செவ்வாய், 24 ஜூலை, 2018

பூமியை நெருங்கும் செவ்வாய்: விண்ணில் ஓர் அரிய நிகழ்வு



 


சென்னை, ஜூலை 22  பூமியின் வெளிப்புற கோள்களில் ஒன்றான, செவ்வாய் கோள், 15 ஆண்டு களுக்கு பின், பூமிக்கு மிக அருகே வருகிறது. இதை பார்க்க, பிர்லா கோளரங்கத்தில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இது குறித்து, தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மய் யத்தின் பொறுப்பு செயல் இயக் குனர், சவுந்தரராஜ பெருமாள் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

பூமியின் ஆறு வெளிப்புற கோள்களில் ஒன்றான செவ் வாயை, 26 மாதங்களுக்கு ஒரு முறை, பூமி கடந்து செல்லும்.அப்போது, செவ்வாய்க்கு நேரே உள்ள நீள்வட்ட பாதையில், பூமி இருக்கும்.

பூமியை விட, நீண்ட வட்ட பாதையில், செவ்வாய் சுழலும் என்பதால், இரண்டு கோள் களுக்கும் இடையிலான துரம், ஒவ்வொரு நேரமும் மாறுபடும்.இதன்படி, வரும், 27இல், செவ் வாய் மற்றும் பூமிக்கு இடையே, எதிர் அமைவு ஏற்படுகிறது.

இதில், வரும், 31இல், பூமி யின் அருகே, செவ்வாய் நெருங்கி வரும்.அப்போது, இரண்டு கோள்களுக்கும் இடையிலான துரம், 5.76 கோடி கிலோ மீட்டராக இருக்கும்.

வழக்கமாக, செவ்வாய் கோளுக்கும், பூமிக்கும் இடையிலான துரம், 38 கோடி கிலோ மீட்டராக இருக்கும்.

ஆனால், எப்போதாவது தான், மிகவும் அரிதாக. 5.5 கோடி கி.மீ., வரை செவ்வாய் நெருங் கும். இதற்கு முன், 2003, ஆகஸ்டு மாதம் 27இல், 5.5 கோடி கி.மீ., தூரத்தில், பூமியை செவ்வாய் நெருங்கி வந்தது. தற்போது, வரும், 31இல் வரவுள்ளது.

அப்போது, செவ்வாயின் தோற்ற அளவு, 24.3 கோண வினாடிகளாக இருக்கும். அத் துடன், செவ்வாய் சற்று பெரி தாகவும், ஒளியுடனும் காணப் படும். இந்த நிகழ்வு மீண்டும், 2035 செப்டம்பர் 15இல் தான் ஏற்படும். அதேபோல், பூமிக்கு நேரே, செவ்வாய் எதிரமைவது 2016, மே, 22இல் நிகழ்ந்தது. அப்போது, செவ்வாய், 7.6 கோடி கி.மீ., துரத்தில் இருந்தது. இந்த எதிரமைவு அடுத்து, 2020 அக்டோபர் 13இல் தான் நிகழும்.

எனவே, இந்த அரிய நிகழ்வை, சென்னை, பிர்லா கோளரங்கம், பெரியார் அறிவியல் தொழில்நுட்ப மய்யத்தில், வரும், 25ஆம் தேதி முதல், 31ஆம் தேதி வரை, மாலை 7 மணி  முதல், இரவு 9 மணி வரை, பொது மக்கள் பார்க்க, தொலை நோக்கியுடன் சிறப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

- விடுதலை நாளேடு, 22.7.18

கருத்துகள் இல்லை :

கருத்துரையிடுக