்லாந்து நாட்டு விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

இது பத்தே ஆண்டுகளில் சோயாவுக்கு (புரதச்சத்து நிறைந்த உணவு) போட்டியாக இருக்கும் என்று அவர்கள் கூறுகின்றனர்.

நீரில் இருந்து மின்சாரம் மூலம் பிரிக்கப்படும் ஹைட்ரஜனுடன், மண் பாக்டீரியாவை சேர்ப்பதன் மூலம் இந்தப் புரோட்டீன் உருவாக்கப்படுகிறது.

இதற்கான மின்சாரம் சூரியசக்தி அல்லது காற்றாலை மூலம் கிடைக்கும் என்றால், பசுமைக்குடில் வாயு (Greenhouse gas) உற்பத்தி எதுவும் இல்லாமல் உருவாக்கப்படும் உணவாக இது இருக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

இந்தக் கனவு நனவாகும் போது, விவசாயம் தொடர்பான பல பிரச்சினைகளுக்குத் தீர்வு காண உலகிற்கு உதவக் கூடியதாக இது இருக்கும்.

கடந்த ஆண்டு ஹெல்சின்கியின் புறநகர் பகுதியில் உள்ள சூரியசக்தி உணவு தயாரிப்பு முன்னோடி நிலையத்திற்கு நான் சென்றிருந்த போது, அதை விரிவாக்கம் செய்ய ஆராய்ச்சி யாளர்கள் நிதி திரட்டிக் கொண்டிருந்தனர்.

தங்களுக்கு 5.5 மில்லியன் யூரோக்கள் முதலீடாகக் கிடைத்துள்ளது என்று இப்போது அவர்கள் கூறுகின்றனர். மின்சாரத்துக்கான செலவின் அளவைப் பொருத்து, தசாப்தத்தின் இறுதிக்குள் இதன் உற்பத்தி விலை சோயா உற்பத்தி விலைக்கு இணையாக மாறிவிடும் என்று அவர்கள் கூறுகின்றனர்.

2025 ஆம் ஆண்டுக்குள்ளேயே கூட இது சாத்தியமாகலாம் என்கின்றனர்.

சோலெயின் எனப்படும் - புரதம் நிறைந்த மாவு தயாரிப்பதற்கான சில தானியங்களை நான் சாப்பிட்டுப் பார்த்தேன். அதில் எந்த ருசியும் இல்லை. அப்படி உருவாக்குவதற்குத்தான் விஞ்ஞானிகள் திட்டமிட்டுள்ளனர்.

எல்லா வகையான உணவுகளுடனும் சேர்க்கக் கூடிய ருசியற்ற கூடுதல் சேர்க்கை உணவுப் பொருளாக இது இருக்க வேண்டும் என்று அவர்கள் விரும்புகின்றனர்.

நிலக்கடலை, அய்ஸ்கிரீம், பிஸ்கட்கள், பாஸ்டா, நூடுல்ஸ், சாஸ் அல்லது ரொட்டியுடன் சேர்ப்பது போன்று இது பயன்படுத்தப்படலாம்.

செயற்கை முறையில் மாமிசம் அல்லது மீன் இறைச்சி உருவாக்குவதற்கான அடிப்படைப் பொருளாக, திசுக்கள் வளர்வதற்கான தளமாக இதைப் பயன்படுத்தலாம் என்றும் கண்டுபிடிப் பாளர்கள் கூறுகின்றனர்.

மழைக் காடுகளில் வளர்க்கப்படும் சோயாவுக்கு பதிலாக இதனை கால்நடைகளுக்கு உணவாக கொடுக்கலாம்.

திட்டமிட்டபடி முயற்சிகள் வெற்றிகரமாகத் தொடர்ந்தால், உலகளாவிய தேவையைப் பூர்த்தி செய்யும் அளவுக்கு, பல ஆண்டுகள் முன்னதாகவே புரோட்டீன் உற்பத்தியை அதிகரித்துவிட முடியும். ஆனால், இது நடக்காமல் போகவும் வாய்ப்பு உண்டு. செயற்கை முறையிலான உணவு தயாரிப்பை நோக்கிய பல ஆய்வுத் திட்டங்களில் இதுவும் ஒன்று.

- விடுதலை நாளேடு 6 2 20

120 நாட்களுக்கு மேல் உணவருந்தாமல் உயிர்வாழும் உயிரினம்!

பல ஆயிரம் ஆண்டுகளாக வாழ்ந்து வரும் ஓர் உயிரினம் பனிக்கரடி. பெரும்பா லும் நிலத்தில் பிறந்தாலும் பனிக்கட்டிகள் தான் இதன் இருப்பிடம். பருவநிலை மாற்றத்தால் பனிக்கரடி இருப்பிடங்கள் காணாமல் போவது துயரம்.

இந்நிலையில் பனிக்கரடிகளுக்கே உரித்தான  வினோத  வழக்கம் ஒன்றை மருத்துவர்கள் ஆராய்ந்து வருகின்றனர். பொதுவாக பனிக்கரடிகள் உறைபனி வரு வதற்கு முந்தைய மாதங்களில், அளவுக்கு அதிகமாக இரைகளை உண்டு கொழுத்து விடுகின்றன. கடுமையாக பனி கொட்ட ஆரம்பித்ததும் தங்களின் குகைகளுக்குள் போய் ஒடுங்கிக் கொள்கின்றன. இந்த நிகழ்வை ‘ஹைபர்னேஷன்’ என விஞ்ஞானிகள் அழைக்கின்றனர். குகைக்குள்ளேயே நீண்ட உறக்கம், அசைவில்லாமல் படுத்திருப்பது என்று நான்கு மாதங்களைக் கழித்து, இளைத்துப் போய் வெளியே வரும். அந்த நான்கு மாதங்களில், உயிர் வாழ அது, உடலில் உள்ள மிகையான கொழுப்பை பயன்படுத்திக் கொள்ளும்.

