வியாழன், 7 ஜூன், 2018

உறுப்புகளுக்கு இனி அழிவில்லை!

ஒவ்வொரு ஆண்டும் உடல் உறுப்புகளுக்காகக் காத்திருப்போரின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. உடல் உறுப்புகள் கிடைக் காததால் ஏற்படும் மரணங்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கிறது. உடல் உறுப்பு கொடை பற்றிய விழிப்பு உணர்வு பெருகிவந்தாலும்கூட,  சரியான நேரத்தில் பொருத்தமான  நபரிடமிருந்து உறுப்பு தானம் பெற முடியாமல் போவதுதான் இத்தகைய மரணங்களுக்கு காரணம். இந்தப் பிரச்சினைக்கு என்னதான் தீர்வு?

இப்போதைக்கு `க்ரையோபிரிசர்வேஷன்  முறை மட்டுமே இதற்குத் தீர்வு என்கிறது மருத்துவ உலகம். நம் வீட்டில் குளிர்சாதனப் பெட்டியில் வைக்கப்படும் பொருள் எப்படிக் குறிப்பிட்ட சில நாள்களுக்குக் கெட்டுப்போகாமல் பாதுகாக்கப்படு கிறதோ, அதே போன்றுதான் இம்முறையும் செயல்படுகிறது. உயிரிப்பொருள்களை மைனஸ் 70 முதல் மைனஸ் 196 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலைக்குக் குளிர்விப்பதன் மூலம் அந்தப் பொருள்களில் உள்ள வேதிப்பொருள்களின் செயல்பாடும், செல்களின் செயல்பாடும் கட்டுக்குள் வைக்கப்படுகின்றன. இதனால் எவ்வித மாற்றத் துக்கும் உள்ளாகாத இந்த உயிரிப்பொருள்களைத் தேவைப்படும் நேரத்தில் தேவையான இடத்தில் பயன்படுத்திக் கொள்ள முடியும். உடலின் செல்கள், உறுப்புகள் மட்டுமல்லாமல் முழு மனிதனையேகூட இந்த முறையில் எவ்வித மாற்றத்துக்கும் உட்படாமல் பாதுகாக்க முடியும் என்கிறது மருத்துவம்.

இது எப்படி சாத்தியம்? உறைய வைத்தல் மட்டுமே ஒரு பொருளைக் கெடாமல் பாதுகாக்குமா? செல்களை உறையவைக்கும்போது அதற்குள் இருக்கும் தண்ணீர் முதலில் உறைய ஆரம்பிக்கும். இதனால் செல்களுக்குள் இருக்கும் திரவத்தின் அடர்த்தியும் அளவும் குறைவதால் செல்லுக்குள் அழுத்தம் ஏற்பட ஆரம்பிக்கும். செல்லினுள் மூன்றில் இரண்டு பங்கு நீர் முழுவதும் உறைந்த பிறகு ஏற்படும் வெற்றிடத்தால் செல்லின் வடிவம் முழுவதும் உருக்குலையும் அபாயம் உள்ளதே? ஆம் உறையவைக்கப்பட்ட உயிரிப்பொருள்  வேறெந்த பாதிப்புக்கும் உள்ளாகக் கூடாது என்பதற் காகத்தான்   பாதுகாப்பான்கள் உதவுகின்றன. சுக் ரோஸ், ஆல்கஹால், கிளைகால், சில அமினோ அமிலங்கள் போன்றவை பாதுகாப்பான்களாக உபயோகப்படுத்தபடுகின்றன. இப்படிப் பதப் படுத்தப்பட்ட உயிரிப்பொருள்கள் திரவ நைட்ர ஜனில் பாதுகாக்கப்படுவதன் மூலம் நீண்ட நாள் களுக்கு சேமித்து வைக்கப்படுகின்றன. இப்படிப் பாதுகாக்கப்பட்ட பொருளை மீண்டும் உருகச் செய்வதன் மூலம் இயல்பு நிலைக்குக் கொண்டு வரமுடியும். ஆனால், இப்படிச் செய்யும்போது செல்லுக்குள் வெற்றிடம் ஏற்படுவதால் செல்கள் பாதிக்கப்படுவதற்கான சாத்தியங்களும் உண்டு.

