
'நாசா'வின் மூத்த ஆய்வாளரான டாக்டர் பாவ்னா லால், பல கோடி ஆண்டுகள் பழமையான மர்மம் ஒன்றை விடுவிக்க உதவியுள்ளார்.
அதாவது, பேரண்டம் உருவான போதே, தங்கம் தோன்றிவிட்டது. ஒரு புதிய ஆய்வில், அவரும் அவரது சகாக்களும் தங்கம் மற்றும் பிளாட்டினம் போன்ற கனமான தனிமங்கள், பூமி உருவாகும் முன்பே நிகழ்ந்த பண்டைய நிகழ்வுகள் நியூட்ரான் நட்சத்திரங்களின், கொடூரமாக மோதி இணைந்த போதே உருவானதைக் கண்டறிந்துள்ளனர்.
ஈர்ப்பு அலை ஆய்வகங்கள் மற்றும் விண்வெளி தொலைநோக்கிகளில் இருந்து கிடைத்த தரவுகளைப் பயன்படுத்தி 'லால் குழுவினர்' ஆய்வு செய்தனர். பேரண்டத்தில் நிகழ்ந்த கொடூர மோதல்கள், எப்படி தங்கம் போன்ற உலோகங்களை, விண்மீன் திரள் முழுவதும் சிதறடித்தன என்ற லாலின் குழு மறுசித்திரிப்பு செய்து காட்டியுள்ளது.
பல யுகங்களாக, இந்த நட்சத்திர குப்பைகள், வாயு மேகங்களுடன் கலந்து, இறுதியில் கோளாக இறுகின. அதன் பின், அரிய உலோகங்கள் நகைகள், மின்னணுவியல் பொருட்கள் மற்றும் நாணயங்களாக உருமாறியுள்ளன.