வெள்ளி, 16 ஜூன், 2017

தனித்துவமான மரபணு பெற்ற ஷெர்பா இன மக்கள்


நேபாள நாட்டைச் சேர்ந்த ஷெர்பா இன மக்களின் உடல்கூறு இயற்கையாகவே பிராண வாயுவை திறமையாக பயன்படுத்தும் வகையில் அமைந்துள்ளது என்று ஒரு ஆய்வில் தெரிய வந்துள்ளது.

ஷெர்பா இன மக்கள் தொடர்பான ஆராய்ச்சி படத்தின் காப்புரிமை தசை மாதிரிகளை கொண்டு சோதனை கடல் மட்டத்தில் உள்ள சூழலுக்குப் பழக்கப்பட்டவர்களைவிட இந்த ஷெர்பா இன மக்களின் பிராணவாயுப் பயன்பாட்டுத்திறன் அதிகமாக உள்ளது என அந்த ஆய்வு கூறுகின்றது.

உயரமான மலைப்பகுதிகளில் வாழும் மக்கள் எவ்வாறு அந்த இடத்திற்கு ஏற்றவாறு தங்களை தகவமைத்து கொள்கின்றனர் என்று கண்டறிய நடத்தப்பட்ட ஒரு ஆய்வில் இது தெரியவந்துள்ளது.

5,300 மீட்டர் உயரத்தில் உள்ள மலையேறுப வர்களின் தசை மாதிரிகள் எடுக்கப்பட்டு பரிசோதிக் கப்படுவது மற்றும் எவெரெஸ்ட் மலையின் அடிவார முகாமில் அவர்களை உடற்பயிற்சி செய்வதற்கான வண்டியை ஓட்ட வைப்பது போன்றவற்றை கொண்டதாக இந்த ஆய்வு அமைத்தது.

ஷெர்பா மக்களின் உடலில் உள்ள சாதகமான ஒரு மரபணு மாற்றமானது , அவர்களது இந்த நிலை களில் உயிர்வாழத் தேவையான ரசாயன வழிமுறை யை ( மெட்டபொலிசம்) அவர்களுக்கு அளிக்கின்றது என்கிறது அந்த ஆய்வு. இமயமலைப் பிரதேசத் தைப் பார்க்கவரு பவர்களை விட, குறைந்த பிராண வாயு உள்ள சூழலில் ஷெர்பா மக்கள் மட்டும் மூச்சுத் திணறலை சமாளிக்க முடிகிறது என்பது நீண்டகாலமாக ஒரு புதிராக இருந்தது குறிப்பிடத்தக்கதது.

உணவு உண்ண தூண்டும் பாக்டீரியாக்கள்

உயிரினங்களின் வயிற்றில் உள்ள பாக்டீரியாக்கள், உணவை செரிக்க உதவுவது நிரூபிக்கப்பட்ட உண்மை. ஆனால், அந்த பாக்டீரியாக்கள், தாங்கள் குடியிருக்கும் விலங்கின் மூளைக்கு தகவல் தெரிவித்து, இன்ன வகை உணவை உண்ணும்படி துண்ட முடியுமா... முடியும் என்கிறது, ‘புளோஸ் பயாலஜி’ இதழில் வெளியாகியுள்ள ஒரு ஆய்வுக் கட்டுரை.

ஈக்களின் வயிற்றிலுள்ள பாக்டீரியாக்களை வைத்து நடத்தப்பட்ட இந்த ஆய்வில், குறிப்பிட்ட உணவுகளை உண்ணும்படி, பாக்டீரி யாக்களால், ஈக்களின் மூளைக்கு தகவல் அனுப்ப முடியும் என, ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்

சோதனைக்கு சில துளி உலர் ரத்தம் போதும்! 



மருத்துவர்கள், நோயாளிகளிடமிருந்து ரத்த மாதிரிகளை எடுத்து, சேகரித்து, பாதுகாத்து வைப்பது, மிகவும் செலவு பிடித்த வேலை. இதற்கு, சுவீடனைச் சேர்ந்த உப்சாலா பல்கலைக்கழக விஞ்ஞானிகள் மாற்று வழிகளைத் தேடினர். சுவீடனிலும், டென்மார்க்கிலும், 30 ஆண்டுகளுக்கும் மேலாக சேமித்து வைக்கப்பட்டிருந்த, உலர் மற்றும் திரவ ரத்த மாதிரிகளை ஒப்பிட்டுப் பார்த்தனர்.

கடைசியில், உலர் ரத்த மாதிரிகளில், சில புரதங்கள் அழியத் துவங்கியிருந்தாலும், பெரும்பாலான ரத்த வேதியியல் அம்சங்கள் பாதுகாப்பாகவே இருந்ததை உறுதி செய்தனர். எனவே நோயறி தலுக்காக எடுக்கப்படும் ரத்த மாதிரிகளை, அதற்கென உள்ள காகிதத்தில், சில சொட்டுகளை ஒற்றி வைத்தாலே போதும் என்ற முடிவுக்கு, உப்சாலா ஆராய்ச்சியாளர்கள் வந்துள்ளனர்.

இதனால், மருத்துவ சோதனைக் கூடங்களுக்கு நோயாளிகள் போக வேண்டியதில்லை. வீட்டிலிருந்தபடியே, சில சொட்டு ரத்த மாதிரியை எடுத்து, காகிதத்தில் ஒற்றி, தபாலில் அனுப்பினாலே போதும் என்கின்றனர் ஆய்வாளர்கள். 
இந்த ஆராய்ச்சியின் முடிவுகள், ‘மாலிக்யூலர் ஆண்ட் செல்லுலர் புரோடியோமிக்ஸ்’ இதழில் வெளியாகியுள்ளன.

-விடுதலை,8.6.17

கருத்துகள் இல்லை :

கருத்துரையிடுக