அண்டார்டிகா பகுதியில் காணப்படும் அண் டார்டிகா பூச்சி ஒன்று மேற்கூறிய பிரச்சினைகள் எல்லாவற்றையும் எதிர்கொள்ளக் கூடியதாக இருப்பது அறியப்பட்டிருக்கிறது. தனது வாழ்க்கைச் சுழற்சியில் இந்தப் பூச்சி பல நாள்களை இப்படி உறைநிலையிலே கழிக்கிறது, எவ்வித பாதிப்பும் இல்லாமல்!  இந்தப் பூச்சிக்கு மட்டும் இது எப்படி சாத்தியம்? யோசித்தபோதுதான் பாதுகாப்பான்கள், அதாவது கிளிசராலும், குளுகோசும் இயல்பாகவே சுரப்பது கண்டறியப்பட்டது. இந்தப் புரதங்கள் பெரும்பான்மையான நீரை உடலிலிருந்து வெளி யேற்றும் சவ்வாகச் செயல்படுவதுடன், அழுத்தத் தைச் சமம் செய்வதும் கண்டறியப் பட்டிருக்கிறது. நீரின் அளவும், அழுத்தத்தின் அளவும் சமன் செய்யப்படுவதால் மேற்கூறிய பிரச்சினைகள் எதுவும் இல்லாமல் இந்தப் பூச்சிகளால் சமாளிக்க முடிவதை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். ஆனால், இது நீரைப் பெருமளவில் வெளி யேற்று வதால் மனிதர்களில் இந்த நடைமுறை சாத்தியப்பட வில்லை. பூச்சியின் உடலில் 70 சதவிகித அளவு நீரை வெளியேற்றினாலும் அதனால் உயிர் வாழ முடியும். மனித செல்களிலிருந்து 15 சதவிகிதத்துக்கும் அதிகமான நீரை வெளியேற்றமுடியாது என்னும் நிலைதான் மேற்கூறிய பிரச்சினைகளைத் தீர்க்க முடியாததாக மாற்றியுள்ளது.

இருப்பினும், க்ரையோபிரிசர்வேஷன்  முறை சில குறிப்பிட்ட வகை செல்களைத் தவிர மற்ற செல்களில் பாதிப்பில்லாமல் செயல்படுத்தக் கூடி யதுதான். இந்த நம்பிக்கையே இம்முறையை நடை முறைச் சாத்தியமாக்கியுள்ளது. மேற்கூறிய பிரச் சினைகளுக்கான தீர்வு எதிர்காலத்தில் கண்டறியப் படும் பட்சத்தில், டைனோசர் அழிந்தது போல எந்த இனமும் எதிர்காலத்தில் அழியாது. ஏனெனில் எல்லா செல்களையும் இந்த க்ரையோபிரிசர்வே ஷன் மூலம் பாதுகாத்து விடலாம்.
- விடுதலை நாளேடு, 31.5.18

சனி, 19 மே, 2018

சூரிய மண்டலத்தின் கதையை சொல்லும் ‘வினோத விண்கல்’




சூரிய மண்டலத்தில் கோள்களுக்கு அப்பால் உள்ள கைப்பர் திணை மண்டலத்தில் கார்பன் அதிகம் உள்ள விண்கல் ஒன்றை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

நெப்டியூன் கோளுக்கு அப்பால் இருக்கும் பனிக்கட்டி களின் குவியலை வட்டமடித்துக்கொண்டிருக்கும் அந்த விண்கல், அந்தக் கோளில் இருந்து உருவாகவில்லை என்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.

சுமார் 300 கிலோமீட்டர் அகலமுள்ள அந்த மாபெரும் விண்கல், சிறிய கோள்களான யுரேனஸ், நெப்டியூன், புளூட்டோ அல்லாத வேறு கோள்களின் சுற்று வட்டப் பாதையில் இருந்து, நமது சூரிய மண்டலத்தின் ஆரம்ப காலகட்டத்தில் பிரிந்து வந்திருக்கலாம் என்று கருதப் படுகிறது.

பூமியில் இருந்து நெடுந்தொலைவில் இருக்கும் அந்த விண்கல்லை ஆராய்ச்சி செய்யவே விஞ்ஞானிகளுக்கு பல ஆண்டுகள் ஆனது.

“முதலில் அந்த விண்கல் குறித்த தரவுகளைப் பெற்ற போது, நாங்கள் தவறான தகவல்களையே பெற்றுள்ளோம் என்று கருதினோம். ஏனெனில் அது கைப்பர் திணை மண்டலத்தில் இருக்கும் ஒரு விண்கல்லைப் போல இல்லை,” என்று அந்த ஆய்வில் பங்கேற்ற குயின்ஸ் பல்கலைக்கழகத்தின் டாம் செக்கல் பிபிசியிடம் தெரிவித் தார்.

கோள்களைக் கடந்து இருக்கும் சூரிய மண்டலத்தின் ஒரு பகுதியான கைப்பர் திணைமண்டலத்தில் இருக்கும் விண்கற்கள், தங்களின் மேற்பரப்பில் பனியால் அதிகம் மூடப்பட்டிருக்கும். ஆனால், 2004 ணிகீ 95 என்று பெயரிடப் பட்டுள்ள இந்த விண்கல் கார்பனை அதிக அளவில் கொண்டுள்ளது.

