வியாழன், 3 மே, 2018

வெடித்து விரட்டும் அதிசய எறும்புகள்!



எறும்புகள் கூட்டமாக செயல்படக்கூடியவை என்பதும், கூட்டத்தின் நலனுக்காக பல தியாகங் களை செய்யக்கூடியவை என்பதும் தெரிந்தது தான்.

ஆனால், தெற்காசிய நாடுகளில் சில வகை எறும்புகள், தங்கள் கூட்டம் எதிரிக்கு இரையாகாமல் தடுக்க, தங்கள் உடலை வெடித்துச் சிதறச் செய்கின்றன என்பது, பூச்சியியல் வல்லுனர்களுக்கு ஆச்சரியத்தை தந்தது. ஆனால், 1935க்குப் பின், இத்தகைய எறும்புகள் இருப்பதற்கான ஆதாரமே கிடைக்கவில்லை.

எனவே, 2016 வாக்கில், ஆஸ்திரியா, தாய்லாந்து, போர்னியோ உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த விஞ்ஞானிகள், தென்கிழக்காசிய காடுகளில் ஆராய்ச்சி நடத்தினர். அப்போது, எதிரிகளிடமிருந்து தங்கள் புற்றிலிருக்கும் சக எறும்புகளைக் காக்க, சில எறும்புகள் தங்கள் உடலை வெடித்துச் சிதறச் செய்வது உண்மை தான் என, அவர்கள் கண்டறிந்தனர்.

அத்தகைய எறும்பினங்களை மேலும் ஆராய்ந்தபோது, வெடித்துச் சிதறும் எறும்புகளின் சுரப்பிகளில் உள்ள திரவத்தின் விஷம் அல்லது விரும்பத்தகாத தன்மை, எதிரிகளை புற்றுக்குள் வரவிடாமல் விரட்டியடிப்பது தெரிய வந்தது.

- விடுதலை நாளேடு, 3.5.18

கருத்துகள் இல்லை :

கருத்துரையிடுக