புதன், 10 அக்டோபர், 2018

மருத்துவத்திற்கான நோபல் பரிசு அமெரிக்கா, ஜப்பானை சேர்ந்த 2 மருத்துவர்கள் தேர்வு



ஸ்டாக் ஹோல்ம், அக்.2 அமெரிக்கா, ஜப் பானை சேர்ந்த 2 மருத்துவர்களுக்கு மருத்துவ நோபல் பரிசு அறிவிக்கப் பட்டுள்ளது.

ஆண்டுதோறும் மருத்துவம், இயற்பியல், வேதியியல், அமைதி மற்றும் பொருளாதாரம் ஆகிய துறைகளில் மகத்தான சாதனை படைத்தவர்களுக்கு நோபல் பரிசு வழங்கப்படுகிறது. இந்த ஆண்டு மருத்துவத்திற்கான நோபல் பரிசு, அமெரிக்காவைச் சேர்ந்த மருத்துவர் ஜேம்ஸ் ஆலிசனுக்கும், ஜப்பானை சேர்ந்த மருத்துவர் தசுகு ஹோன்ஜோவுக்கும் அளிக்கப்படுகிறது.நோய் எதிர்ப்பு மருத்துவ நிபுணர்களான ஆலிசனும், ஹோன்ஜோவும் நோய் எதிர்ப்பு கட்டுப்படுத்துதலை தடுக்கும் புற்றுநோய் சிகிச்சையை கண்டுபிடித்தவர்கள். நோய் எதிர்ப்பு செல்கள், சில புற்றுநோய் செல்களிலிருந்து புரதத்தை உருவாக்கி அதன் மூலமாக புற்றுநோய் செல்களின் வீரியத்தை தடுத்து, அவற்றை அழிப்பதே இந்த மருத்துவ சிகிச்சையின் முறையாகும்.

இவர்களுக்கு 7.5 கோடி பரிசுத்தொகை பகிர்ந்தளிக்கப் படும். வரும் டிசம்பர் 10இல் ஸ்டாக்ஹோல்மில் நடக்கும் விழாவில் நோபல் பரிசு வழங்கப்படும்.

- விடுதலை நாளேடு, 2.10.18

கருத்துகள் இல்லை :

கருத்துரையிடுக