அதுமட்டுமல்லாது பில்லோசிலிகேட்ஸ்  என்று கூறப்படும் தாதுக்களையும் கொண்டுள்ளது.

இந்த விண்கல்லில் திரவ வடிவில் நீர் இருந்ததால், அதன் பாறைகளில் மாற்றங்கள் ஏற்பட்டன என்று கூறும் சக்கல், “2004 ணிகீ95 விண்கல் சூரியனில் இருந்து நீண்ட தூரத்தில் உள்ளது. அதன் வெப்ப நிலை மைனஸ் 235 டிகிரி செல்சியஸ். எனவே அதன் மேற்பரப்பில் பனி உறைந்த நிலையில் இருக்கும்.

இதற்கு முன்பு திரவ வடிவில் இருந்தது என்றால், அந்த விண்கல் முன்னொரு காலத்தில் சூரியனுக்கு அருகில் உருவாகி இருக்க வாய்ப்பு உள்ளது என்றும் அதன் வெப்பம் அதிகமாக இருந்தது என்றும் தெரிய வருகிறது,” என்கிறார்.

மான்செஸ்டர் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ரியான் ஜோன்ஸ், “கைப்பர் திணைமண்டலத்தில் உள்ள ஒரு விண்கல்லில் பில்லோசிலிகேட்ஸ் தாதுக்கள் இருப்பது கண்டறியப்பட்டது இதுவே முதல்முறை,” என்று கூறு கிறார்.

சூரிய மண்டலம் எவ்வாறு தோன்றியது என்பதை விளக்கும் கோட்பாடுகளில் ஒன்றான ‘கிராண்ட் டேக் அனுமானம்‘  தொடக்க காலத்தில் சூரிய மண்டலம் கொந்தளிப்பு மிகுந்த பிரதேசமாக இருந்ததாகக் கூறுகிறது. அப்போது வியாழன் மற்றும் சனி ஆகிய கோள்கள் சூரியனுக்கு அருகில் நகர்ந்து சென்று, மீண்டும் தற்போது இருக்கும் சுற்றுவட்டப்பாதைகளில் நிலைபெற்றன.

இந்த நிகழ்வுகளின்போது, விண்ணில் இருந்த பெரும் அளவிலான வாயுக்களால் உண்டான விண்கற்கள், சூரிய மண்டலத்துக்கு வெளியே தூக்கி வீசப்பட்டிருக்கலாம். அதன்பின் அவை அந்த இடங்களிலேயே நிலைகொண் டிருக்கலாம். 2004 ணிகீ 95 விண்கல் அந்த அனுமானதுடன் ஒத்துப்போகிறது.

2004 ணிகீ95 விண்கல் போலவே பல பொருட்கள் கைப்பர் திணைமண்டலத்தில் இருந்தாலும் அவை குறித்த போதிய தகவல்களை திரட்ட முடியவில்லை என்கிறார் செக்கல். நாசாவின் நியூ ஹாரிசான்ஸ்  ஆய்வுக் கலம் ஜனவரி 1, 2019 அன்று அல்டிமா தூல் எனும் விண்கல்லை சென்றடையவுள்ளது.

அது சூரிய மண்டலத்துக்கு வெளியே அமைந்துள்ள விண் பொருட்கள் பற்றிய தரவுகளை அறிய முடியும்.

அண்டார்டிகாவில் 27,200 கோடி டன் அதிகரித்த பனிப்பொழிவு



அண்டார்டிகாவில் தற்போது நிலவும் பனிப்பொழிவு 200 ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததைவிட கடுமையாக இருப்பதாக அறிவியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

அதாவது 1801-1810 ஆகிய பத்தாண்டுகளில் பெய்த பனிப்பொழிவைவிட 2001-2010 ஆகிய பத்தாண்டுகளில் பெய்த பனிப்பொழிவின் அளவு 27 ஆயிரத்து 200 கோடி டன் (272 பில்லியன் டன்) அதிகரித்துள்ளதாக அந்த ஆய்வு கூறுகிறது.

பிரிட்டிஷ் அண்டார்டிக் சர்வே குழுவினர் நடத்திய அந்த ஆய்வு முடிவுகளை, அதில் பங்குபெற்ற லிஸ் தாமஸ், வியன்னாவில் நடைபெற்ற அய்ரோப்பிய புவி அறிவியல் ஒன்றியத்தின் பொதுச் சபைக் கூட்டத்தில்  சமர்ப்பித்தார்.

அந்தப் பனிக் கண்டத்தில் 79 இடங்களில் தோண்டி எடுக்கப்பட்ட பனிக்கட்டிகள் மூலம் கடந்த காலங்களில் உண்டான பனிப்பொழிவு குறித்து அவர்கள் ஆய்வு மேற்கொண்டனர்.

