ஞாயிறு, 2 செப்டம்பர், 2018

உயிருள்ள செயற்கை இதயத்தை உருவாக்க முடியுமா?



இதய நோய்களுக்கான மருந்துகள் சோதித்துப் பார்க்க, எலி போன்ற விலங்குகளின் இதயத்தைத் தான் மருத்துவர்கள் பயன்படுத்துவர். ஆனால், எலியின் இதயத்தில் வேலை செய்த மருந்துகள், எல்லா வேளைகளிலும் மனித இதயத்தில் வேலை செய்யும் என்பதற்கு உத்தரவாதமில்லை.

எனவே, ஹார்வர்டு பல்கலைக்கழக மருத் துவர்கள், மனித இதயத்தை ஆய்வகத்தில் உரு வாக்க முடியுமா என சோதித்து வருகின்றனர்.

அண்மையில், ஹார்வர்டு மருத்துவர் குழு, ஜெலாட்டின் போன்ற நுண் பொருட்களை வைத்து, இதயத்தின் இடது பக்க அறையைப் போன்ற வடிவத்தை உருவாக்கினர்.

அந்த வடிவத்தை சாரமாக வைத்து, நிஜ மனித இதயத்திலிருந்து செல்களை ஆய்வகத்தில் வளர்த்தனர்.

சில வாரங்களில், ஜெலாடின் கரைந்து போகவே, இதய செல்கள் கூட்டாக வளர்ந்து துடிக்க ஆரம்பித்தன.

இது ஒரு மருத்துவ சாதனை என அறிவியல் இதழ்கள் புகழாரம் சூட்டியுள்ளன. விரைவில், இதே போல இதயத்தை செய்து மருந்துகளை சோதிக்க இருப்பதாக ஹார்வர்டு விஞ்ஞானிகள் தெரிவித் துள்ளனர்.

- விடுதலை நாளேடு, 23.8.18

கருத்துகள் இல்லை :

கருத்துரையிடுக