விஞ்ஞானிகளுக்கு ஒரு ஆச்சரியம் என்னவெனில், பனிக் கரடி தசைகளுக்கு வேலை கொடுக்காமல் பல மாதங்கள் இருந்தாலும், தசைகளின் செயல்பாடு பாதிக்கப்படாமல் ஆரோக்கியமாகவே இருப்பது எப்படி என்பது தான்.

அண்மையில்,அமெரிக்காவிலுள்ள யூட்டா பல்கலைக்கழக விஞ்ஞானிகள்,  ஹைபர் னேஷனில் இருக்கும் வழக்க முள்ள சில அணில், எலி, முள்ளம்பன்றி போன்ற விலங்குகளை ஆராய்ந்தனர். அதில், அவற்றின் மரபணுவில் உள்ள தனித் தன்மைகளைக் கண்டறிந்துள்ளனர்.

இதை ,  பூமியிலிருந்து செவ்வாய் போன்ற கோள்களுக்கு பயணிக்கும் விண்வெளி வீரர் கள், பல மாதங்கள் அசையாமல் படுத்திருக்க நேரும் நோயாளிகள் போன்றவர்களின் தசைகளில் பாதிப்பு களைத் தடுக்கப் பயன்படுத்தலாம் எனவும் விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.

- விடுதலை நாளேடு 6 2 20

வெள்ளி, 28 பிப்ரவரி, 2020

தேசிய அறிவியல் தினம் (பிப்.28ஆம் தேதி)

தேசிய அறிவியல் தினம் இன்று நாடு முழுவதும் கொண்டாடப் படுகிறது. இதையொட்டி பள்ளிகள், அறிவியல் மய்யங்களில் நிகழ்ச் சிகள் நடத்தப்படுகின்றன. அறிவியல் துறையில் பெண்களின் பங்களிப்பு என்பது இந்தாண்டு கொண்டாட்டத்தினுடைய மய்யக் கருத்தாக உள்ளது.

"ராமன் விளைவு" கண்டறியப் பட்ட பிப்ரவரி 28-ஆம் தேதியே தேசிய அறிவியல் தினமாக கொண் டாடப்படுகிறது.  இந்த தினம், கடந்த 1986-ஆம் ஆண்டில் இருந்து கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

புகழ்மிக்க அறிவியலாளரான சர் சி.வி. ராமனுக்கு ராமன் விளைவை கண்டுபிடித்ததால் 1930-இல் நோபல் பரிசு அளிக்கப்பட்டது.

டில்லி விஞ்ஞான் பவனில் இன்று நடைபெறும் விழாவில் அறிவியல் துறையில் மகளிரின் பங்கு குறித்த நிகழ்ச்சிகள் நடைபெறும். இதில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் கலந்து கொண்டு முக்கிய பெண் அறிவியலாளர்களுக்கு பரிசு களை வழங்கி கவுரவிக்கிறார்

தேசிய அறிவியல் தினம் குறித்து அறிந்து கொள்ள வேண்டிய முக்கிய தகவல்கள்:

1. தேசிய அறிவியல் தகவல் தொழில்நுட்பத்திற்கான கவுன்சில் கடந்த 1986-ஆம் ஆண்டு பிப்ரவரி 28-ஆம் தேதியை தேசிய அறிவியல் தினமாக அறிவிக்க வேண் டும்  என கேட்டுக் கொண்டது. இதை  மத்திய அரசும் ஏற்று, அன்று தேசிய அறிவியல் தினமாக அறிவித்தது.

2. அறிவியல் மற்றும் அதன் பயன்பாட்டை மக்கள் மத்தியில் எடுத்துச் செல்வதுதான் இந்த தேசிய அறிவியல் தினத்தின் நோக்கமாகும்.

3. முதன் முறையாக 1987, பிப் ரவரி 28-ஆம்தேதி தேசிய அறி வியல் தினம் கொண்டாடப்பட்டது.

4. நடப்பாண்டில் 'அறிவியலில் பெண்களின் பங்கு' என்பது மய்யக் கருத்தாக இருக்கிறது.

5. அறிவியல் மய்யங்கள், அறிவியல் ஆய்வகங்களில் தேசிய அறிவியல் தினம் கொண்டாடப் படுகிறது. இதற்கான ஏற்பாடுகளை என்.சி.எஸ்.டி.சி. எனப்படும் அறிவியல், தகவல் தொழில் நுட்பத் திற்கான கவுன்சில் கவ னிக்கிறது.

6. அறிவியலை செம் மைப்படுத்துதலுக்காக அறிவியல் மற்றும் தொழில் நுட்பத்துறை கடந்த 1987-ஆம் ஆண்டு முதல் பரிசுகளை வழங்கி வருகிறது.

7. ஒளி ஓர் ஒளிபுகும் ஊடகத்தின் ஊடே செல்லும் போது, சிதறடிக் கப்பட்டு அதன் அலைநீளத்தில் மாறுதல் ஏற்படுகிறது. இதனை கண்டுபிடித்ததால் சர் சி.வி. ராம னுக்கு இயற்பியலுக்கான நோபல் பரிசு 1930-இல் வழங்கப்பட்டது.

8. நாட்டிற்கு பெருமை தேடித் தந்ததால் சர்  சி.வி. ராமனுக்கு 1954-இல் பாரத ரத்னா விருதை வழங்கி மத்திய அரசு கவுரவித்தது.

- விடுதலை நாளேடு 28. 2.20