அந்த ஆய்வில் கூடுதல் பனி நீரின் அளவு சாக்கடலின் பரப்பளவைப் போல இரு மடங்கு இருப்பதை அவர்கள் கண்டறிந்தனர்.

நியூசிலாந்து நாட்டின் நிலப்பரப்பு முழுவதையும் ஒரு மீட்டர் ஆழமுள்ள நீரில் மூழ்கடிக்க இந்த நீர் போதுமானது.  பருவநிலையில் வெப்பம் அதிகரிப்பதால் பனிப்பொழிவு அதிகரித்துள்ளதாக லிஸ் தாமஸ் கூறுகிறார்.

1992 முதல் கடல் மட்டம் அதிகரித்ததில், அண்டார்டிக் கண்டத்தில் உருகிய பணிகள் 4.3 மில்லி மீட்டர் உயர்வுக்கு பங்கு வகித்திருப்பதாக தங்களின் சிறந்த மதிப்பீடுகள் தெரிவித்துள்ளதாக என்று அவர் கூறுகிறார்.

கூடுதல் பனிப்பொழிவு கடல் மட்டத்தைத் தாழ்த்தி இருந்தாலும், அண்டார்டிகாவில் ஓரங்களில் உண்டாகும் பனி இழப்பைத் தடுக்கப் போதுமானதல்ல என்று அங்குள்ள செய்தியாளர்கள் கூறுகின்றனர்
- விடுதலை நாளேடு, 17.5.18

வியாழன், 3 மே, 2018

வெடித்து விரட்டும் அதிசய எறும்புகள்!



எறும்புகள் கூட்டமாக செயல்படக்கூடியவை என்பதும், கூட்டத்தின் நலனுக்காக பல தியாகங் களை செய்யக்கூடியவை என்பதும் தெரிந்தது தான்.

ஆனால், தெற்காசிய நாடுகளில் சில வகை எறும்புகள், தங்கள் கூட்டம் எதிரிக்கு இரையாகாமல் தடுக்க, தங்கள் உடலை வெடித்துச் சிதறச் செய்கின்றன என்பது, பூச்சியியல் வல்லுனர்களுக்கு ஆச்சரியத்தை தந்தது. ஆனால், 1935க்குப் பின், இத்தகைய எறும்புகள் இருப்பதற்கான ஆதாரமே கிடைக்கவில்லை.

எனவே, 2016 வாக்கில், ஆஸ்திரியா, தாய்லாந்து, போர்னியோ உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த விஞ்ஞானிகள், தென்கிழக்காசிய காடுகளில் ஆராய்ச்சி நடத்தினர். அப்போது, எதிரிகளிடமிருந்து தங்கள் புற்றிலிருக்கும் சக எறும்புகளைக் காக்க, சில எறும்புகள் தங்கள் உடலை வெடித்துச் சிதறச் செய்வது உண்மை தான் என, அவர்கள் கண்டறிந்தனர்.

அத்தகைய எறும்பினங்களை மேலும் ஆராய்ந்தபோது, வெடித்துச் சிதறும் எறும்புகளின் சுரப்பிகளில் உள்ள திரவத்தின் விஷம் அல்லது விரும்பத்தகாத தன்மை, எதிரிகளை புற்றுக்குள் வரவிடாமல் விரட்டியடிப்பது தெரிய வந்தது.

- விடுதலை நாளேடு, 3.5.18

வெள்ளி, 30 மார்ச், 2018

செவ்வாய் கிரகத்தில் விலங்குகளின் மந்தை! அதிர்ச்சி அளிக்கும் புகைப்படம்


செவ்வாய் கிரக மேற்பரப்பில் ஆயிரக்கணக்கான உயிரி னங்கள் மொத்தமாக மேய்வது போன்ற ஒரு காட்சி இடம் பெற்று உள்ளது.

செவ்வாய் கிரகத்தில் தண்ணீர் இருக்கிறதா? அங்கு உயிரி னங்கள் வாழ முடியுமா? என்ற ஆராய்ச்சி நீண்ட காலமாக நடந்து வருகிறது. இந்த ஆராய்ச்சியின் ஒரு பகுதியாக, அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா, 2 ஆண்டுகளுக்கு முன்பு, கியூரியாசிட்டி ரோவர் என்ற விண்கலத்தை செவ்வாய் கிரகத்துக்கு அனுப்பி வைத்தது.

