செவ்வாய், 2 பிப்ரவரி, 2021

வேறு உலகத்தில் குடியேற வழிபிறந்தது டைட்டன் நிலவில் கரிம மூலக்கூறுகள் கண்டுபிடிப்பு




சனியின் துணைக்கோளான  டைட்ட னில்,  கரிம  மூலக்கூற்றை அறிவியலாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். நமது சூரிய மண் டலத்தில் அடர்த்தியான வளிமண்டலத் தைக் கொண்ட ஒரே நிலவு டைட்டன் மட்டும் தான். டைட்டனின் வளிமண்டலம் பூமியை விட நான்கு மடங்கு அடர்த்தி யானது. இப்போது, விஞ்ஞானிகள் அதில் ஒரு கரிம மூலக்கூற்றைக் கண்டுபிடித்து உள்ளனர். இது வேறுந்த வளிமண்ட லத்திலும் இதுவரை காணப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

புதிதாகக் கண்டறியப்பட்ட கரிமச் சேர் மங்கள், டைட்டனில் உயிர் உரு வாக்கத் திற்கு அடிப்படையாக இருக்கலாம் என்று அறிவியலாளர்கள் கூறியுள்ளனர். சிலியில்  உள்ள விண்வெளி தொலைநோக்கி ஆய்வு நிலையத்தில் இருந்து அங்கிருந்து வெளி வரும் கதிர்களை ஆய்வு செய்ததன் மூலம் இந்த கரிம மூலக்கூற்றைக் கண்டு பிடித்து உள்ளனர். 2003 இல் டைட்டனில் பென்சீன் கண்டு பிடிப்பு இதே முறையில் கண்டறியப் பட்டது ஆகும். இது டைட்டனின் வளிமண்டலத் தின் தனித்துவமான வேதியியலில் மூலக் கூறுகளை உள்ளதை நமக்குக் கண்டறிந்து கொடுத்தது. . டைட்டனில் கண்டறியப்பட்ட இரண்டாவது கரிம மூலக்கூறு இதுவாகும்.  டைட்டனில் உள்ள கரிம மூலக்கூறு, உயிரினத்தின் கட்டுமானத் தொகுதியாக இருக்கலாம் என்றும், இவை  டைட்டனில் உயிர் வாழ்க்கையை உருவாக்க ஒரு முன்னோடியாகச் செயல்பட உதவும் என்று கணிக்கப்பட்டுள்ளது. 

இந்த கலவை இதற்கு முன்னர் சூரியக் குடும்பத்தில் உள்ள எந்த கோள்களிலும் காணப்படவில்லை. அதே போல், எந்த இதர நிலவுகளிலும் வளிமண் டலம் காணப்படவில்லை என்பது குறிப் பிடத்தக்கது.

சைக்ளோப்ரோபெனிலிடின் மூலக் கூறு, இரண்டு ஹைட்ரஜன் அணுக்கள் இணைக்கப்பட்ட ஒரு வளையத்தில் மூன்று கார்பன் அணுக்களால் ஆனது. மேரிலாந் தில் உள்ள நாசாவின் கோடார்ட் விண் வெளி விமான நிலையத்தில் உள்ள வானியல் அறிவியலாளர் கோனார் நிக்சன், டைட்டானில் இந்த மூலக்கூற்றைக் கண்டுபிடித்தது வியப்பாக உள்ளது என்று கூறியுள்ளார். இந்த கண்டுபிடிப்பு மிகவும் முக்கியமானதும்  பல சாத்திய தகவல்களை வழங்கக்கூடியது என்றும் கூறியுள்ளார்.

இந்த மூலக்கூறு மிகவும் வினைத்திறன் வாய்ந்தது, இது வேறு எந்த துகள்களிலும் மோதினால், அது வேதியியல் ரீதியாக அவற்றுடன் விரைவாகச் சேர்ந்து புதிய சேர்மங்களை உருவாக்கும் திறன் கொண் டது. இதன் காரணமாக, இது முன்னர் விண்மீன் விண்வெளியில் வாயு மற்றும் தூசியின் மெல்லிய மேகங்களில் மட்டுமே காணப்பட்டது. தற்போது இது டைட்டன் வானத்தின் மேல் அடுக்குகளில் உள்ள வளிமண்டலத்திலும் உள்ளது

இது போன்ற வளைய வடிவ மூலக் கூறுகள் டி.என்.ஏ (ஞிழிகி) மற்றும் ஆர்.என்.ஏ (ஸிழிகி) போன்ற உயிர் அணுக்களுக்குத் தேவையான மூலக்கூறுகளின் கட்டுமானத் தொகுதிகளாகச் செயல்படுகின்றது. "இது மிகவும் சிறிய கட்டுமான தொகுதி, ஆனால் இதனுடன் பெரிய -பெரிய உண்மைகளை நாம் வெளிகொண்டு வர முடியும்" என்று நிக்சன் கூறுகிறார். இன்னும் சொல்லப் போனால் இது பூமி எப்படி உருவானது என்பதைத் தெளிவாகப் புரிந்துகொள்ள உதவும் என்று அவர் கூறியுள்ளார்.

"டைட்டனில் நுண்ணுயிரிகள் இருப்ப தாக யாரும் நம்புவதாக நான் நினைக்க வில்லை, ஆனால் டைட்டனில் இது போன்ற சிக்கலான மூலக்கூறுகளை உரு வாகுவதை நாம் கண்டுபிடிக்க முடியும். இந்த கண்டுபிடிப்பு பூமியில் உயிர் எவ்வாறு தொடங்கியது என்பது போன்றவற்றை நாம் புரிந்து அறிந்துகொள்ள உதவும்." என்று நிக்சன் உறுதியுடன் கூறியுள்ளார்.

டைட்டானின் நிலைமைகள் இப்போது நமது பூமியின்  தொடக்கத்தில்  எப்படி இருந்ததோ, அதைப் போலவே இருக்கிறது. இங்குள்ள ஒரே ஒரு வேறுபாடு ஆக்சிஜ னுக்கு பதிலாக மீத்தேன் வாயுவின் ஆதிக் கம் டைட்டனில் அதிகமாக உள்ளது.

இந்த நிலைமை உயிர்கள் உருவாகும் திறனைப் படிப்பதற்கும் உதவும். இப் பொழுது, பூமியிலிருந்து மட்டுமே நாம் இதைக் கண்காணிக்க முடியும், ஆனால் 2027 ஆம் ஆண்டில், டிராகன்பிளை விண் கலம் மூலம் டைட்டனின் மேற்பரப்பை நெருக்கமாக ஆராய நம்மால் முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சனிக்கோளைச் சுற்றிலும் இதுவரை 62 நிலவுகள் கண்டறியப்பட்டுள்ளன. அதில் மிகவும் பெரிய பூமியைப் போன்றே அடத்தியான வளிமண்டலம் கொண்டது டைட்டன் என்பது குறிப்பிடத் தக்கது. எதிர்காலத்தில் புவி அதிக வெப்பமாதல் ஏற்பட்டு வாழத் தகுதி இல்லாத நிலை உருவாகும் போது மனித இனம் டைட்டனில் குடியேறும் என்று வானியல் அறிஞர்களால் கணக்கிடப் பட்டுள்ளது குறிப்பிடத் தக்கது ஆகும்.

கருத்துகள் இல்லை :

கருத்துரையிடுக