வெள்ளி, 28 பிப்ரவரி, 2020

தேசிய அறிவியல் தினம் (பிப்.28ஆம் தேதி)

தேசிய அறிவியல் தினம் இன்று நாடு முழுவதும் கொண்டாடப் படுகிறது. இதையொட்டி பள்ளிகள், அறிவியல் மய்யங்களில் நிகழ்ச் சிகள் நடத்தப்படுகின்றன. அறிவியல் துறையில் பெண்களின் பங்களிப்பு என்பது இந்தாண்டு கொண்டாட்டத்தினுடைய மய்யக் கருத்தாக உள்ளது.

"ராமன் விளைவு" கண்டறியப் பட்ட பிப்ரவரி 28-ஆம் தேதியே தேசிய அறிவியல் தினமாக கொண் டாடப்படுகிறது.  இந்த தினம், கடந்த 1986-ஆம் ஆண்டில் இருந்து கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

புகழ்மிக்க அறிவியலாளரான சர் சி.வி. ராமனுக்கு ராமன் விளைவை கண்டுபிடித்ததால் 1930-இல் நோபல் பரிசு அளிக்கப்பட்டது.

டில்லி விஞ்ஞான் பவனில் இன்று நடைபெறும் விழாவில் அறிவியல் துறையில் மகளிரின் பங்கு குறித்த நிகழ்ச்சிகள் நடைபெறும். இதில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் கலந்து கொண்டு முக்கிய பெண் அறிவியலாளர்களுக்கு பரிசு களை வழங்கி கவுரவிக்கிறார்

தேசிய அறிவியல் தினம் குறித்து அறிந்து கொள்ள வேண்டிய முக்கிய தகவல்கள்:

1. தேசிய அறிவியல் தகவல் தொழில்நுட்பத்திற்கான கவுன்சில் கடந்த 1986-ஆம் ஆண்டு பிப்ரவரி 28-ஆம் தேதியை தேசிய அறிவியல் தினமாக அறிவிக்க வேண் டும்  என கேட்டுக் கொண்டது. இதை  மத்திய அரசும் ஏற்று, அன்று தேசிய அறிவியல் தினமாக அறிவித்தது.

2. அறிவியல் மற்றும் அதன் பயன்பாட்டை மக்கள் மத்தியில் எடுத்துச் செல்வதுதான் இந்த தேசிய அறிவியல் தினத்தின் நோக்கமாகும்.

3. முதன் முறையாக 1987, பிப் ரவரி 28-ஆம்தேதி தேசிய அறி வியல் தினம் கொண்டாடப்பட்டது.

4. நடப்பாண்டில் 'அறிவியலில் பெண்களின் பங்கு' என்பது மய்யக் கருத்தாக இருக்கிறது.

5. அறிவியல் மய்யங்கள், அறிவியல் ஆய்வகங்களில் தேசிய அறிவியல் தினம் கொண்டாடப் படுகிறது. இதற்கான ஏற்பாடுகளை என்.சி.எஸ்.டி.சி. எனப்படும் அறிவியல், தகவல் தொழில் நுட்பத் திற்கான கவுன்சில் கவ னிக்கிறது.

6. அறிவியலை செம் மைப்படுத்துதலுக்காக அறிவியல் மற்றும் தொழில் நுட்பத்துறை கடந்த 1987-ஆம் ஆண்டு முதல் பரிசுகளை வழங்கி வருகிறது.

7. ஒளி ஓர் ஒளிபுகும் ஊடகத்தின் ஊடே செல்லும் போது, சிதறடிக் கப்பட்டு அதன் அலைநீளத்தில் மாறுதல் ஏற்படுகிறது. இதனை கண்டுபிடித்ததால் சர் சி.வி. ராம னுக்கு இயற்பியலுக்கான நோபல் பரிசு 1930-இல் வழங்கப்பட்டது.

8. நாட்டிற்கு பெருமை தேடித் தந்ததால் சர்  சி.வி. ராமனுக்கு 1954-இல் பாரத ரத்னா விருதை வழங்கி மத்திய அரசு கவுரவித்தது.

- விடுதலை நாளேடு 28. 2.20

கருத்துகள் இல்லை :

கருத்துரையிடுக