செவ்வாய் கிரகத்தில் உள்ள காட்சிகளை படம் பிடித்து அனுப்புவதற்காக, அந்த விண்கலத்தில், மாஸ்ட்கேம் என்ற கேம ராவும் பொருத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், ரோவர் விண்கலம் செவ்வாய் கிரக நிலப்பரப்பில் உள்ள காட்சிகளை படம் பிடித்து பூமிக்கு அனுப்பி வருகிறது. இந்த படங்களை ஆராயும் நிபுணர்கள் அடிக்கடி  பல்வேறு விதமான யூகங்களையும்  வெளியிட்டு வருகின்றனர். இந்த நிலையில் சமீபத்தில் அனுப்பி உள்ள படத்தில் செவ்வாய் கிரக மேற்பரப்பில் ஆயிரக்கணக்கான உயிரினங்கள்  மொத்தமாக மேய்வது போன்ற ஒரு காட்சி இடம் பெற்று உள்ளது

இது குறித்து சதி கோட்பாட்டாளர் நீல் எவன்ஸ் கூறும் போது,  இது செவ்வாய்கிரகத்தில் உயிரினங்கள் வாழ்வதற்கு ஆதரா மாகும். இது செவ்வாய் கிரகத்தில் சுற்றுச்சூழல் ஆற்றலை வளர்க் கும் ஒரு நம்பிக்கையாகும் என்று நான் நம்புகிறேன். என கூறினார்.

இந்த படத்தை ஒரு மணி நேரத்திற்கும் மேலாக ஆராய்ந் தேன், பூமியின் இடங்களில் பறவைகள் பார்வைக் காட்சிகளுடன் அதை ஒப்பிடும்போது, அது வட துருவத்திற்கு அடுத்ததாக இருக்கிறது. இந்த படங்கள் அனைத்தும் குறைந்த ரிசுலேசன் கொண்டதாகும். இருந்தாலும் இதில் நீங்கள் தெளிவான நீர் கோடுகள் பார்க்க முடியும்,   ஏரிகள், தாவரங்கள் அல்லது சில வகையான வாழ்க்கை வடிவங்கள் நீர் ஆதாரத்தின் மீது வெளிப்படும் விதமாக இருக்கும்.

-  விடுதலை நாளேடு, 30.3.18

புதன், 21 மார்ச், 2018

ஸ்டீபன் ஹாக்கிங் - புரட்சிகர விஞ்ஞானி

பேரா. சோ.மோகனா

மாநிலத் தலைவர்,



தமிழ்நாடு அறிவியல் இயக்கம் பிரபஞ்சம் பற்றிய புரட்சிகரமான கருத்துக்களை முன் வைத்த 21ஆம் நூற்றாண்டின் மிகச் சிறந்த அறிவியல் விஞ்ஞானி - முற்போக்கு சிந்தனையாளர். தமது அறிவியல் கருத்துக்களை ஆதாரத்தோடு ஆணித்தரமாகக் கூறிய மாற்றுத் திறனாளி - முனைவர் ஸ்டீபன் ஹாக்கிங், இப்போது நம்மிடையே இல்லை. அவரது புரட்சிகர அறிவியல் மூளை, 2018, மார்ச் 14 அன்றோடு தனது சிந்தனையை நிறுத்திக்கொண்டது.

அவருக்கு உலகத்தின் சார்பில் வீரவணக்கம்.

இருபத்தியொன்றாம் நூற்றாண்டின் மிகச் சிறந்த விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங். இவர் இங்கிலாந்தின் மிகப் பெரிய கோட்பாட்டியல்/கருத்தியல் இயற்பியல் விஞ்ஞானியும், பிரபஞ்சவியல் விஞ்ஞானியுமாவார். அவரது அறிவியல் புத்தகங்கள் மற்றும் அவர் பொது இடங்களில் பேசும் தன்மை அவரைப் பெரிய புகழ் பெற்ற கல்வியியலாளராக்கிவிட்டது. அவரது கல்வித் தகுதிகள் சிபி, சிஙிணி, திஸிஷி, திஸிஷிகி   என்பதாகும். கலை களுக்கான ராயல் சங்கத்தின் கவுரவ உறுப்பினராக (பிஷீஸீஷீக்ஷீணீக்ஷீஹ் திமீறீறீஷீஷ் ஷீயீ லீமீ ஸிஷீஹ்ணீறீ ஷிஷீநீவீமீஹ் ஷீயீ கிக்ஷீ) இருக் கிறார். அமெரிக்க அய்க்கிய நாட்டின் மிகப்பெரிய குடியுரிமை விருதான சுதந்திரத்திற்கான குடியரசுத் தலைவர் பதக்கத்தையும் 2009இல் பெற்றுள்ளார்.

ஸ்டீபன் ஹாக்கிங் கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தில் கணிதவியலில் லூக்காசியன் பேராசிரியராக (லிநீணீவீணீஸீ றிக்ஷீஷீயீமீஷீக்ஷீ ஷீயீ விணீலீமீனீணீவீநீ)  பணிபுரிந்தார். அந்த பல்கலைக்கழகத்தில் 1979இல் பணிக்கு சேர்ந்த ஸ்டீபன் ஹாக்கிங், அங்கு சுமார் 30 ஆண்டுக்காலம் பணியாற்றினார். பின்னர் தனது 67ஆம் வயதில், 2009இல் பணி மூப்பு பெற்றார். சர் அய்சக் நியூட்டனுக்குப் பின், பெருமைமிக்க இந்தப் பொறுப்பு வகிப்பவர் இவரே. இப்போதும் ஹாக்கிங் கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தில் செயல்முறைக் கணிதவியல் மற்றும் கோட்பாட்டியல்/கருத்தியல் இயற்பியல் துறையின் கோட்பாட்டியல்/கருத்தியல் பிரபஞ்சவியல் மய்யத்தின் ஆராய்ச்சி இயக்குநராக பதவி வகித்து வந்தார். உலகின் பல நாடுகளில் உள்ள பல்கலைக்கழகங்கள் மற்றும் அறிவியல் ஆராய்ச்சி மய்யங்களின் கவுரவ விஞ்ஞான பதவிகளை வகித்து வந்தார்.

'ஹாக்கிங் கதிர்வீச்சு'

பிரபஞ்சவியல் மற்றும் குவாண்டம் ஈர்ப்புவிசை துறைகளில் ஏராளமான பங்களிப்பு செய்துள்ளார். குறிப்பாக, புரிந்து கொள்ளவே கடினமான கருந்துளை பற்றிய தகவல்களைச் சொன்னவரும் ஸ்டீபன் ஹாக்கிங்தான். "காலத்தின் ஒரு வரலாற்றுச் சுருக்கம் " (கி ஙிக்ஷீவீமீயீ பிவீஷீக்ஷீஹ் ஷீயீ ஜிவீனீமீ) என்ற உலகப்புகழ்பெற்ற நூலை, பலரும் வியக்கும் வண்ணம் பலருக்கும் புரியும்படி மிக எளிமையாக எழுதியதும் இவரே.

கருந்துளையிலிருந்து கதிர்வீச்சு வருகிறது என அறுதியிட்டு தகவல் தந்தவரும் ஹாக்கிங்தான். எனவே அது "ஹாக்கிங் கதிர்வீச்சு" என்றே அழைக்கப்படுகிறது.

கல்வியில் மோசம் என்று கணிக்கப்பட்ட மாணவர்

இத்தனை பெருமைகளையும் பெற்ற ஸ்டீபன் ஹாக்கிங்கின் பிறந்த தினம் 1942, ஜனவரி 8ஆம் நாள். ஹாக்கிங்கின் பிறப்பில் உள்ள சிறப்பு என்ன தெரியுமா? கலிலியோவின் 300ஆவது நினைவு தினத்தன்று பிறந்தவர் ஸ்டீபன் ஹாக்கிங். ஹாக்கிங்கின் தந்தை டாக்டர் பிரான்க் ஹாக்கிங் ஓர் உயிரியல் ஆராய்ச்சியா ளர். தாயின் பெயர் இசபெல் ஹாக்கிங். ஸ்டீபன் ஹாக்கிங் இவர்களின் முதல் குழந்தை. அப்போது இரண்டாம் உலகப்போர் நடந்துகொண்டிருந்த காலம். எனவே ஸ்டீபன் ஹாக்கிங் பெற்றோர் ஜெர்மனியின் குண்டு வீச்சுக்குப் பயந்து வட லண்டனிலிருந்து, கேம்பிரிட்ஜுக்கு இடம் பெயர்ந்தனர். ஹாக்கிங்குக்கு இரு சகோதரிகளும், ஒரு தத்து சகோதரரும் இருந்தனர்.

ஸ்டீபன் ஹாக்கிங் தனது பத்தாவது வயதுவரை பெண்கள் பள்ளியிலேயே படித்தார். அவருக்கு அறிவியலில் அதீத ஈடுபாடு இருந்தது. அவரின் ஈர்ப்பு சக்தியாய் இருந்தவர் ஹாக்கிங்கின் கணித ஆசிரியர் டீக்ரன் தாஹ்த (ஞிவீளீக்ஷீணீஸீ ஜிணீலீணீ) என்ற அர்மீனிய ஆசிரியரே. துவக்கத்தில் அரசின் உதவித் தொகையில் உயிரியல் படித்தார். பின்னர் இயற்பியல் படித்தார். ஆக்ஸ்போர்டில் பி.ஏ பட்டம் 1962இல் பெற்றதும், அங்கேயே தங்கி வானவியல் படித்தார். பின்னர் சூரியப் புள்ளிகள் பற்றியும், கோட்பாட்டியல் வானவியல் மற்றும் பிரபஞ்சவியல் பற்றிப் படித்தும் ஆராய்ச்சியும் செய்தார்.

இங்கே ஒரு ஆச்சரியமான தகவலை குறிப்பிட வேண்டியிருக்கிறது. ஸ்டீபன் ஹாக்கிங், 9ஆவது வயது வரை மிக மோசமான மாணவராக கணிக்கப்பட்டார். ஆனாலும் கூட அவரின் சில ஆசிரியர்கள், அவர் மிகப்பெரிய மேதையாக வரலாம் என்றும் கணித்தனர். அது உலகை வியப்பில் ஆழ்த்தும் என்றும் கூறினர். ஹாக்கிங்கின் இளமைக் காலத்தில் அவரது பட்டப் பெயர் அய்ன்ஸ்டீன் என்பதாகும். இது கொஞ்சம் வியப்பான தகவல்தான்.

மூளை மட்டுமே மிஞ்சியது

ஸ்டீபன் ஹாக்கிங்குக்கு 21 வயதாகும்போது, அவருக்கு நரம்பியல் நோய் பாதித்தது. அது கொஞ்சம் கொஞ்சமாக கை, கால் மற்றும் குரலை செயலிழக்கச் செய்தது. மூளையைத்தவிர வேறு எதுவும் பெரிதாக செயல்படவில்லை. அந்த நோயின் பெயர்   கினீஹ்ஷீக்ஷீஷீஜீலீவீநீ லிணீமீக்ஷீணீறீ ஷிநீறீமீக்ஷீஷீவீ (கிலிஷி).  அதன் பின் அவர் இரண்டு ஆண்டுகள் மட்டுமே வாழ்வார் என்று மருத்துவர்கள் கணித்தனர். அனைவரது கணிப்பையும் பொய்யாக்கி, அதன்பின் ஸ்டீபன் ஹாக்கிங் இன்னும் 50 ஆண்டுகள் வாழ்ந்தது மட்டுமின்றி பல உலக சாதனைகளையும் சாதித்து பெருமை தேடினார்.

ஆனால் ஸ்டீபன் ஹாக்கிங் இந்த நோய் வரும் முன்பு இளம்வயதில், மிகவும் தைரியம் மிக்க சவால் குணம் நிறைந்தவர். ஆக்ஸ்போர்டு படகுக் குழுவின் மிக முக்கிய உறுப்பினராக இருந்தார்; அதில் பெருமை யும், புகழும் பெற்றவர்.

"நான் இறப்பைப் பற்றி கவலைப்படவில்லை.கடந்த 55 ஆண்டுகளாக அது என்னைத் துரத்திக் கொண்டே இருக்கிறது. ஆனால் நான் சீக்கிரம் சாக விரும்பவில்லை. எதிலும் முதன்மையானவனாக இருக்கவே விரும்பு கிறேன்" என்று சமீபத்தில் சொல்லியிருந்தார் ஹாக்கிங். அதன்பின் அவருக்கு நிமோனியா நோய் தாக்கி, மிகவும் அபாய கட்டத்தில் இருந்தார். பிறகு அவருக்கு குரல்வளை அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அவர் பேசும் திறனை இழந்தார். அதன் பின்னர், அவருக்காக பேசும் குரல் உருவாக்கி  (ழிமீஷீஷிஜீமீமீநீலீ க்ஷிஷீவீநீமீஜிமீஜ் ஜீமீமீநீலீ ஹ்ஸீலீமீவீமீக்ஷீ) அதன்  மூலம்தான் கடைசித் தருணம் வரை அற்புதமாக, முன்பைவிட நன்றாக பேசிக் கொண்டிருந்தார். நிமிடத்திற்கு 15 வார்த்தைகள் அவரால் பேசமுடியும்.

ஸ்டீபன் ஹாக்கிங் குழந்தைகளுக்காக எழுதிய புத்தகத்தின் பெயர் "பிரபஞ்சத்துக்கான ஜார்ஜின் ரகசிய சாவி" (நிமீஷீக்ஷீரீமீ ஷிமீநீக்ஷீமீ ரிமீஹ் ஷீ லீமீ ஹிஸீவீஸ்மீக்ஷீமீ).

ஸ்டீபன் ஹாக்கிங் இருமுறை மணமுடித்து விவா கரத்து ஆகிவிட்டது. அவரது மறைவு தினத்திலும்கூட ஓர் அதிசயம்தான். மார்ச் 14, அறிவியலில் - கணிதத்தில்   றிமிணி பீணீஹ்  என்பதன் 30ஆவது  ஆண்டு ஆகும்.

எங்கே அந்தக் கடவுள்?

"புவிஈர்ப்பு விசை என்ற ஒன்று இருக்கும்போது, ஒன்றும் இல்லாததில் இருந்துதானே பிரபஞ்சம் உருவாகி இருக்க முடியும்" என்ற பிரபஞ்சம் உருவானது பற்றிய விளக்கத்துடன் கூடிய கருத்தைக் கூறி, கடவுள் இந்த பிரபஞ்சத்தை உருவாக்கவில்லை என ஆணித் தரமாக கூறிய ஸ்டீபன் ஹாக்கிங் என்ற தீவிர கடவுள் மறுப்பாளர் இன்று நம்மிடையே இல்லை.

புரட்சிகர இயற்பியல் விஞ்ஞானியும், பிரபஞ்சத்தை கடவுள் உருவாக்கவில்லை என்ற உண்மையை மேலும் உறுதியாக நிறுவியவருமான 21ஆம் நூற்றாண்டின் மிகச் சிறந்த விஞ்ஞானியான ஸ்டீபன் ஹாக்கிங் தனது 76ஆம் வயதில் இயற்கை எய்தியுள்ளார். அவரது மறை வினை அறிவியல் உலகம் எப்படி ஈடு கட்டப் போகிறதோ தெரியவில்லை. அந்த மாபெரும் விஞ்ஞானிக்கு, அவரின் அறிவியல் கொள்கையை நாம் கடைபிடிப்பதே அவருக்கு செலுத்தும் நன்றிக் கடனாகும்.

நன்றி: 'தீக்கதிர்' 15.3.2018

- விடுதலை நாளேடு, 17.3.18

ஞாயிறு, 18 மார்ச், 2018

அந்தோ, பிரபல விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங் மறைந்தாரே!



உலகம் போற்றும் வியத்தகு விஞ்ஞானியான ஸ்டீபன் ஹாக்கிங் (Stephen Hawking) அவர்கள் இன்று (14.3.2018) காலமானார் என்ற செய்தி அறிவியல் உலகத்திற்கும், அறிவு உலகத்தவர்களுக்கும் மிகவும் துன்பம் தரும் பெரும் செய்தியாகும்!

அவரது வாழ்வே பல விந்தைகளை உள்ளடக்கிய வாழ்க்கையாகும்!

சில மாதங்கள்கூட உயிருடன் இருக்கமாட்டார் என்று மருத்துவர்களால் கூறப்பட்ட அவரது வாழ்வு, இவ்வளவு காலம்வரை நீண்டதனால் மனித குலம், அறிவியல் ஆராய்ச்சித் துறை பெற்ற நன்மைகள் - சமூக நலன்கள் ஏராளம்! ஏராளம்!!

அத்துணை ஆபத்தான ‘விசித்திர' நோய் பாதிப் பினால் முடக்கப்பட்டு, சக்கர நாற்காலி வாழ்வினராகி, மணமுடித்து, குழந்தை பெற்ற வாழ்க்கையை வாழ்ந் தவர். அறிவியல் - மருத்துவவியலின் வியக்கத்தகுந்த வளர்ச்சியினால் கிடைத்த விழுமிய பயன் எத்த கையது என்பதை உலகுக்கு நீண்ட அவரது வாழ்வும், ஆயுளும் புகட்டின!

உலகம் என்பது படைக்கப்பட்டதல்ல என்ற அறிவியல் கருத்தின் அடிப்படையில் பரிணாம வளர்ச்சி மாற்றங்கள்மூலம் நிகழ்ந்ததன் விளைவு என்று எழுதிய அவர், முதலில் பெருவெடிப்பு (Big Bang) என்ற தத்துவத்தின் அடிப்படையில் உலகம் வளர்ந்து கிளைத்தது என்று கூறி,  பிறகு ‘கடவுள்' என்பதே கற்பனை என்பதை நான் முழுமையாக ஏற்பதோடு, கடவுள் நம்பிக்கை அறிவியலின் அடிப்படையில் ஆதாரமற்றது என்று தானும், மற்றொரு ஆய்வாளரும் இணைந்து எழுதிய ‘தி கிராண்ட் டிசைன்'  (The Grand Design)  என்ற நூலில் தெளிவாக எழுதினார்.

76 வயது வரை வாழ்ந்த அவரது வாழ்வு, எண் ணற்ற ஆய்வுகள் உலகுக்கும், எதிர்கால அறிவியல் தளத்திற்கும், ஆராய்ச்சியாளர்களுக்கும் பயன்படக் கூடியவை; அவர் தனது பாரம்பரிய ஆய்வுச் செல் வங்களை விட்டுவிட்டு  (Legacy)  விடை பெற்றுள்ளார்.

அவருக்கு நமது வீர வணக்கம்!

அவரை இழந்து தவிக்கும் அவரது குடும்பத்தின ருக்கும், அறிவியல் உலகக் குடும்பத்தினருக்கும் நமது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

 

 

கி.வீரமணி
தலைவர் ,    திராவிடர் கழகம்.

சென்னை 
14.3.2018

-விடுதலை நாளேடு, 14.3.18